Thursday, January 23, 2020

கன்னி ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


கன்னி ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் பிறரைப் புண்படுத்தாமல் நிதானமுடனும், நேர்மையுடனும் வாழக் கூடிய பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, புதனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான சனி இது நாள் வரை 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெற்றதால் பல வித இன்னல்களை சந்தித்து வந்தீர்கள்.  திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு நிலவிய தேவையற்ற அலைச்சல்கள் குறையும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக மறைந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். சிலருக்கு வயிறு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். அசையும், அசையா சொத்து வகையில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையாக செயல்படுவதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் செலவுகள் குறைந்து பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகி சேமிப்பு பெருகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகள் வகையில் சிறிது மன கவலை உண்டாகலாம் என்பதால் அவர்களை கையாள்வதில் பொறுமையுடன் செயல்பட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
 சனி 5-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குருபகவான் 20-11-2020 முதல் 20-11-2021 வரை 5-ஆம் வீட்டிலும், 13-04-2022 முதல் 22-04-2023 வரை 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ள காலத்தில் பொருளாதார ரீதியாக மேலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இருக்கும் கடன்கள் யாவும் குறையும். திருமண சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் இருக்கும் கவலை மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
சர்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 வரை சஞ்சரிக்க இருப்பதும் உங்களது பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்பதால் இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும். அதன் பின்பு வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க உள்ள காலத்தில் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் மனைவி மற்றும் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் சற்றே அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரகூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவை உண்டாக்கும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். வீடு மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகள் வழியில் சிறிது மன கவலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்வார்கள்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி மற்றும் கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். கடன்கள் யாவும் குறையும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிட்டும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்க பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும்.
அரசியல்
அரசியல்வாதிகளின் பெயர் புகழ் பெருமை உயரும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அனுகூலம் தரும். மறைமுக வருவாய் பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள் உங்கள் பேச்சிற்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம் ஏற்படும். உடனிருப்பவர்களின் மூலமும் சாதக பலன் உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். போதிய நீர்வரத்தும் உண்டாகும். சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறிது பிரச்சினை ஏற்படலாம் என்பதால் பங்காளிகளிடம் பேச்சில் பொறுமையுடன் இருந்தால் எதையும் சமாளிக்க முடியும்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடிவரும். தடைப்பட்ட பணவரவுகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். இசை, பாடல் நடன துறைகளில் உள்ளவர்கள் சிறப்பான வாய்ப்புகளை பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது.
பெண்கள்
தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். புத்திர பாக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகும். வயிறு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் கிட்டும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றமும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விளையாட்டுத் துறைகளில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிட்டும். நல்ல நண்பர்களின் சேர்க்கை நற்பலனை உண்டாக்கும். அரசு வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் தடையின்றிக் கிட்டும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்தியளிக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுப காரியங்கள் கை கூட தாமதநிலை ஏற்படும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். ஜென்ம ராசிக்கு 4-ல் குரு, கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளை சமாளிக்க கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளை அடைய அதிக நேரம் உழைக்க வேண்டும். ராகு- கேதுவுக்கு பரிகாரமாக துர்க்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஒரளவுக்கு சாதகமாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம் மிகுந்த பலன்கள் உண்டாகும். குரு பகவானும் இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலங்களை அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளுக்கு இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.  ஜென்ம ராசிக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றாலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் சர்ப்ப கிரகமான கேது 3-ல் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். 4-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2020 முதல் குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலிருந்த இடையூறுகள் விலகி நல்ல லாபம் அமையும். பொன், பொருள், சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். பண விஷயங்களில் இருந்த கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரிய முதலீடுகள் கொண்டு செய்யும் காரியங்களில் அனுகூலப்பலன் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து கடந்த காலங்களில் இருந்த வேலைபளு குறையும். பெருமாள் வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
ஜென்ம ராசிக்கு 5-ல் சனிபகவான் சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு 5-ல், கேது 3-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். பொருளாதார நிலை மிகவும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையும் ஒற்றுமையும் இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி எளிதில் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல், பொருட் தேக்கங்கள் விலகி லாபங்கள் அடையும் வாய்ப்பு உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
சனி உங்கள் ராசிக்கு 5-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகள் சிறு தடையுடன் நிறைவேறும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானமாக இருப்பது உத்தமம். குல தெய்வ வழிபாடு செய்வது குடும்பத்திற்கு நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 5-ல் சந்திரன் நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். குரு பகவான் 20-11-2021 முதல் 6-ல் சஞ்சரிப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது மூலம் வீண் விரயங்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். கேது 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். வேலையாட்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது, குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
ஜென்ம ராசிக்கு 5-ல் சனிபகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு 6-ல் சஞ்சரிப்பதாலும்  தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கக் கூடும். அசையா சொத்து வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எந்த காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படால் நற்பலனை அடைய முடியும். உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் வெற்றி மேல் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் கிட்டும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். கடந்த காலங்களில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். உற்றார், உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன் பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நீண்ட நாள் கனவுகளும் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். புதிய தொழில் தொடங்க ஏதுவான காலமாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வுகளும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் நற்பலன்கள் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடுவது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் தனகாரகன் குரு 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏஜென்ஸி கமிஷன் காண்டிரக்ட் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிட்டும். வெளியூர் தொடர்புகளால் நன்மை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தடைபட்ட உயர்வுகளை பெறுவர். எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலனை பெற முடியும். ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கேதுவுக்கு பரிகாரமாக விநாயகர் வழிபாடு செய்து உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் 5-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு ஏற்றத்தைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் சிறப்படையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நன்மை ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலங்களை பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது, துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8                   நிறம் - பச்சை, நீலம்            கிழமை - புதன், சனி
கல் -  மரகத பச்சை               திசை - வடக்கு          தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு


No comments: