Thursday, January 23, 2020

சிம்ம ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


சிம்ம ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சிம்மம் மகம், பூரம், உத்திரம்1-ஆம் பாதம்.
அஞ்சா நெஞ்சமும், பிறருக்கு அடி பணியாத குணமும், உயர்ந்த எண்ணங்களும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 5-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கண்ட கணவுகள் எல்லாம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கடந்த கால மனக்கவலைகள் எல்லாம் விலகி எதிலும் நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகளில் இருந்த வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபகரமான பலன்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறி மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் பெருகும். உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறையும்.
                சனி சாதகமாக 6-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் வரும் 20-11-2020 வரையும், 7-ஆம் வீட்டில் 20-11-2021 முதல் 13-04-2022 வரையும் சஞ்சாரம் செய்கின்ற காலத்தில் மேலும் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் வரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். அதிநவீன பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் அமையும். சர்ப கிரகமான ராகு லாப ஸ்தானத்தில் 23-09-2020 வரை சஞ்சரிப்பதும், கேது வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் மிக சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்ற பலன்களை அடைய முடியும்.

உடல்ஆரோக்கியம் 
உடல் நிலை அற்புதமாக அமையப் பெற்று உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பல்வேறு வகையில் ஏற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் வீண் செலவுகள் குறையும். மகிழ்ச்சி தர கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவு ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராளமான தனவரவுகளால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உறவினர்களிடம் சுமூகமான நிலை ஏற்படும். கடன்கள் குறைந்து சேமிக்க முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். கடன்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடந்த கால போட்டிகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் மற்றும் பழைய தொழிலை விரிவுபடுத்தும் நோக்கங்கள் யாவும் வெற்றியை கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் சிறப்பான லாபம் கிடைக்கும். வேலையாட்கள் சாதகமாக இருப்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் எதிலும் அனுகூலமானப் பலன்களை அடைவார்கள். கூடுதல் பொறுப்புகளும் வேலைபளுவும் சற்று அதிகரித்தாலும் எதையும் எளிதில் செய்து முடிக்க கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், பாராட்டுதல்களும் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றங்களையும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழும் அமைப்பு உண்டாகும்.
அரசியல்
உங்களின் செல்வம், செல்வாக்கு உயர கூடிய காலமாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வை சந்திப்பீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை தாராளமாகக் கிடைக்கும். நவீனகரமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலனை பெற முடியும். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பு கிட்டும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கடந்த கால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சம்பளத் தொகைகளும் விரிவடைவதால் பொருளாதார நிலையும் உயரும். தொழிலில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் போட்டி, பொறாமைகள் யாவும் படிப்படியாக குறையும். வெளியூர், வெளிநாடுகள் செல்ல கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு பெருகும்.
பெண்கள்
குடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.  புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாணவ- மாணவியர்
நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபகசக்தி போன்றவற்றால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்க முடியும். விளையாட்டு துறைகளில் வெற்றிமேல் வெற்றிகள் குவியும். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நல்ல நண்பர்களின் நட்பு நற்பெயரை பெற்று தரும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
சனிபகவான் உங்கள் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், ஆண்டு கோளான குரு 5-ல் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றமானப் பலன்கள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய அளவிற்கு ஆற்றல் ஏற்படும். உடல் நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக விலகி அன்னோன்யம் அதிகரிக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். சர்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்துகொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். வீடு, வாகனம், போன்றவற்றால் சிறுசிறு செலவுகள் தோன்றினாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். தொழில், வியாபாரம் ஒரளவுக்கு லாபம் தரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணியில் கவனம் செலுத்துவது சிறப்பு. நவகிரகங்களில் உள்ள கேதுவை வழிபடுவது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் மிகசிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடந்த கால கடன்களை அடைக்க கூடிய ஆற்றல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து எற்றங்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். வரும் 20-11-2020 முடிய குரு 5-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 10-ல் ராகு, 4-ல் கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். நெருங்கியவர்களிடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரன் நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். குரு ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் நிலவினாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபடுவது, தட்சினாமூர்த்தியை வழிபடுவது மிகவும் உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
ஜென்ம ராசிக்கு 6-ல் சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் குரு பகவான் அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். பொருளாதார ரீதியாக சிறிது நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். விநாயகரையும் அஷ்டலட்சுமியையும் வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் திருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றம், செல்வம் செல்வாக்கு உயரகூடிய வாய்ப்பும் உண்டாகும். தன காரகன் குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் வரும் 20-10-2021 முதல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை மிக அற்புதமாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து உறவு கரம் நீட்டுவார்கள். தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் எளிதில் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். ராகுவுக்கு பரிகாரமாக அம்மன் வழிபாடு செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருப்பதாலும் குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் சகல விதத்திலும் முன்னேற்ற பலன்களை பெற முடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயரும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து மன நிம்மதி ஏற்படும், தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். சேமிக்கவும் முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. குரு பகவான் இக்காலத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்லில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது சிறப்பு. சர்ப்ப கிரகமான கேது முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு தடைகள் ஏற்படும் என்றாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளுக்கேற்ற உயர்வுகளையும் பாராட்டுகளையும் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப்பளுவும் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஆண்டு கோளான குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் இருந்தாலும் கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல் நிலையில் அக்கறை எடுத்து கெள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். புத்திரர்களால் வீண் மனசஞ்சலங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால்  தேவையற்ற செலவுகளை எதிர்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் மேலதிகாரிகளின் ஆதரவு சற்று சாதகமாக இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிப்பதும். சர்ப்ப கிரகமான கேது 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயமும் உண்டு. உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். குரு பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது மூலம் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தட்சினாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                                   நிறம் - வெள்ளை, சிவப்பு                                கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் -  மாணிக்கம்                    திசை - கிழக்கு                                          தெய்வம் - சிவன்

No comments: