Saturday, September 28, 2019

2019 அக்டோபர் மாத ராசிப்பலன்


2019 அக்டோபர் மாத ராசிப்பலன்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





ராகு

திருக்கணித கிரக நிலை


 

சனி கேது
குரு
  புதன்
சூரிய சுக்கி செவ்

கிரக   மாற்றம்
4-10-2019 துலாத்தில் சுக்கிரன் அதிகாலை 05.14 மணிக்கு
18-10-2019 துலாத்தில் சூரியன் அதிகாலை 01.03 மணிக்கு
23-10-2019 விருச்சிகத்தில் புதன் இரவு 11.12 மணிக்கு
28-10-2019 விருச்சிகத்தில் சுக்கிரன் காலை 08.32 மணிக்கு
31-10-2019 புதன் வக்ர ஆரம்பம் இரவு 09.11 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ராகு 3-ல், செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
சந்திராஷ்டமம் -- 02-10-2019 காலை 07.10 மணி முதல் 04-10-2019 பகல் 12.20 மணி வரை மற்றும் 29-10-2019 மாலை 05.35 மணி முதல் 31-10-2019 இரவு 09.30 மணி வரை.
பரிகாரம் சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடு செய்வது, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது, சனிக்கவசம் மற்றும் ஹனுமன் துதிகளை படிப்பது மிகவும் நல்லது.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றலும் வலிமையும் உண்டாகும். இதுவரை உங்களுக்கு இருந்த சிறு சிறு பிரச்சினைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலமான பலன் கிட்டும். குடும்பத்தில் சிறு சிறு  பிரச்சினைகள் இருந்தாலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் நன்றாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கடின முயற்சி மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.
சந்திராஷ்டமம்-- 04-10-2019 பகல் 12.20 மணி முதல் 06-10-2019 இரவு 09.35 மணி வரை மற்றும் 31-10-2019 இரவு 09.30 மணி முதல் 03-11-2019 அதிகாலை 05.25 மணி வரை.
பரிகாரம் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன் பஞ்சம ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்களுடைய செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல் போன்றவை ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு.
சந்திராஷ்டமம்-- 06-10-2019 இரவு 09.35 மணி முதல் 09-10-2019 காலை 09.40 மணி வரை.
பரிகாரம் திங்கட்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வணங்கி வழிபடுவது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லாமல் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்--- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடந்த கால தேக்கங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் முழுமையாக மறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
சந்திராஷ்டமம்-- 09-10-2019 காலை 09.40 மணி முதல் 11-10-2019 இரவு 10.25 மணி வரை.
பரிகாரம் புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு வழிபாடு மேற்கொண்டால் காரிய தடைகள் விலகி வெற்றி கிட்டும்.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும்.  எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளகூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். புதிய வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். திருமண சுப காரியங்களில் சற்று தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அவர்கள் மூலம் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்ப்பது சிறப்பு.
சந்திராஷ்டமம்-- 11-10-2019 இரவு 10.25 மணி முதல் 14-10-2019 காலை 10.20 மணி வரை.
பரிகாரம் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம். சஷ்டி விரதம் இருப்பது நல்லது.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 4-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். குரு பகவான் சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கொடுத்த கடனை பெறுவதில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும்.
சந்திராஷ்டமம்-- 14-10-2019 காலை 10.20 மணி முதல் 16-10-2019 இரவு 08.45 மணி வரை.
பரிகாரம் பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியில் புதன், 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலவும் நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து லாபகரமான பலன்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். அதிக முதலீடு கொண்ட செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் -- 16-10-2019 இரவு 08.45 மணி முதல் 19-10-2019 அதிகாலை 05.25 மணி வரை.
பரிகாரம் பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மேற்கொள்வதும், முருக வழிபாடு செய்வதும் மேன்மையான பலன்களை அளிக்கும்.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக அமைந்து உங்களது பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். தொழில் வியாபார ரீதியாக லாபங்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிறப்பான லாபம் கிட்டும். தாராள தனவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சனி, கேது 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் -- 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.
பரிகாரம் துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாயும், 10,11-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் கடந்த கால சோதனைகள் குறையும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கொடுத்த கடனை பெறுவதில் சிறு சிறு இடையூறுகளை சந்திக்க நேரிடும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்-- 21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.
பரிகாரம் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் உண்டாகும்.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ராகு 6-ல், குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 10-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சிறப்பான பணவரவு, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. விட்டு கொடுத்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறலாம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். தெய்வீக ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெற்று குடும்பத்துடன் சேர்ந்து வாழும் யோகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.
சந்திராஷ்டமம் -- 23-10-2019 மாலை 03.15 மணி முதல் 25-10-2019 மாலை 04.20 மணி வரை.
பரிகாரம் ஆனை முக கடவுளையும், ஆறுமுக கடவுளையும் வணங்கி வழிபட்டால் எல்லையில்லா தொல்லைகள் கூட இல்லாமல் போய் விடும்.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்படும். புதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பாகும். இம்மாதத்தில் சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிட்டும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது.
சந்திராஷ்டமம் -- 25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.
பரிகாரம் வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சமும், சகல செல்வங்களும் வந்து சேரும்.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும்.
சந்திராஷ்டமம்-- 27-10-2019 மாலை 04.30 மணி முதல் 29-10-2019 மாலை 05.35 மணி வரை.
பரிகாரம் விஷ்ணு வழிபாடு மேற்கொள்வதும், முருக வழிபாடு செய்வதும் மேன்மையான பலன்களை அளிக்கும்.

சுப முகூர்த்த நாட்கள்

24.10.2019 ஐப்பசி 07 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

30.10.2019 ஐப்பசி 13 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை


No comments: