வார ராசிப்பலன் - ஜனவரி 12 முதல் 18 வரை
மார்கழி 27 முதல் தை 4 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in
Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில்
தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
|
ராகு
|
சுக்கி
|
திருக்கணித கிரக நிலை
|
சந்தி
|
|
|
|
||
சனி சூரிய குரு கேது புதன்
|
செவ்
|
|
|
கிரக மாற்றம்
13-01-2020 மகரத்தில் புதன் பகல்
11.35 மணிக்கு
15-01-2020 மகரத்தில் சூரியன்
அதிகாலை 02.08 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம்
11-01-2020 காலை 07.52 மணி முதல்
13-01-2020 காலை 09.55 மணி வரை.
சிம்மம்
13-01-2020 காலை 09.55 மணி முதல்
15-01-2020 காலை 11.28 மணி வரை.
கன்னி
15-01-2020 காலை 11.28 மணி முதல்
17-01-2020 பகல் 01.49 மணி வரை.
துலாம்
17-01-2020 பகல் 01.49 மணி முதல்
19-01-2020 மாலை 05.47 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
12.01.2020 மார்கழி 27 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல்
10.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு
மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு
லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 9, 10-ல் சூரியன், புதன்
சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை
அடைவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் நிலை உண்டாகும். கணவன்-- மனைவி
இடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.
குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.
அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று
கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அதிக லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரத்தில்
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளால் ஒரளவுக்கு அனுகூலம்
ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை
பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல
மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது
உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 18.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம்
குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் குரு, சனி, கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக
இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் வீண் செலவுகளை குறைத்துக்
கொள்வது உத்தமம். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும்.
முடிந்தவரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை
தவிர்க்கலாம். சிறு சிறு மருத்துவ
செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம்
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து
செயல்படுவது உத்தமம். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே
வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து
நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர்,
வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள்
அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள்
தேவையற்ற பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. துர்கையம்மன் வழிபாடும் சனி பகவான்
வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 17.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன்
செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல்
செவ்வாய், 7-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக
ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் மறைமுக
எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர்
வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது
மேற்கொள்ளலாம். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். உற்றார்
உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இவ்வாரத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால்
கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு
நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன்
பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும். கொடுக்கல்-
வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி
கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் சகல
நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 18.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
கற்பனை திறனும் நல்ல ஞாபக
சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சனி, கேது
சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள்.
உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவில்
இருந்த தடைகள் விலகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு 6-ல்
சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில்
ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்
கிடைக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது
நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள்
ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த
தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வதன்
மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். கடன்கள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்களின்
திறமைகள் பாராட்டப்படுவதுடன் அவர்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.
மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.
மகாலட்சுமியை வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 16, 17.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம்
பழகுவதை தவிர்த்து விடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு குரு
பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், 7-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான
அமைப்பு என்பதால் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்களுடைய
செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில்
தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள்
நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை
மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற
பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த
இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று
லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள்
நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயக பெருமானை
வழிபட்டால் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.
வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 17, 18.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக
இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி
ராசி நேயர்களே, செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண
வெற்றி கிடைக்கும் என்றாலும் 4-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க
சிறு சிறு இடையூறுகள் ஏற்படும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப்
பெறுவதால் பொருளாதாரா நிலை உயரும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில்
சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம்.
உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில்,
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட
முடியும். கூட்டாளிகள் தேவையற்ற வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் ஓரளவுக்கு
ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில்
ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது, சனிக்கவசம்
படிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 12, 16, 17.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான
பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பஞ்சம
ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக
உங்களுக்கு அனுகூலத்தை தரும் அமைப்பாகும். எல்லா வகையிலும் லாபகரமான பலன்களை
அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின்றி
செய்து முடிக்க முடியும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின்
வருகை மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை
ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம்
செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை
அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு
வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள்
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15, 18.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில்
உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 2-ல் குரு, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 15-ஆம் தேதி முதல்
சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் கடந்த கால
பிரச்சினைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியும், மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள்
உண்டாகும். தாராள தனவரவுகளால் கடன் பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவி வீண்
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது,
உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த
கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். செய்யும்
தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும்.
கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த
முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின்
பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். சனி பகவானை
வழிபடுவது, ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும்
வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம
ராசியில் சனி, குரு, கேது, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன்
இருப்பது நல்லது. நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். குடும்பத்தினரிடமும்
உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது உத்தமம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச்
செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி
மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும்
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான
முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில்
சற்று கவனம் தேவை. கொடுத்த கடனை வசூலிப்பதில் சிறு சிறு பிரச்சினைகளை சந்திக்க
நேரிடும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று
எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க
கூடும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத
இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள்
கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால்
மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 18.
சந்திராஷ்டமம் - 11-01-2020 காலை 07.52 மணி முதல் 13-01-2020 காலை 09.55 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள்
இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும்
எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள்
உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில்
சற்று மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை ஏற்படலாம். பண வரவுகளில் சிறுசிறு இடையூறுகள்
ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். குரு,
சனி 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண
சுபமுயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில்
வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றமான நிலை
உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது.
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து
செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்-
வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு
அதிகரிக்கும். நவகிரகங்களில் குரு பகவானுக்கும் சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து
வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 12, 17, 18.
சந்திராஷ்டமம் - 13-01-2020 காலை 09.55 மணி முதல் 15-01-2020 காலை 11.28 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக
கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் குரு,
சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம்
இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு
வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை
ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த
வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த
மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க
வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட
செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள்
அமையும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும்
உதவிகள் கிடைக்கும். கல்வி தரமும் உயரும். ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு நெய்
தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14.
சந்திராஷ்டமம் - 15-01-2020 காலை 11.28 மணி முதல் 17-01-2020 பகல் 01.49 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
மற்றவர்களின் சுக துக்கங்களை
தன்னுடையதாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல்
ராகு, 10-ல் குரு, சனி சஞ்சரிப்பது சிறு சிறு நெருக்கடிகளை தரும் அமைப்பு
என்றாலும் சூரியன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின்
உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் வலமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சற்று
ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பதன் மூலம் இருக்கும்
பிரச்சினைகளை சமாளிக்க முடியும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்
உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில்
சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக
செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும்
அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால்
லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். மாணவர்கள் உடல் நல பாதிப்புகளால் படிப்பில்
கவனம் தெலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். அம்மன் வழிபாடும் சனி பகவான் வழிபாடும்
செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16.
சந்திராஷ்டமம் - 17-01-2020 பகல் 01.49 மணி முதல் 19-01-2020 மாலை 05.47 மணி வரை.
No comments:
Post a Comment