Thursday, September 19, 2019

வார ராசிப்பலன் - செப்டம்பர் 22 முதல் 28 வரை


வார ராசிப்பலன் - செப்டம்பர் 22 முதல் 28 வரை 
புரட்டாசி 5 முதல் 11 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




ராகு சந்தி

திருக்கணித கிரக நிலை


 
செவ்
சனி கேது
குரு
 
சூரிய புதன் சுக்கி

கிரக மாற்றம்
25-09-2019 கன்னியில் செவ்வாய் காலை 06.33 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்     21-09-2019 இரவு 11.40 மணி முதல் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை.
கடகம்       24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை.
சிம்மம்      26-09-2019 காலை 06.40 மணி முதல் 28-09-2019 காலை 06.20 மணி வரை.
கன்னி       28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை.

இவ்வாரத்தில் சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ராகு 3-ல், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் வரும் 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களை தரும் அமைப்பாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் வியாபார ரீதியாகவும் லாபகரமான பலன்கள் உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த வாய்ப்புகளை அடைய முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  22, 23, 28.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். சிறப்பான பணவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உடலில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் சிறு தடைக்குப் பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  24, 25.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். சனி, கேது 7-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றியை அடையலாம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிவ வழிபாடும், குரு பகவான் வழிபாடும் செய்தால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 26, 27.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சூரியன் 3-ல், குரு 5-ல் சஞ்சரிப்பதும் வரும் 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் நற்பலன்கள் உங்களை தேடி வரும். தாராள தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும் யோகம் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 28.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மையை தரும் அமைப்பாகும். சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  22, 23, 26, 27.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதை கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, நெருங்கியவர்களால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களும், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  22, 23, 24, 25, 28.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சூரியன் 12-ல் இருப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஏற்படும் தேவையற்ற வாக்கு வாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். சிவ வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  24, 25, 26, 27.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை பெறுவீர்கள். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். சனி 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. சிறப்பான பணவரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் ஜென்ம ராசியில் குரு இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானை வழிபடுவதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  26, 27, 28.
சந்திராஷ்டமம் -   21-09-2019 இரவு 11.40 மணி முதல் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் நெருக்கடிகள் நிலவினாலும் 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறையும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக செயல்படுவது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். அம்மன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகளை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  22, 23, 28.
சந்திராஷ்டமம் -   24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முருக கடவுளையும், சனி பகவானையும் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  22, 23, 24, 25.
சந்திராஷ்டமம் -   26-09-2019 காலை 06.40 மணி முதல் 28-09-2019 காலை 06.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாகச் செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துகளால் சிறு சிறு செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். சூரியன் 8-ல் இருப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். சிவ வழிபாட்டையும், மகாலட்சுமி வழிபாட்டையும் மேற்கொண்டால் மங்களங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  24, 25, 26, 27.
சந்திராஷ்டமம் -   28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாராமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மேன்மை எற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் இருப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  26, 27, 28.



No comments: