Thursday, October 31, 2019

வார ராசிப்பலன் -- நவம்பர் 3 முதல் 9 வரை 2019


வார ராசிப்பலன் -- நவம்பர் 3 முதல் 9 வரை 2019 
ஐப்பசி 17 முதல் 23 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




ராகு

திருக்கணித கிரக நிலை


  சந்தி

சனி கேது

குரு சுக்கி
புதன் (வ)

 சூரிய
செவ்

     
கிரக மாற்றம்
05-11-2019 தனுசு குரு அதிகாலை 05.17 மணிக்கு
07-11-2019 துலா புதன் வக்ரம் பகல் 03.55 மணிக்கு.

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்             03-11-2019 அதிகாலை 05.25 மணி முதல் 05-11-2019 மாலை 04.45 மணி வரை.
கும்பம்      05-11-2019 மாலை 04.45 மணி முதல் 08-11-2019 அதிகாலை 05.30 மணி வரை.
மீனம்       08-11-2019 அதிகாலை 05.30 மணி முதல் 10-11-2019 மாலை 05.20 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
03.11.2019 ஐப்பசி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் திருக்கணிதப்படி வரும் 5-ஆம் தேதி முதல் குரு 9-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். சூரியன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பொன், பொருள் சேரும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். லட்சுமி வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 5, 6, 7.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும், மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உங்கள் ராசிக்கு 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  6, 7, 8, 9.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். குடும்ப ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்தால் அனுகூலங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். திருக்கணிதப்படி வரும் 5-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் மறைந்து தாராள தனவரவு ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். பார்வதி தேவியை வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  8, 9.
சந்திராஷ்டமம் -   03-11-2019 அதிகாலை 05.25 மணி முதல் 05-11-2019 மாலை 04.45 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் சுக்கிரன், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி  கிட்டும். பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சிவ வழிபாட்டையும், அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4.  
சந்திராஷ்டமம் -   05-11-2019 மாலை 04.45 மணி முதல் 08-11-2019 அதிகாலை 05.30 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 3-ல், சுக்கிரன் 4-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். இதுநாள் வரை 4-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 5-ஆம் தேதி முதல் 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் தாராள தனவரவுகள், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். விநாயகர் வழிபாடும், முருக வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 5, 6, 7.
சந்திராஷ்டமம் -   08-11-2019 அதிகாலை 05.30 மணி முதல் 10-11-2019 மாலை 05.20 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதை கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம்-. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடனிருப்பவர்களின் ஆதரவுடன் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். பிரதோஷ தினத்தன்று சிவ பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 7, 8, 9.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதும், சனி, கேது 3-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் குறைந்து அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிடைத்தாலும் லாபங்கள் தடைப்படாது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிவ வழிபாடும், மகா லட்சுமி வழிபாடும் செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  8, 9.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் அகம்பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறையும். திருக்கணிதப்படி வரும் 5-ஆம் தேதி முதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டி, பொறாமைகள் குறைந்து தொழில் மேன்மையடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். துர்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 5.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களது செயல்கள் அனைத்திலும் பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு பதவியுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 7.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். முடிந்த வரை விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவிற்கு சாதகமாக இருக்கும். பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் திறம்பட செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 8, 9.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அனுகூலத்தை தரும் அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். திருக்கணிதப்படி வரும் 5-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். முருக வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 7.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்றாலும் 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு நிம்மதி குறைவுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 8, 9.



No comments: