வார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை
தை 5 முதல் 11 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in
Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில்
தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
|
ராகு
|
சுக்கி
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
புதன் சூரிய
|
|
||
சனி குரு கேது
|
செவ்
|
சந்தி
|
|
கிரக மாற்றம்
24-01-2020 மகரத்தில் சனி காலை
09.57 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம்
17-01-2020 பகல் 01.49 மணி முதல்
19-01-2020 மாலை 05.47 மணி வரை.
விருச்சிகம்
19-01-2020 மாலை 05.47 மணி முதல்
21-01-2020 இரவு 11.43 மணி வரை.
தனுசு
21-01-2020 இரவு 11.43 மணி முதல்
24-01-2020 காலை 07.39 மணி வரை.
மகரம்
24-01-2020 காலை 07.39 மணி முதல்
26-01-2020 மாலை 05.39 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
20.01.2020 தை 06 ஆம் தேதி திங்கட்கிழமை
ஏகாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப
இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை
1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும்
கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன்
சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும்.
தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக
தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த
மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். எடுக்கும்
முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மதிப்பும்
மரியாதையும் மேலோங்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான
சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சற்றே
சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில்
ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த
மதிப்பெண்கள் கிட்டும். விநாயகர் வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 19, 24.
சந்திராஷ்டமம் - 19-01-2020
மாலை 05.47 மணி முதல் 21-01-2020 இரவு 11.43 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள்
ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும்,
வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து
நெருக்கடிகள் குறையும். 7-ல் செவ்வாய், 8-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள்,
கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக
கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது உத்தமம். கணவன்-
மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானமாக
இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களையும்,
உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம்
விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விநாயகர் வழிபாடு
ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21.
சந்திராஷ்டமம் - 21-01-2020
இரவு 11.43 மணி முதல் 24-01-2020 காலை 07.39 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார்
போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு
ருண ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை
அடைவீர்கள். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள்
வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு
வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். சூரியன் 8-ல்
இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் நற்பலன்கள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில்
நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை
அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு
படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். ஏகாதசி நாளில் விஷ்ணு வழிபாடு
செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.
சந்திராஷ்டமம் - 24-01-2020
காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும்
திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல்
சனி, கேது சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும்
வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை
அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில்
சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொருளாதார
நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத
உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். சூரியன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில்
கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை
தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து
செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை
பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதால்
தாராள தனவரவு உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில்
நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு
இருப்பதாலும் 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த
பலன்களை அடைவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில்
சுபிட்சம் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால்
உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைப்பதால்
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக
இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில்
சாதகப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்-
வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதார நிலை சிறப்பாக
இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை
பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற
முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில்
மேன்மையுடன் செயல்படுவார்கள். முருக வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 19, 24.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி
அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய்,
5-ல் புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம்
உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத
உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 4-ல் இருப்பதால் பண விஷயத்தில்
சிக்கனமாக செயல்படுவதும், முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதும் நல்லது. கணவன்-
மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும்
நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும்
உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில்
சரளமான நிலை இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த
லாபத்தை அடையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை
அடைய முடியும். விஷ்ணு வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன்
செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் வலுவாக
சஞ்சரிப்பதும் 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில்
ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பார்த்த
லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். எதிலும்
தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும்
மகிழ்ச்சியும் நிலவும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள்
வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும்
தடையின்றி வசூலிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு
அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு
பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் இருப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 22, 23.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக
எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு,
3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி,
நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்
கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில்
ஓற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில்
அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய
வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில்
எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். பெரிய மனிதர்களின்
ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும்
கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க ஆசிரியர்களின்
ஒத்துழைப்பு கிட்டும். அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம்
1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த
தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால்
நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, உடல் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினை, வீண் செலவுகள்
உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல்
இருப்பது உத்தமம். பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். கணவன்- மனைவி
விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்
உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். பண வரவுகளில்
ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த கடனை வசூலிப்பதில்
தடை தாமதங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க
நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளையும்,
தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான
நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத
சூழ்நிலை ஏற்படும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 19, 22, 23.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை
பொருட் படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன்,
2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில்
கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக
இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும்.
தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்-
மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள்
ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து
கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும்
மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 24.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள்
சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும்
கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால்
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பொருளாதார ரீதியாக
மேன்மைகள், மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சரளமாக
இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். பொன்
பொருள் சேரும். நவீனகரமான பொருட் சேர்க்கையும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த
தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன்
செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான
பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான
பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து
நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில்
திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை
பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வதும் ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வதும்
சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,
ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு
திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன்,
புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள்.
எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் நல்லது நடக்கும் அமைப்பு உண்டாகும். இதுவரை
இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும்.
பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வீட்டு தேவைகள்
பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். சுபகாரிய
முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது
உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன் நல்ல லாபங்களும் உண்டாகும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள்
கிடைக்கும், உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம்
எடுத்து கொள்வது உத்தமம். மகாலட்சுமி தேவி வழிபாட்டை மேற்கொண்டால் சகல சௌபாக்கியங்கள்
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.
சந்திராஷ்டமம் - 17-01-2020
பகல் 01.49 மணி முதல் 19-01-2020 மாலை 05.47 மணி வரை.
No comments:
Post a Comment