Thursday, January 23, 2020

விருச்சிக ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


விருச்சிக ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் எடுக்கும் முயற்சிகளில் அயராது பாடுபடக்கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலே எதிலும் துனிவுடன் செயல்படும் குணம் கொண்ட உங்களுக்கு இதுநாள் வரை ஏழரைச்சனி நடைபெற்றதால் பல்வேறு வகையில் நெருக்கடிகளை சந்தித்து வந்தீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளதால் கடந்த ஏழரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஏழரைச்சனி முழுமையாக முடிவடைகிறது. இதனால் இதுவரை உங்கள் வாழ்வில் இருந்து வந்த நெருக்கடிகள் பிரச்சினைகள் அனைத்தும் விலகி தொட்ட தெல்லாம் பொன்னாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் தடையின்றி பூர்த்தியாகும். எதிர்பாராத தன வரவுகளும் ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் படிப்டியாக விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். உடல் ஆரோக்கியம் மேன்மை அடைவதால் மருத்துவ செலவுகள் குறையும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறி மன நிறைவை உண்டாக்கும். சிறப்பான குழந்தை பாக்கியமும் அமையும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை ஆட்களால் சிறப்பான ஆதாயங்கள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த முடியும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பொன் பொருள் சேரும். வீடு மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
       சனி 3-ல் சஞ்சரித்து அற்புதமான பலன்களை அள்ளித்தரும் இக்காலங்களில் குருபகவானும் வரும் 20-11-2020 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், 13-04-2022 முதல் 22-04-2023 வரை 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். இக்காலங்களில் மேலும் மகிழ்ச்சியான நிகழ்வுகள் குடும்பத்தில் நடந்து மகிழ்ச்சி ஏற்படும். 
வரும் 23-09-2020 முடிய கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதும், அதனை தொடர்ந்து வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம் 
உடல் நிலை மிக அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மருத்துவ செலவுகள் மறைந்து புதுப் பொலிவுடன் காட்சி அளிப்பீர்கள். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் அளவிற்கு சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் தாராள தன வரவுகளால் எல்லா தேவைகளும் பூர்த்தியாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவு சிறப்பாக அமையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். சிறப்பான புத்திர பாக்கியத்தை பெறுவர். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்ராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று ஏற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். கடன்கள் யாவும் குறையும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் மறைந்து முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய பொற்காலமாக அமையும். வெளியூர் வெளிநாடு மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அரசு வழியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் சேர்ந்து உதவியாக இருப்பார்கள்.
உத்தியோகம்
தடைபட்ட உயர்வுகள் கிடைக்கப் பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். உங்கள் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி கடலில் நீந்துவீர்கள். அதிகாரிகளின் ஆதரவுகளும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளும் வேலை பளுவை குறைத்துக் கொள்ள உதவும். எதிர்பார்த்த இடமாற்றங்கள்  கிடைத்து குடும்பத்துடன் இணையும் அமைப்பு, மன நிம்மதி ஏற்படும். செய்யும் பணிக்கேற்றபடி பாராட்டுதல்களும் கிடைக்கும். பெயர், புகழை உயர்த்திக் கொள்ள முடியும்.
அரசியல்
உங்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் எளிதில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளை சிறப்பாக செய்து முடித்து ஏற்றங்கள் உண்டாகும். மறைமுக வருவாய் பெருகும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பெயர் புகழுக்கு பஞ்சம் இருக்காது. பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனை தடையின்றிப் பெற முடியும். பணவரவுகளில் இருந்த தேக்கம் முற்றிலும் விலகும். புதிய வழிமுறைகளைக் கையாண்டு நல்ல விளைச்சலை பெருக்க முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளை வாங்குவீர்கள். கடன்கள் யாவும் பைசலாகும். பங்காளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
கலைஞர்கள்
உங்களுக்கு இருந்த தடைகள் எல்லாம் விலகி எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைத்து உங்கள் கனவுகள் நிறைவேறும். புதிய பட வாய்ப்புகள் தேடி வந்து குவியும். பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். நினைத்தவரை கைபிடிக்கும் யோகம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பிரிந்த உறவுகள் ஒன்று கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தடைப்பட்ட புத்திர பாக்கியத்தை பெற்று மன மகிழ்ச்சியை அடைவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படக் கூடிய காலமாகும். பல சாதனைகள் செய்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாடு சென்று பயிலும் வாய்ப்பு உண்டாகும். பேச்சு போட்டி கட்டுரை போட்டிகளில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
உங்கள் ராசிக்கு சனி 3-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் தன காரகன் குரு சஞ்சரிப்பதும்  அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் எளிதில் பூர்த்தியாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சேமிப்பு பெருகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைய பெற்று எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் அற்புதநிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவீர்கள். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளையும், இடமாற்றங்களையும் பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நற்பலன்கள் ஏற்படுவதில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை உண்டாகும். ஜென்ம ராசிக்கு கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டு லாபத்தினைப் பெற முடியும். பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது, உக்ர தெய்வங்களை வழிபடுவது மிகவும் உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான அனுகூலப்பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கடன்கள் குறையும். 20-11-2020 முடிய குரு ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் எளிதில் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப் பெற்று அதன் மூலம் பொருளாதார உயர்வினையும் பெறுவீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது, விநாயகரை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனிபகவான் ஜென்ம ராசிக்கு 3-ல் சந்திரன் நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் உயர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையா சொத்து வகையில் அனுகூலங்கள் ஏற்படும். 3-ல் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிட்டும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது வீண் பிரச்சினைகளை குறைக்கும். தட்சிணாமுர்த்தியை வழிபடுவது, அஷ்டலட்சுமியை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
உங்கள் ராசிக்கு சனி 3-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஒரளவுக்கு சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 4-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உத்தியோஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தைப் பெற்று விடுவீர்கள். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுப காரியங்கள் சிறு தடைகளுக்குப் பின் நிறைவேறும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். அசையா சொத்துக்களால் சுப செலவுகள் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவது, துர்க்கையம்மனை தரிசிப்பது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து சென்றால் தொழிலில் ஏற்படும் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். குரு பகவான் 3, 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் உங்கள் ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் மனநிறைவுடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகள் அனுசரித்து சென்றால் ஏற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, சிவனை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.  கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ராகு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தன வரவு ஏற்படும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். அசையும் அசையா சொத்துகளை வாங்க முடியும். 5-ல் சஞ்சரிக்கும் குரு சில காலம் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையா சொத்துக்களால் சிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு சிறு தடைக்கு பின்பு நல்லது நடக்கும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபார செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது, விநாயகரை தரிசிப்பது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும் குரு 5-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் தாராளமாக இருக்கும். கடன்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். பொன், பொருள் சேரும். எல்லா வகையிலும் மேன்மையானப் பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் குதூகலமும் இருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி மன மகிழ்ச்சி ஏற்படும். உற்றார், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                   நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,         கிழமை - செவ்வாய், வியாழன்
கல் - பவளம்,                              திசை - தெற்கு                           தெய்வம் - முருகன்

No comments: