Thursday, July 4, 2019

வார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை


வார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை 
ஆனி 22 முதல் 28 வரை  

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




சூரிய ராகு சுக்கி

திருக்கணித கிரக நிலை

செவ் புதன்
 
சந்தி
கேது சனி (வ)
குரு (வ)
 


கிரக மாற்றம்
08-07-2019  புதன் வக்ர ஆரம்பம் அதிகாலை 04.36 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம்    06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.
கன்னி     08-07-2019 அதிகாலை 01.45 மணி முதல் 10-07-2019 அதிகாலை 04.45 மணி வரை.
துலாம்    10-07-2019 அதிகாலை 04.45 மணி முதல் 12-07-2019 காலை 09.55 மணி வரை.
விருச்சிகம்     12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
08.07.2019 ஆனி 23 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

11.07.2019 ஆனி 26 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தனவரவு தாராளமாக இருக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -    8, 9, 10, 11.
சந்திராஷ்டமம் - 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலனை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -    10, 11, 12, 13.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் உண்டாகும் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சனி பகவானை வழிபட்டால் சங்கடங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் -    7, 12, 13.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். ஆறுமுக கடவுளை வழிபட்டால் ஆனந்தமான செய்திகள் தேடி வரும்.
வெற்றி தரும் நாட்கள் -    8, 9.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவு தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான நிலை ஏற்படும்.  கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். கிடைக்க வேண்டிய லாபங்களும் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். பணவரவு சிறப்பான நிலையிருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குரு பகவானை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -    7, 10, 11.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன் பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்களும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். அரசு வழியிலும் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -    8, 9, 12, 13.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் அனுகூலத்தை தரும் அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் சுமைகள் குறையும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். சிவ வழிபாடும் அம்பிகை வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -    7, 10, 11.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும் என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவிஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது சிறப்பு. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படலாம். மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. விநாயகரை வழிபட்டு வந்தால் காரிய தடைகள் விலகும், வெற்றிகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -    7, 8, 9, 12, 13.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ பெருமானையும் முருக பெருமானையும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -    8, 9, 10, 11.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். குரு 11-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பனவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். அசையும் அசையா சொத்துக்களாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானையும் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நன்மைகள் பல அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -    10, 11, 12, 13.
சந்திராஷ்டமம் - -     06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் நற்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -    7, 12, 13.
சந்திராஷ்டமம் -      08-07-2019 அதிகாலை 01.45 மணி முதல் 10-07-2019 அதிகாலை 04.45 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 5-ல் புதன் 9-ல் குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தாராள தனவரவுகள் கிடைத்து கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் ஓரளவு குறையும். சூரியன், ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே சுமுகமான உறவிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும் மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -    7, 8, 9.
சந்திராஷ்டமம் - 10-07-2019 அதிகாலை 04.45 மணி முதல் 12-07-2019 காலை 09.55 மணி வரை.


No comments: