2019 நவம்பர் மாத ராசிப்பலன்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in
Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில்
தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
|
ராகு
|
|
திருக்கணித கிரக நிலை
19.10.2019
|
|
|
|
|
||
சனி கேது
|
குரு, சுக்கி
புதன் (வ)
|
சூரிய
|
செவ்
|
கிரக மாற்றம்
5-11-2019 தனுசில் குரு அதிகாலை
05.18
7-11-2019 துலாத்தில் புதன்(வ)
மாலை 03.56
10-11-2019 துலாத்தில் செவ்வாய்
பகல் 02.24
17-11-2019 விருச்சிகத்தில்
சூரியன் அதிகாலை 00.51
20-11-2019 புதன் வக்ர நிவர்த்தி
பகல் 12.41
21-11-2019 தனுசில் சுக்கிரன்
பகல் 12.23
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, மாத முற்பாதியில் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பான
அமைப்பாகும். வரும் 5-ஆம் தேதி முதல் குரு பகவான் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால்
பொருளாதார நிலை நன்றாக இருப்பது மட்டுமில்லாமல் தொழில், வியாபார ரீதியாக மேன்மை,
புதிய வாய்ப்புகளை அடையும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக
எதிர்ப்புகள் யாவும் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து
வேறுபாடுகள் மறைந்து சுமூகமான உறவு உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய
நினைக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள்
அமையும். உடல் நிலையில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று
அக்கறை செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.
குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில்
அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால்
தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீடு, வாகனம் வாங்கும்
எண்ணமும் நிறைவேறும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக
இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்கள்
கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள்.
பரிகாரம் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து மகாலட்சுமி
தேவிக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்த்தில் சுபிட்சம்
உண்டாகும். செல்வம் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம் -- 26-11-2019 அதிகாலை 03.45 மணி முதல் 28-11-2019 காலை 07.35 மணி
வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே,
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும் மாத
முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் வரும் 10-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல்
சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். பணம் பலவழிகளில் உங்களை
தேடி வரும். தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். எடுக்கும்
முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன்
புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் கடன்
உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடனை
பெறுவதிலும் எந்த தடையும் இருக்காது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் ஒன்று
சேரும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் திருப்திகரமாக இருப்பதால் குடும்ப தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும்.
கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒருவரை ஒருவர்
அனுசரித்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில்
முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை இருந்தாலும் அன்றாட
பணிகளை செய்ய முடியும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள்
தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.
பரிகாரம் சனிப்ரீதியாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை
மாலையும், விநாயகருக்கு அருகம்புல் மாலையும் சாற்றி வழிபட்டால் எல்லையில்லா
தொல்லைகள் இல்லாமல் போகும்.
சந்திராஷ்டமம் -- 31-10-2019 இரவு 09.30 மணி முதல் 03-11-2019 அதிகாலை 05.25 மணி
வரை மற்றும் 28-11-2019 காலை 07.35 மணி முதல் 30-11-2019 பகல் 02.30 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
இம்மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் வரும் 5-ஆம் தேதி முதல் குரு
பகவான் 7-ல் சஞ்சரிக்க இருப்பதும் பொருளாதார ரீதியாக மேன்மைகளை தரும் அமைப்பாகும்.
குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில்
இருக்கும் தடைகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்
கொள்வது நல்லது. முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள்
குறையும். தாராள தனவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடி
மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை
அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும்.
பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று
விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம்
சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களை
அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில ஆதாயங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள்
தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற
நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்தால் படிப்பில்
முன்னேறலாம்.
பரிகாரம் சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயக
பெருமானை வணங்கி வழிபட்டு வந்தால் தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும். முருக
வழிபாடு செய்வதும் சிறந்தது.
சந்திராஷ்டமம் -- 03-11-2019 அதிகாலை 05.25 மணி முதல் 05-11-2019 மாலை 04.45 மணி
வரை மற்றும் 30-11-2019 பகல் 02.30 மணி முதல் 03-12-2019 அதிகாலை 00.55 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில்
செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும்.
எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். திருமண
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு
பிரச்சினைகள் நிலவினாலும் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை
குறையாது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும்.
உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பும்
கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உங்கள் ராசிக்கு
4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள்
உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை
தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை
ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து லாபகரமான பலன்களை அடைவார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும்
உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து
செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன்
விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள்.
பரிகாரம் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து ஆறுமுக
பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் மேன்மையான பலன்களை
அடையலாம்.
சந்திராஷ்டமம் -- 05-11-2019 மாலை 04.45 மணி முதல் 08-11-2019 அதிகாலை 05.30 மணி
வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே,
உங்கள் ராசியதிபதி சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும் இம்மாதம் 10-ஆம்
தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை
தரும் அமைப்பாகும். தற்போது உள்ள சின்ன சின்ன பிரச்சினைகள் கூட குறைந்து சகல
விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். தனகாரகன் குரு பகவான் வரும் 5-ஆம் தேதி
முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்த தடைகள் எல்லாம்
விலகி வலமான பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில்
வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி
கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல்
உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி
எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து
செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள், உடன் பிறந்தவர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
தாராள தனவரவால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள்
உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க
முடியும். பூமி மனை வாங்கும் எண்ணங்களும் நிறைவேறும். மாணவர்கள் முயன்று படித்து
தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
பரிகாரம் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில்
துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை
செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
சந்திராஷ்டமம் -- 08-11-2019 அதிகாலை 05.30 மணி முதல் 10-11-2019 மாலை 05.20 மணி
வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே,
உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் நீங்கள்
முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது, உடனிருப்பவர்களை
அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இம்மாத
பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து
அதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சனி, கேது 4-ல் இருப்பதால் இருப்பதை
அனுபவிக்க தடை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மன அமைதி
குறையலாம் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல்
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான
முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான
நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டாகும்.
வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள்
எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.
பரிகாரம் புதன் கிழமைகளில் விஷ்ணு ஆலயங்களுக்குச்
சென்று விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும்
உண்டாகும்.
சந்திராஷ்டமம் -- 10-11-2019 மாலை 05.20 மணி முதல் 13-11-2019 அதிகாலை 03.10 மணி
வரை.
துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த
பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்ழ்டழழழ்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள்
சேரும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும்
எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். ஜென்ம ராசியில் சூரியன்
சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது
நல்லது. கணவன்- மனைவி இடையே அனுசரித்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திரர்கள் வழியில் சுபசெய்திகள்
கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்து
செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில்
இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். நல்ல
வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணங்களால் வருமானம்
பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு
விளையாட்டு போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும்.
பரிகாரம் கிருத்திகை, சஷ்டியன்று விரதமிருந்து முருக
பெருமானை வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம். துர்கை வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம் -- 13-11-2019 அதிகாலை 03.10 மணி முதல் 15-11-2019 பகல் 11.03 மணி
வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி
நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 5-ஆம் தேதி
முதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கடந்த கால சோதனைகள்
எல்லாம் படிப்படியாக குறையும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். சனி 2-ல்
இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது
நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலன்
கிட்டும். அசையும் அசையா சொத்துக்களால் லாபம் உண்டாகும். கடன்கள் குறையும்.
முடிந்தவரை வீண் செலவுகளை தவிர்ப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். எடுக்கும்
காரியங்களில் சிறிய தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியான
பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி
கொண்டால் எதிர்பார்க்கும் லாபங்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று
சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூரில்
பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஆர்வம்
குறைந்து காணப்படும். வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது.
பரிகாரம் பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ
பெருமானை வழிபட்டு வந்தால் வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும். முருக வழிபாடு
செய்வதும் உத்தமம்.
சந்திராஷ்டமம் -- 15-11-2019 பகல் 11.03 மணி முதல் 17-11-2019 மாலை 05.05 மணி வரை.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும் சூரியன் மாத முற்பாதியில் லாப
ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள்
உண்டாகும். எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள் என்றாலும் அதிக
முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகச் சிறப்பு.
கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதும், கொடுக்கல்- வாங்கலில்
சிந்தித்து செயல்படுவதும் நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும்
எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் சனி,
கேது, குரு சஞ்சரிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகளும், வரவுக்கு மீறிய வீண் செலவுகளும்
ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, பண விஷயத்தில் சிக்கனமாக
இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை
தவிர்க்கலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் உள்ளவர்களுடன்
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள்
ஏற்படும் என்பதால் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலைபளு கூடினாலும் உடன் பணிபுரிபவர்களின்
ஒத்துழைப்பு மகிழச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும்
பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
பரிகாரம் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம்
ஏற்றி வழிபடுவதாலும், சனிக்கவசங்கள் படிப்பதாலும், ஊனமுற்றவர்களுக்கு உதவுவதாலும்
வாழ்வில் சிறப்பான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம் -- 17-11-2019 மாலை 05.05 மணி முதல் 19-11-2019 இரவு 09.20 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம்
பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும் இம்மாதத்தில் மாத கோளான
சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம்
நடக்கும். தாராள தனவரவு, தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடையும் யோகம்
உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளி தொடர்புகளால் புதிய
வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை ஓரளவு
சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. மங்களகரமான
சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை
உயரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும்
வாய்ப்பு அமையும். சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்ககூடிய
யோகமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்-
வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில்
ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகள்
நண்பர்களாக மாறுவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள்
பாராட்டப்படும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும்
ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள்.
பரிகாரம் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து
தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் குரு
அருள் பரிபூரணமாக கிட்டும். விநாயகர் வழிபாடு செய்வதும் சிறந்தது.
சந்திராஷ்டமம் -- 19-11-2019 இரவு 09.20 மணி முதல் 22-11-2019 அதிகாலை 00.05 மணி
வரை.
கும்பம் அவிட்டம்3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே,
உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும்,
வரும் 5-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் சகல
சௌபாக்கியங்களும் உங்களுக்கு தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்
சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி
நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள்
சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்கள்
படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு புதிய
வீடு, வண்டி, வாகனம் வாங்ககூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. உங்களுக்குள்ள வம்பு,
வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும்.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும்.
கூட்டாளிகளும் தொழிலாளர்களும் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு புதிய
பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு
உயர்வடைவார்கள்.
பரிகாரம் சிவ பெருமானையும் முருக கடவுளையும் வழிபட்டு
வந்தால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும். பௌர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும்
நல்லது.
சந்திராஷ்டமம் -- 22-11-2019 அதிகாலை 00.05 மணி முதல் 24-11-2019 அதிகாலை 01.45
மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 7, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் சூரியன் 8-ல்
சஞ்சரிப்பதாலும் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய வீண்
செலவுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். நெருங்கியவர்களால் நிம்மதி
குறைவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண்
வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவு
தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது
நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண்
விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை.
மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில்
வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் லாபம் குறையாது. கூட்டாளிகளின்
ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாக கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக சிறு சிறு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம்.
வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தேவையற்ற
பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன்
செயல்படுவது உத்தமம்.
பரிகாரம் சிவ வழிபாடு செய்வதும், துர்கையம்மனுக்கு
அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவதும் மிகவும் நல்லது. குடும்பத்தில் மங்கள
நிகழ்வுகள் நடைபெறும்.
சந்திராஷ்டமம் -- 24-11-2019 அதிகாலை 01.45 மணி முதல் 26-11-2019 அதிகாலை 03.45
மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்
01.11.2019 ஐப்பசி 15 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல்
07.00 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை
03.11.2019 ஐப்பசி 17 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி
முதல் 07.00 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை
10.11.2019 ஐப்பசி 24 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.30 மணி
முதல் 06.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை
11.11.2019 ஐப்பசி 25 ஆம் தேதி
திங்கட்கிழமை சதுர்தசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல்
06.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை
15.11.2019 ஐப்பசி 29 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை திருதியை திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி
முதல் 06.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை
22.11.2019 கார்த்திகை 06 ஆம்
தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி
முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை
28.11.2019 கார்த்திகை 12 ஆம்
தேதி வியாழக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி
முதல் 09.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை
29.11.2019 கார்த்திகை 13 ஆம்
தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி
முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
No comments:
Post a Comment