Thursday, October 24, 2019

வார ராசிப்பலன் -- அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை


வார ராசிப்பலன் -- அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை 
ஐப்பசி 10 முதல் 16 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





ராகு

திருக்கணித கிரக நிலை


 

சனி கேது
குரு
புதன்
 சூரிய சுக்கி
செவ்
சந்தி

கிரக மாற்றம்
28-10-2019 விருச்சிகத்தில் சுக்கிரன் காலை 08.32 மணிக்கு
31-10-2019 புதன் வக்ர ஆரம்பம் இரவு 09.11 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி      25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.
துலாம்      27-10-2019 மாலை 04.30 மணி முதல் 29-10-2019 மாலை 05.35 மணி வரை.
விருச்சிகம்  29-10-2019 மாலை 05.35 மணி முதல் 31-10-2019 இரவு 09.30 மணி வரை.
தனுசு       31-10-2019 இரவு 09.30 மணி முதல் 03-11-2019 அதிகாலை 05.25 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
30.10.2019 ஐப்பசி 13 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். 7-ல் சூரியன், கேது இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விஷ்ணு பகவானையும் லட்சுமி தேவியையும் வழிபட்டு வந்தால சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  27, 28,
சந்திராஷ்டமம் -   29-10-2019 மாலை 05.35 மணி முதல் 31-10-2019 இரவு 09.30 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும், வரும் 28-ஆம் தேதி முதல் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  28, 29, 30, 31.
சந்திராஷ்டமம் -   31-10-2019 இரவு 09.30 மணி முதல் 03-11-2019 அதிகாலை 05.25 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். சனி, கேது 7-ல் இருப்பதால் முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களையும், மற்றவர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி உங்களது தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். கந்த சஷ்டி விரதமிருந்து சூரசம்ஹார நாளில் முருக பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  30, 31, 1, 2.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
நல்ல கற்பனை திறனும், சிறப்பான ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் வலமான பலன்களை பெறுவீர்கள். வரும் 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சிவ வழிபாடும் அம்பிகை வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  27, 1, 2.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளை செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 3-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதும், வரும் 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். விநாயக பெருமானை வழிபடுவது மேலும் கந்த சஷ்டி விரத நாட்களில் முருக பெருமானை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  27, 28, 29.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி சனிக்கவசங்கள் படித்து வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  30, 31.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றத்தை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது சிறப்பு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் பிரச்சினைகள் விலகி நிம்மதி ஏற்படும். கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  28, 29, 1, 2.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்திய சாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. சனி, கேது 2-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும் பேச்சில் நிதானத்துடன் இருப்பது சிறப்பு. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். மகாலட்சுமி தேவியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  30, 31.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சே-ரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடைக்குப் பின் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  27, 28, 29, 1, 2.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், வரும் 28-ஆம் தேதி முதல் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். தற்போது இருக்கும் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்ற சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் யாவும் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம். சதுர்த்தி விரதம், சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  28, 29, 30, 31.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதும், வரும் 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். கந்த சஷ்டி நாட்களில் முருக பெருமானை வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
வெற்றி தரும் நாட்கள் -  30, 31, 1, 2. 
சந்திராஷ்டமம் -   25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள், எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களால் ஏமாற்றம் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய பொருட் தேக்கம் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. அம்மன் வழிபாடு செய்வது நல்லது மேலும் சூரசம்ஹார நாளில் முருக பெருமானை வழிபட்டால் தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2.
சந்திராஷ்டமம் -   27-10-2019 மாலை 04.30 மணி முதல் 29-10-2019 மாலை 05.35 மணி வரை.  

No comments: