Thursday, September 12, 2019

வார ராசிப்பலன் - செப்டம்பர் 15 முதல் 21 வரை


வார ராசிப்பலன் - செப்டம்பர் 15 முதல் 21 வரை 
ஆவணி 29 முதல் புரட்டாசி 4 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சந்தி


ராகு

திருக்கணிதகிரக நிலை


 
சூரிய
செவ்
கேது
சனி (வ)
குரு
 
புதன்
சுக்கி

கிரக மாற்றம்
17-09-2019 கன்னியில் சூரியன் பகல் 01.03 மணிக்கு
18-09-2019 சனி வக்ர நிவர்த்தி பகல் 01.47 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்      14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.
மேஷம்     17-09-2019 அதிகாலை 04.20 மணி முதல் 19-09-2019 பகல் 03.11 மணி வரை.
ரிஷபம்     19-09-2019 பகல் 03.11 மணி முதல் 21-09-2019 இரவு 11.40 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
16.09.2019 ஆவணி 30 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும், வரும் 17-ஆம் தேதி முதல் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலகி வலமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 17, 18, 19.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை  அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய வாராமாக இவ்வாரம் இருக்கும். பண வரவிற்கு பஞ்சமிருக்காது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்க முடியும். சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -- 15, 16, 20, 21.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றினாலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை நிலவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் குரு 6-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சற்றே தாமதம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அம்மன் வழிபாடு செய்வது, சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 15, 16, 17, 18.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தனகாரகன் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதும் சகல சௌபாக்கியங்களும் அடையும் யோகத்தை உங்களுக்கு தரும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இதுவரை 2-ல் சஞ்சரித்த சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிலவிய சிறு சிறு பிரச்சினைகள் விலகி மனஅமைதி ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மன மகிழ்ச்சி ஏற்படும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும், உயர்வுகளையும் பெற முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை, சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். முருக வழிபாடு செய்வது, கிருத்திகை மற்றும் சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது நன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -- 17, 18, 19, 20, 21.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தொழில் வியாபாரத்தில் அனுகூலங்கள் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -- 19, 20, 21.
சந்திராஷ்டமம் - 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை..

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகள் சுமாராக இருக்கும். புதன், சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாட்டையும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் --15, 16.
சந்திராஷ்டமம் - 17-09-2019 அதிகாலை 04.20 மணி முதல் 19-09-2019 பகல் 03.11 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, குரு பகவான் தன ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் 3-ல் சனி, கேது, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களும் அனுலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் குடும்பத்தில் செல்வ நிலை உயரும்.
வெற்றி தரும் நாட்கள் -- 15, 16, 17, 18.
சந்திராஷ்டமம் - 19-09-2019 பகல் 03.11 மணி முதல் 21-09-2019 இரவு 11.40 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்த வித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், வரும் 17-ஆம் தேதி முதல் 11-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் உங்களது செல்வம் செல்வாக்கு மேலோங்கும் நிலை, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் அமைப்பு உண்டாகும். எதிர்பாராத தனவரவு ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை உண்டானாலும் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நவகிரகங்களில் சனிக்கும் ராகுவிற்கும் அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 19, 20, 21.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கும் பிரச்சினைகள் குறையும். எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முடிந்தவரை வீண் பேச்சுகளை தவிர்ப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. துர்கையம்மன் வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -- 19, 20, 21.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வத்துடன் படிப்பார்கள். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 15, 16.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சியில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். விஷ்ணு வழிபாடும் மகாலட்சுமி வழிபாடும் செய்தால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 19.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் செவ்வாய், 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் அனுகூலமாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  15, 16, 20, 21.

No comments: