Saturday, January 25, 2020

வார ராசிப்பலன் - ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை


வார ராசிப்பலன் - ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை 
தை 12 முதல் 18 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




ராகு
சுக்கி
திருக்கணித கிரக நிலை
26.01.2020

சனி சந்தி புதன் சூரிய

கேது குரு
செவ்



கிரக மாற்றம்
31-01-2020 கும்பத்தில் புதன் அதிகாலை 02.53 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்
24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.
கும்பம்
26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.
மீனம்
29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.
மேஷம்
31-01-2020 மாலை 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
27.01.2020 தை 13 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

30.01.2020 தை 16 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சஷ்டியன்று விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 1.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் 9-ல் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். பண விஷயத்தில் சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். சிவ வழிபாடும், துர்கையம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  27, 28, 29, 30, 31.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பது தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், சனி, புதன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30, 31, 1.
சந்திராஷ்டமம் -   24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டியதை அடைந்து விடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குரு 6-ல், சூரியன், சனி 7-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் பல அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  26, 1.
சந்திராஷ்டமம் -   26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே இருந்த சின்ன சின்ன பிரச்சினைகள் கூட மறைந்து குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன் போன்றவற்றை குறைத்துக் கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் நற்பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  26, 27, 28.
சந்திராஷ்டமம் -   29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றியை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.  தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு, கேது 4-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  27, 28, 29, 30.
சந்திராஷ்டமம் -   31-01-2020 மாலை 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுக்கு வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நெருங்கியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30, 31, 1.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நீங்கள் நினைத்தது நடக்கும் யோகம் இவ்வாரத்தில் உள்ளது. கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பயணங்களால் பெரிய மனிதர்களின் நட்பும் அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - -      26, 1.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடனை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சதுர்த்தி நாளில் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் -  27, 28.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து கடன் பிரச்சினைகள் குறையும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  26, 29, 30, 31.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு, கேது சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கடன்கள் ஓரளவு குறையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில் ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். மகா லட்சுமி தேவியை தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  27, 28, 1.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் சற்று குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் கொடுத்த கடனை பெறுவதில் சற்று தாமதம் உண்டாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடும், ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  26, 29, 30, 31.

No comments: