Wednesday, August 28, 2019

2019 - செப்டம்பர் மாத ராசிப்பலன்


2019 - செப்டம்பர் மாத ராசிப்பலன்


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




ராகு


திருக்கணித கிரக நிலை



சூரிய செவ் சுக்கி புதன்

கேது
சனி  (வ)
குரு



கிரக   மாற்றம்
10-09-2019 கன்னியில் சுக்கிரன் அதிகாலை 01.41 மணிக்கு
11-09-2019 கன்னியில் புதன் காலை 04.59 மணிக்கு
17-09-2019 கன்னியில் சூரியன் பகல் 01.03 மணிக்கு
18-09-2019 சனி வக்ர நிவர்த்தி பகல் 01.47 மணிக்கு
25-09-2019 கன்னியில் செவ்வாய் காலை 06.33 மணிக்கு
29-09-2019 துலாத்தில் புதன் பகல் 12.55 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக சாதகமான பலனை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலனை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன் பிரச்சினைகளும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும்.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் மனம் மகிழும் இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.
சந்திராஷ்டமம் - 04-09-2019 இரவு 10.15 மணி முதல் 07-09-2019 அதிகாலை 04.55 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாதம் 4, 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்களும் சற்று குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, நெருங்கியவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவர்.
பரிகாரம் - பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். சனி பகவான் வழிபாடு செய்வதும் உத்தமம்.
சந்திராஷ்டமம் - 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வரும் 11-ஆம் தேதிக்கு மேல் புதன், சுக்கிரன் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தாராள தனவரவுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அமோகமாக இருக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.
பரிகாரம் -  சனிப்ரீதியாக விநாயகருக்கு அருகம் புல் மாலையும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் சாற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறைந்து வாழ்வில் மேன்மையான பலன்களை அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - 09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் தன ஸ்தானமான 2-ல் மாத தொடக்கத்தில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். இம்மாதம் 17-ஆம் தேதி முதல் மாத கோளான சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேன்மை படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். கடன் பிரச்சினைகள் குறையும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமத நிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
பரிகாரம் -  சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - 12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் சற்று முன்கோபத்தை குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த பணத்தை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுளில் பணிபுரிய விரும்புவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் அதிக எடுத்து கொள்வது உத்தமம்.
பரிகாரம் -  சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் குரு விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வது என்றாலும் சற்று நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஏற்படும் வாக்கு வாதங்களால் குடும்ப ஒற்றுமை சற்று குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.
பரிகாரம் -  செவ்வாய்கிழமை விரதமிருந்து ஆறுமுக கடவுளை வணங்குவதாலும், சிவ பெருமானை வணங்குவதாலும் உண்டாகும் துயரங்கள் குறையும்.
சந்திராஷ்டமம் - 17-09-2019 அதிகாலை 04.20 மணி முதல் 19-09-2019 இரவு 07.28 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன் புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். வெளி வட்டார நட்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் -  வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து மகா லட்சுமி தேவியை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 19-09-2019 இரவு 07.28 மணி முதல் 21-09-2019 இரவு 11.40 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே ராசியதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் இம்மாதத்தில் 10, 11-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நற்பலன் உண்டாகும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம் -  தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் காரிய சித்தி உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 21-09-2019 இரவு 11.40 மணி முதல் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது, 12-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, வீண் விரயங்கள் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இம்மாத பிற்பாதியில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் மாத பிற்பாதியில் ஓரளவு குறைந்து நிம்மதி உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மேலதிகாரிகளிடம் பேசும் போது மட்டும் சற்று நிதானமாக நடந்து கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும்.
பரிகாரம் -  வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் குடும்பத்தில் செல்வ நிலை உயரும்.
சந்திராஷ்டமம் - 24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 11-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவால் சுபிட்சமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். இம்மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் சாதகப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை  இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க சற்று கால தாமதமாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
பரிகாரம் -  செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம் -  26-09-2019 காலை 06.40 மணி முதல் 28-09-2019 காலை 06.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறப்பான அமைப்பாகும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் யாவும் குறையும். குரு பகவான் சாதகமற்று இருப்பதால் பண விஷயத்தில் மட்டும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு வெளிநாடு வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.
பரிகாரம் -  சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம் - 31-08-2019 இரவு 07.20 மணி முதல் 02-09-2019 இரவு 07.25 மணி வரை மற்றும் 28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு 9-ல் சஞ்சரிப்பதாலும் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கையும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகப்பலன் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் - துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும், சர்ப கிரக வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம் - 02-09-2019 இரவு 07.25 மணி முதல் 04-09-2019 இரவு 10.15 மணி வரை மற்றும் 30-09-2019 அதிகாலை 05.45 மணி முதல் 02-10-2019 காலை 07.10 மணி வரை.


சுப முகூர்த்த நாட்கள்

01.09.2019 ஆவணி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

02.09.2019 ஆவணி 16 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

05.09.2019 ஆவணி 19 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

08.09.2019 ஆவணி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

11.09.2019 ஆவணி 25 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

12.09.2019 ஆவணி 26 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

13.09.2019 ஆவணி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

16.09.2019 ஆவணி 30 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

30.09.2019 புரட்டாசி 13 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

No comments: