வார ராசிப்பலன்- - ஆகஸ்ட் 4 முதல் 10 வரை
ஆடி 19 முதல் 25 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு
பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
|
ராகு
|
|
திருக்கணித கிரக நிலை
|
சூரிய
சுக்கி
செவ்
புதன்
|
|
|
சந்தி
|
||
கேது சனி (வ)
|
குரு (வ)
|
|
|
கிரக மாற்றம்
09-08-2019 சிம்மத்தில் செவ்வாய்
அதிகாலை 04.47 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம் 02-08-2019
காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.
கன்னி 04-08-2019
காலை 09.30 மணி முதல் 06-08-2019 பகல் 11.00 மணி வரை.
துலாம் 06-08-2019 பகல் 11.00
மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.
விருச்சிகம் 08-08-2019
மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
04.08.2019 ஆடி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள்
கன்னி இலக்கினம். வளர்பிறை
07.08.2019 ஆடி 22 ஆம் தேதி புதன்கிழமை
சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி
இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை
1-ஆம் பாதம்.
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும்
கூர்ந்து கவன¤க்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான
3-ல் ராகு சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான
அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி,
பொருளாதார ரீதியாக மேன்மை ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில்
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும்
அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண்
அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களின்
வருகை மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை
தடையின்றிப் பெற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்-
வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சிறப்பான லாபத்தினை பெற முடியும். மாணவர்கள்
கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். சஷ்டியன்று விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால்
பொன்னான தகவல்கள் வந்து சேரும்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5,
6, 7.
சந்திராஷ்டமம் - 08-08-2019
மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள்
ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு
தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், புதன்
சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண
வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும்.
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் நீண்ட நாட்களாக இருந்த
தடைகள் விலகி சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால்
குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும்
என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில்
திறம்பட செயல் படலாம். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள்
யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில்
தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும்
கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி
விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடும் அம்மன் வழிபாடும்
மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 9, 10.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை,
இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில்
ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், பண விஷயத்தில்
சிக்கனத்துடன் செயல்படுவதும் நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும்
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும்
சமாளிக்ககூடிய பலம் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது
நல்லது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் வீண் வாக்குவாதங்களை
தவிர்ப்பது உத்தமம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும்.
உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை
நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். மாணவர்கள்
கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.
துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9,
10.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில்
உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக
ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதால்
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால்
எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும்
நிறைந்திருக்கும். தாராள தனவரவால் கடன் பிரச்சினைகள் குறையும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
கணவன்- மனைவி இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்
உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள்
தோன்றி மறையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால்
ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு
சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில்
திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற
வேலை வாய்ப்பு அமையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு அரசு
வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ பெருமானை வணங்குவதும் முருக வழிபாடு
செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5,
6.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து
செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும்
ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன்,
புதன் சேர்க்கைப் பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன்
இருப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொள்வது சிறப்பு. ஆரோக்கிய ரீதியாகவும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.
முடிந்த வரை உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பதும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதும்,
தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள்
ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும்.
சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் வீண் பொழுது
போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமை குருபகவான்
வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7,
8.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி
உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும்
கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று
லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சி
அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாராமாக இவ்வாரம் இருக்கும்.
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதொடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து
முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில்
நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள்
வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.
கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பணி புரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் லாபகரமான
பலன்களை அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிக்கிழமை சனிபகவானை
வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5,
8, 9, 10
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு
தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள்
ராசியதிபதி சுக்கிரன், புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால்
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக
குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்
தாராள தனவரவு ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார நிலையும் மேன்மையடையும்.
கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை
நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில்
மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்
உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின்
விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும்
தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று
பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். லட்சுமி தேவி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில்
சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7,
8.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும்
எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில்
ஒற்றுமை குறைவு ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகளில்
நெருக்கடிகள் நிலவினாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல்
போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில்
சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி இடையே
வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடை தாமதங்களுக்கு பின் அனுகூலம் ஏற்படும்.
அசையும், அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில்
சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும்
அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள்
தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன்
செயல்பட கடின உழைப்பு தேவை. ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
சனி பகவானை வழிபடுவது சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5,
8, 9, 10.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம்
1-ஆம் பாதம்.
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும்
தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல்
கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, 8-ல் சூரியன், சுக்கிரன்
சஞ்சரிப்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் சற்று
கவனத்துடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில்
கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது
உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.
பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்றாலும் வீண் செலவுகளை குறைத்துக்
கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய
போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு
வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம்
எதையும் சமாளிக்க முடியும். மாணவர்கள் தேவையற்றப் பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது.
சிவ வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5,
6, 7.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை
உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு, குடும்பத்தில்
சுபிட்சமான நிலை, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக
இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன்,
செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்
கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும்
தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடன்
பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் லாபகரமான பலன்களை
அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். மாணவர்கள்
எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். சிவ வழிபாடும்
முருக வழிபாடும் செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7,
8, 9, 10.
சந்திராஷ்டமம் - 02-08-2019
காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள்
சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும்,
சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி
நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி 11-ல் சஞ்சரிப்பதாலும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும்
உங்களுக்குள்ள சிக்கல்கள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தடைப்பட்ட
சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும்.
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு
ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த
கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்
கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை
அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில்
சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை
எடுத்து விடுவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால்
வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9,
10.
சந்திராஷ்டமம் - 04-08-2019
காலை 09.30 மணி முதல் 06-08-2019 பகல் 11.00 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,
ரேவதி .
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன்
உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, குரு பார்வை
ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிர்பார்த்த
உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதையும் சமாளிக்கும்
ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும்
சற்று குறையும். பொன் பொருள் சேரும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் இருக்காது.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பணம் சம்பந்தமான
கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்றவும் முடியும். தொழில்,
வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான ஊதியம் பெருகும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும்
கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் உழைப்பிற்கேற்ற பலனை பெறுவார்கள். சிவ வழிபாட்டையும்,
லட்சுமி தேவி வழிபாட்டையும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5.
சந்திராஷ்டமம் - 06-08-2019
பகல் 11.00 மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.
No comments:
Post a Comment