வார ராசிப்பலன்- - ஏப்ரல் 7 முதல் 13 வரை
பங்குனி 24 முதல் 30 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு
பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
சூரிய
|
சந்தி
|
செவ்
|
ராகு
|
புதன் சுக்கி
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
|
|
||
கேது குரு சனி
|
|
|
|
கிரக மாற்றம்
10-04-2019 குரு வக்ர ஆரம்பம் இரவு
10.08 மணிக்கு
12-04-2019 மீனத்தில் புதன் அதிகாலை
04.24 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம் 06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.
ரிஷபம் 08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.
மிதுனம் 10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.
கடகம் 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
10.04.2019 பங்குனி 27 ஆம் தேதி புதன்கிழமை
பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ
இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை
1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த
அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு
சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக
முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின்
ஆதரவு கிடைக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து
குடும்பத்தில் உள்ளவர்களையும் உடனிருப்பவர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர
பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து
விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான
வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். பணம் கொடுக்கல்-
வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும்.
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் அதிக கவனம் எடுத்து கொள்வது
நல்லது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 11, 12.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள்
ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும்,
வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி
சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும்
அனுகூலத்தை தரும் அமைப்பாகும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது
மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும்
முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில்
அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால்
குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில்
சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று
நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி
லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும்
ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும்
ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்களின்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் முருக வழிபாடு செய்வதும்
மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10, 13.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்
சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி
புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும்
ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்குப் பின் சாதகப்பலனை
அடைய முடியும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம்
உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய
வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான
பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத்
தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை
பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு
உதவிகள் கிடைக்கும். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டு வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 11, 12.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும்
திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல்
சனி, கேது சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்ககூடிய
அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில்
வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான
நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம்
நிறைவேறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு
நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்-
வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும்
சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில்
திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில்
சிறப்புடன் செயல்படுவார்கள். விஷ்ணு வழிபாட்டையும் லட்சுமி வழிபாட்டையும் செய்தால்
குடும்பத்தில சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9, 10, 13.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில்
நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால்
நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். உணவு
விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில்
செல்கின்ற போது நிதானம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள்
இருக்கும். 7-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து
உங்களது சிக்கல்கள் குறையும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்
என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில்
சாதகப் பலன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்-
வாங்கல் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு
சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை
ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள்
போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது
நல்லது. சிவாலயங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி
அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது,
7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடி, குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.
கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது
நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில்
சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில்
ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது
நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். எதிர்பார்க்கும்
உயர்வுகளும் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா
சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால்
வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பார்வதி தேவியை வணங்குவது, சனிக்குரிய
பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13.
சந்திராஷ்டமம் - 06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா
ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள்
நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில்
தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி
செய்ய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா
சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களின்
ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள்
மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று
கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி
லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். தங்கள் பணிகளை சிறப்பாக
செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில்
இருந்த மந்தநிலை நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கடன்களும்
சற்று குறையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை
பெற கடின உழைப்பு தேவை. துர்கையம்மனை வழிபட்டு வந்தால் துயரங்கள் நீங்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 7, 13.
சந்திராஷ்டமம் - 08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக
எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான
4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முடிந்தவரை முன்கோபத்தைக்
குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்தில்
உள்ளவர்களையும் நெருங்கியவர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் குடும்பத்தில்
ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன்
மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக
எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும்
உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம்
பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை
தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் எதிலும்
சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சனிபகவான் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9, 10.
சந்திராஷ்டமம் - 10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம்
1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட
தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சலை தரும்
அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது
நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை
தவிர்க்க முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கடன்கள் குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக
இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கொடுத்த வாக்கை காபாற்ற சற்று சிரமபட
வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல்
பயன்படுத்தி கொள்வது உத்தமம். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில்
சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது
உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில்
மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.
சந்திராஷ்டமம் - 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை
பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு
பரிபூரண வெற்றி கிடைக்கும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக நிலவிய மறைமுக
நெருக்கடிகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம்
உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள்
வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும்.
கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்தவரை பெரிய
தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன்
செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில்
சிறந்து விளங்குவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனி கவசங்கள் படிப்பது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள்
சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும்
கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சனி, கேது
சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைத்து பல்வேறு வகையில் ஏற்றங்களை
அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால்
பொருளாதார நிலை மேன்மையடையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்தக்கள்
வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும்
பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள்
வழியில் சுப செய்திகள் வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில்
பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்
உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும்
தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன்
செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறமுடியும். மாணவர்களுக்கு கல்வியில்
ஈடுபாடு அதிகரிக்கும். முருக வழிபாடு செய்வது சஷ்டி விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 13.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,
ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு
திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால்
முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி
இருக்கும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ
செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும்
ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும்
தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில்
கௌரவமான உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது
உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்து வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10.
No comments:
Post a Comment