Monday, January 20, 2020

மிதுனம் ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


மிதுனம் ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு 8, 9-க்கும் அதிபதியான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிக்க உள்ளதால் அஷ்டமச் சனி தொடங்கிறது. இதனால் தேக ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், உடல் நிலையில் சோர்வு, மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்த வரை பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தையும் எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டியிருக்கும். பண விஷயங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் போகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். தொழில், வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டு அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களை செய்யும் போது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். அஷ்டமச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதலை செய்ய மாட்டார்.
சனி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள இக்காலத்தில் ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் வரும் 20-11-2020 வரையும், 9-ஆம் வீட்டில் 20-11-2021 முதல் 13-04-2022 வரையும் சஞ்சாரம் செய்கின்ற காலத்தில் எதிர்பாராத தனசேர்க்கைகள் ஏற்பட்டு குடும்பத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். நெருங்கியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் ஓரளவுக்கு லாபம் அமையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலமானப் பலனை அடையலாம்.
வரும் 23-09-2020 வரை ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சர்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் 23-09-2020 முதல் 12-04-2022 முடியவும், 12-04-2022 முதல் 30-10-2023 முடிய ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்த வித நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் 
உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். மனைவி, பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உண்டாக கூடிய பிரச்சினைகளால் மன நிம்மதியற்ற நிலை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் உடல்நிலை சோர்வடையும்.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே ஒற்றமை குறையும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டு குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். கடன்கள் அதிகரிக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் மங்களகரமான சுபகாரியங்கள் தாமதம் ஆகும். புத்திரர்கள் உங்கள் பேச்சை மதிக்காமல் நடப்பதால் வீண் மன சஞ்சலங்கள் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையில் உள்ளவர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-- வாங்கல் சுமாரான லாபத்தை தரும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழபறி நிலை இருக்கும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். நிறைய போட்டி பொறாமைகள் நிலவுவதால் லாபம் குறைந்து அபிவிருத்தி தடைப்படும். கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். புதிய முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே லாபத்தினைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் நடந்து கொண்டால் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். பணியில் கவனக்குறைவுடன் செயல்பட்டு அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பாராத இட மாற்றங்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்காததால் வேலைபளு அதிகரிக்கும்.
அரசியல்
எதிர்பார்க்கும் பெரிய பதவிகள் கிடைக்காவிட்டாலும் பெயர், புகழுக்கு பங்கம் ஏற்படாது. பண வருவாய் சுமாராக இருக்கும். உடனிருப்பவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராகத்தான் இருக்கும். பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பங்காளிகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானம் தேவை.
கலைஞர்கள்
தொழிலில் நிறைய போட்டிகள் உண்டாவதால் வர வேண்டிய வாய்ப்புகள் குறையும். பண விஷயத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். ஆடம்பர செலவுகளால் கடன்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
பெண்கள்
உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கணவன்--- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதார நிலையில் பற்றாகுறைகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு வீண் செலவுகளையும், பிரச்சினைகளையும் உண்டாக்குவார்கள். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் கடன்கள் வாங்க வேண்டி இருக்கும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்வது உத்தமம்.
மாணவ- மாணவியர்
கல்வியில் மந்தநிலை உண்டாகும். உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளையும் பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற பலனை ஏற்படுத்தும் என்பதால் உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தன காரகன் குரு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீடு மனை, வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். பழைய கடன்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் சிறு சிறு நெருக்கடிகள் இருந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பான நிலையில் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆண்டு கோளான குரு பகவான் அதிசாரமாக 8-லும் வக்ர நிலையிலும் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது சிறப்பு. சர்ப்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்க விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகமான பலன் உண்டாகும். தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபடவும்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்வது சிறப்பு. குரு பகவான் 20-11-2020 முடிய 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் நன்றாக இருக்கும். சர்ப்பகிரகமான கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்தவித நெருக்கடிகளையும் சமாளிக்க முடியும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனிபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் திருவோன நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிக்க இருப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். உடல்நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகள் குறைய உணவு விஷயத்தில் கவனம் எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன நிம்மதி குறையும். உத்தியோகத்தில் சக நண்பர்களை அனுசரித்து சென்றால் எற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். சனி பகவான் வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெற்றாலும் சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகி ஒரளவுக்கு அனுகூலப்பலன்களை உண்டாக்கும். சர்ப்ப கிரகமான கேது 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்றே சாதக நிலை ஏற்படும். பல்வேறு பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் நல்லது. குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் சிறுசிறு மன கவலைகள் செலவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தேவையற்ற செலவுகளை குறைத்துக் சிக்கனமாக செயல்பட்டால் சேமிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவார்கள். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
சனிபகவான் திருவோண நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதும், உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பதும் நல்லது. அஷ்டமச்சனியால் சிறுசிறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் சர்ப்ப கிரகமான கேது 6-ல் சஞ்சரிப்பதும், 20-11-2021 முதல் குரு 9-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதிர்பாராத தன வரவுகள் கிடைத்து மன மகிழ்ச்சியை உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் அமையும். புத்திர வழிகளில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். கணவன்- மனைவி இருவரும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் சோர்வு, மந்த நிலை எற்படும் என்றாலும் ஆண்டு கோளான குரு 13-04-2022 முடிய பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள், மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிட்டும். செல்வம், செல்வாக்கு உயரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி அதிசாரமாக பாக்கிய ஸ்தானமான 9-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபத்தை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை உண்டாக்கும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். வேலையாட்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும்.  புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் ஏற்படும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் தான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும், விநாயகரை வழிபடுவதும் நல்லது.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சர்ப்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் சற்றே குறையும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனை பெற முடியும். பணவரவுகளில் இருந்த தடைகள் படிப்படியாக விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறு தடைக்கு பின்பு கைகூடும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் கவனமாக செயல்பட்டால் லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத ஊதிய உயர்வுகள் கிடைக்கும். பெருமாளை வழிபடுவதும், விநாயகரை வழிபடுவதும் நல்லது.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது சிறப்பு, உடல் சோர்வு ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது முலம் முன்னேற்றத்தை அடைய முடியும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் அதிக முதலீடு கொண்ட செயல்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகளால் சுபச் செலவுகள் ஏற்படும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் தொழிலில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் லாபம் தடைப்படாது. கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவதால் மன அமைதி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் உண்டானாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சனிக்கு எள் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8,             நிறம் - பச்சை, வெள்ளை,        கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்             திசை - வடக்கு                 தெய்வம் - விஷ்ணு

No comments: