Thursday, November 28, 2019

வார ராசிப்பலன் -- டிசம்பர் 1 முதல் 7 வரை


வார ராசிப்பலன் -- டிசம்பர்  1 முதல் 7 வரை 
கார்த்திகை 15 முதல் 21 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





ராகு

திருக்கணித கிரக நிலை


  சந்தி

கேது சனி குரு சுக்கி
சூரிய
  செவ்
புதன்

     
கிரக மாற்றம்
5-12-2019 விருச்சிகத்தில் புதன் காலை 10.34 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்             30-11-2019 பகல் 02.30 மணி முதல் 03-12-2019 அதிகாலை 00.55 மணி வரை.
கும்பம்      03-12-2019 அதிகாலை 00.55 மணி முதல் 05-12-2019 பகல் 01.20 மணி வரை.
மீனம்       05-12-2019 பகல் 01.20 மணி முதல் 08-12-2019 அதிகாலை 01.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
01.12.2019 கார்த்திகை 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02.12.2019 கார்த்திகை 16 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

06.12.2019 கார்த்திகை 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு, சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2, 3, 4.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்தவித தடையையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு கிடைக்கும். சூரியன் 7-ல், குரு, சனி 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை முடிந்த வரை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சினைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 5, 6, 7.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வேலை வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். விநாயகர் வழிபாடும் பார்வதி தேவி வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 7.
சந்திராஷ்டமம் -   30-11-2019 பகல் 02.30 மணி முதல் 03-12-2019 அதிகாலை 00.55 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றத்தை தருவது மட்டுமின்றி தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 6-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். துர்கை வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2.
சந்திராஷ்டமம் -   03-12-2019 அதிகாலை 00.55 மணி முதல் 05-12-2019 பகல் 01.20 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு, சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை அடையும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி ஆர்வத்துடன் படிப்பார்கள். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2, 3, 4.
சந்திராஷ்டமம் -   05-12-2019 பகல் 01.20 மணி முதல் 08-12-2019 அதிகாலை 01.30 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 2-ல் சஞ்சரிப்பதும், சூரியன் 3-ல், சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். மாணவர்களின் திறமைகள் பாராட்டப்படும். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 5, 6, 7.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு ª-ஜன்ம ராசியில் புதன், 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 7.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தாராள தனவரவுகள் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொண்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உடனிருப்பவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 5.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் செவ்வாய், புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறைந்து எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களும் ஓரளவு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலைபளு குறையும். மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2, 6, 7.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி--- குரு, சுக்கிரன், கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை எளிதில் அடைவீர்கள். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஓற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமை சாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், புதன், 10-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடி, தேவையற்ற அலைச்சல் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் அவர்களால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்றாலும் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்து வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2, 6, 7.

No comments: