வார ராசிப்பலன் - ஜுன் 30 முதல் ஜுலை 6 வரை
ஆனி 15 முதல் 21 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு
பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
சந்தி
|
ராகு சூரிய சுக்கி
|
|
திருக்கணித கிரக நிலை
|
புதன் செவ்
|
|
|
|
||
கேது
சனி (வ)
|
குரு(வ)
|
|
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம் 29-06-2019 மாலை 04.03 மணி
முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.
மிதனம் 01-07-2019 இரவு 08.55 மணி
முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை.
கடகம் 03-07-2019 இரவு 11.10 மணி
முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை.
சிம்மம் 06-07-2019
அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
01.07.2019 ஆனி 16 ஆம் தேதி திங்கட்கிழமை
சதுர்தசி திதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள்
கடக இலக்கினம். தேய்பிறை
04.07.2019 ஆனி 19 ஆம் தேதி வியாழக்கிழமை
துவிதியை திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள்
கடக இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை
1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி
மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான
3-ல் சூரியன், ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி
கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார
நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே
இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள்
விலகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில்
சாதகமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள்
வாங்கும் எண்ணம் நிறைவேறும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில்
நிதானத்துடன் இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில்
வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட
செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று
மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல
மதிப்பெண்களை பெற முடியும். கிருத்திகையன்று முருக கடவுளுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து
வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள்
ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம்
குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
சுக்கிரன் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதும்
சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம்
இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும்
என்ற எண்ணங்கள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால்
பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி
நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன்
செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலம்
உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் சிறந்த
முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் அனுகூலமான பலன்களை
அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து
விளங்குவார்கள். சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 30, 1,
4, 5.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன்
செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், ராகு,
2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு
முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி, கேது 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை
அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். உடல்
ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள்
தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை
தாமதத்திற்குப்பின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடனை பெறுவதில்
வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த
லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும்
அதிகரிக்க கூடும் என்பதால் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள்
விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற
பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3,
6.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும்
கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், ருணரோக ஸ்தானமான 6-ல் சனி,
கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள்.
ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள்
தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களை
அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள்
கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள்
பாராட்டப்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும்
நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப்
பெற முடியும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 30, 1,
4, 5.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை
தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு, சுக்கிரன்
சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும்.
இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில்
எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு
தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு
வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-
மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து குடும்பத் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள்
வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக
நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகள்
செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவதாலும், சனிப்ரீதியாக
விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 30, 1,
2, 3, 6.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும்
மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக
ஏற்றத்தை தரும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு மனை வாங்க
கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களின்
ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும்.
கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர
வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி
லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில்
வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும்.
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும்.
எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும்
உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம்
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3,
4, 5.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும்
கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன்
சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும் 10-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களின்
உதவியால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான
சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக
செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய
மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும்
அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். எடுக்கும்
முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள்
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை
பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில்
சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். மாணவர்களுக்கு கல்வியில்
மந்தமான நிலையே இருக்கும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் இல்லத்தில் மங்கள செய்திகள்
தேடி வரும்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5,
6.
சந்திராஷ்டமம் - 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில்
உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு
8-ல் சூரியன், ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும்
முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும்
தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில
தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம்
ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நெருங்கியவர்களே
உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்
போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன்
செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன்
செயல்படமுடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பிரதோஷ காலத்தில்
சிவ வழிபாடு செய்தால் வாழ்வில் வலமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 30, 1,
6.
சந்திராஷ்டமம் - 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம்
1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும்,
தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் சூரியன்,
ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள்
உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக
இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற
வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில்
உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில்
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை
தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும்
தொழிலாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும்
கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்
கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது
நல்லது. முருக வழிபாடு செய்வது, கிருத்திகை, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 30, 1,
2, 3.
சந்திராஷ்டமம் - 03-07-2019 இரவு 11.10 மணி முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும்
அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து வலமான
பலன்களை பெறுவீர்கள். தாராள பணவரவு ஏற்பட்டு பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக
குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன்
பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள்
எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன்
மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை
சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த
லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டார
தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும்
உயர்வுகள் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று
மகிழ்ச்சி அடைவார்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுத்த காரியத்தில்
வெற்றி கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3,
4, 5.
சந்திராஷ்டமம் - 06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள்
சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும்
கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில்
சஞ்சரிப்பதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மைகளை பெறுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் ஏற்படும். பயணங்களால் பெரிய மனிதர்களின் நட்பும்
அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களால்
அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன்
பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால்
ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்
உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும்.
மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். சிவ வழிபாடும்
அம்மன் வழிபாடும் செய்தால் மேன்மையான பலன்கள் கிட்டும்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,
ரேவதி.
மற்றவர்களின் சுக துக்கங்களையும்
தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு
4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது
நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான
பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சூரியன்
4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். திருமண சுபகாரியங்கள்
கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடந்த கால
கடன் பிரச்சினைகள் எல்லாம் சற்று குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது
உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் கொடுத்த கடனை பெறுவதில்
சற்று தாமதம் உண்டாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம்
ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம்
கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள்
பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை
தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 30, 1,
6.
No comments:
Post a Comment