Wednesday, January 29, 2020

2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்


2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





ராகு
புதன் சுக்கி



சூரிய சனி

குரு கேது
செவ்  


         
கிரக   மாற்றம்
03-02-2020 மீனத்தில் சுக்கிரன் அதிகாலை 02.18 மணிக்கு
08-02-2020 தனுசில் செவ்வாய் அதிகாலை 03.52 மணிக்கு
13-02-2020 கும்பத்தில் சூரியன் பகல் 03.03 மணிக்கு
18-02-2020 புதன் வக்கிர ஆரம்பம் அதிகாலை 06.19 மணிக்கு
29-02-2020 மேஷத்தில் சுக்கிரன் அதிகாலை 01.33 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் புதன் சஞ்சரிப்பதும் இம்மாதத்தில் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவு ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். மாத தொடக்கத்தில் 8-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 7-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். தொழில் அபிருத்திக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் போன்றவையும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் - தை கிருத்திகை நாளில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - 15-02-2020 இரவு 11.18 மணி முதல் 18-02-2020 அதிகாலை 05.13 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் புதன் 10-ல் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நெருங்கியவர்களின் ஆதரவால் சிறப்பான வளர்ச்சியினை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். கணவன்- மனைவி வீண் பேச்சை குறைப்பது நல்லது. செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் குரு 8-ல் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள்.
பரிகாரம் - அம்மன் வழிபாடு செய்வதாலும், தை கிருத்திகை நாளில் முருக வழிபாடு செய்வதாலும் சிறப்பான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம் - 18-02-2020 அதிகாலை 05.13 மணி முதல் 20-02-2020 பகல் 01.52 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 9-ல் புதன் சஞ்சரிப்பது குடும்பத்தில் பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்கள் குறையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும், அசையா சொத்துகளால் வீண் அலைச்சல் இருந்தாலும் ஓரளவு அனுகூலப் பலனும் உண்டாகும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சிறு தடை தாமதத்திற்கு பின் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம் - சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும் சனிக் கவசம் படிப்பதாலும் மனகவலைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம் -  20-02-2020 பகல் 01.52 மணி முதல் 23-02-2020 அதிகாலை 00.29 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் , கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம் - வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமி தேவியை வெண் தாமரை மலர் கொண்டு வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் -  23-02-2020 அதிகாலை 00.29 மணி முதல் 25-02-2020 பகல் 12.27 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் இம்மாத முற்பாதியில் 6-ல் சஞ்சரிப்பதும் குரு 5-ல், சனி 6-ல் சஞ்சரிப்பதும் மிகச் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப் பலன் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனைவரையும் அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் யோகமும் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். சிலருக்கு புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின உழைப்பு தேவை.
பரிகாரம் - மஹா சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் வலமான பலன்களை பெறலாம்.
சந்திராஷ்டமம் -  25-02-2020 பகல் 12.27 மணி முதல் 28-02-2020 அதிகாலை 01.08 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, மாத தொடக்கத்தில் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு குரு 4-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களான எள் தீபம் ஏற்றுவது, கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் -  31-01-2020 இரவு 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை மற்றும் 28-02-2020 அதிகாலை 01.08 மணி முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் குரு 4-ல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 7-ஆம் தேதி முதல் கேது சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் நிலவிய சின்ன சின்ன பிரச்சினைகள் குறையும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். புத்திர வழியில் ஒருசில அனுகூலங்களை அடையலாம். அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும்.
பரிகாரம் - குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குருவின் அருள்பார்வை கிட்டும்.
சந்திராஷ்டமம் -  03-02-2020 அதிகாலை 05.40 மணி முதல் 05-02-2020 பகல் 02.00 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 4-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தன வரவால் பொருளாதார நிலை மேன்மை அடையும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் படிப்படி குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த தடைகள் விலகி சாதகப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் ஒருசில அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பல பொது நலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வேலைபளு குறைவாகவே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும்.
பரிகாரம் - தை கிருத்திகை நாளில் முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.
சந்திராஷ்டமம் -  05-02-2020 பகல் 02.00 மணி முதல் 07-02-2020 மாலை 06.24 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, கேது, 2-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய மாதமாகும். பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக குறையும். பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
பரிகாரம் - சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் தொல்லைகள் நீங்கும். செல்வ நிலை உயரும்.
சந்திராஷ்டமம் - 07-02-2020 மாலை 06.24 மணி முதல் 09-02-2020 இரவு 07.43 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி, 12-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம் - மகா சிவராத்திரி நன்னாளில் சிவ பெருமானை தரிசிப்பதாலும் சிவ ஸ்தோத்திரங்கள் படிப்பதாலும் இறைவனின் அருளால் சகல நன்மைகளும் அடையலாம்.
சந்திராஷ்டமம் -  09-02-2020 இரவு 07.43 மணி முதல் 11-02-2020 இரவு 07.43 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு கேது சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக மேன்மையை தரும் அமைப்பாகும். சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சூரியன் 12-ல் இருப்பதால் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். சிலருக்கு புதிய வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். கொடுத்த கடனை பெறுவதில் இருந்த சிக்கல்களும் விலகும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியை அளிக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த உயர்வை பெற்று விட முடியும்.
பரிகாரம் - ராகு காலத்தில் துர்கையம்மன் வழிபாடு செய்வதும், மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், பௌர்ணமியன்று கிரிவலம் சென்று வருவதும் நற்பலன்களை அளிக்கும்.
சந்திராஷ்டமம் -  11-02-2020 இரவு 07.43 மணி முதல் 13-02-2020 இரவு 08.22 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். இம்மாதம் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் - புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாடு செய்வதாலும், சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபடுவதாலும் நன்மைகள் பல உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 13-02-2020 இரவு 08.22 மணி முதல் 15-02-2020 இரவு 11.18 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

05.02.2020 தை 22 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

07.02.2020 தை 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

12.02.2020 தை 29 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

14.02.2020 மாசி 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

20.02.2020 மாசி 08 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

26.02.2020 மாசி 14 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

No comments: