Thursday, January 2, 2020

வார ராசிப்பலன்- - ஜனவரி 5 முதல் 11 வரை


வார ராசிப்பலன்- - ஜனவரி  5 முதல் 11 வரை 
மார்கழி 20 முதல் 26 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சந்தி

ராகு

திருக்கணித கிரக நிலை


  சுக்கி

சனி குரு சூரிய கேது புதன்
செவ்
 

கிரக மாற்றம்
09-01-2020 கும்பத்தில் சுக்கிரன் அதிகாலை 04.23 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்
04-01-2020 காலை 10.05 மணி முதல் 06-01-2020 இரவு 08.36 மணி வரை.
ரிஷபம்
06-01-2020 இரவு 08.36 மணி முதல் 09-01-2020 அதிகாலை 03.49 மணி வரை.
மிதுனம்
09-01-2020 அதிகாலை 03.49 மணி முதல் 11-01-2020 காலை 07.52 மணி வரை.
கடகம்
11-01-2020 காலை 07.52 மணி முதல் 13-01-2020 காலை 09.55 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
05.01.2020 மார்கழி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

08.01.2020 மார்கழி 23 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு, கேது சஞ்சரிப்பதும் சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை தரும் அமைப்பாகும். சிறப்பான பணவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்றே விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது, கிருத்திகையன்று முருக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 9, 10.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேச்சை குறைப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், நற்பலனைத் தரும். குரு 7-ல் இருப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களால் தேவையற்ற அலைச்சல், சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். அம்மனை வழிபடுதல், பிரதோஷமன்று சிவ வழிபாட்டை மேற்கொள்ளுதல் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 11.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் கிட்டும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சிலருக்கு புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆருத்ரா தரிசனம் அன்று சிவ வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலனை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 9, 10.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி மற்றவர்களால் ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது, சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலம் இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறைந்து அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான யோகம் கிட்டும். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாக இருக்கும். துர்கை வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம். கிருத்திகை விரதம் இருப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 7, 8, 11.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, புதன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்க முடியும். முருக வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 9, 10.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு தான் கற்று அறிந்து இருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறையும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். கடன்களும் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். ஆருத்ரா தரிசனத்தன்று சிவ வழிபாட்டை மேற்கொள்வது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  9, 10, 11.
சந்திராஷ்டமம் -   04-01-2020 காலை 10.05 மணி முதல் 06-01-2020 இரவு 08.36 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பண்பும் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதும், ராசியதிபதி சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொன், பொருள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 11.
சந்திராஷ்டமம் -   06-01-2020 இரவு 08.36 மணி முதல் 09-01-2020 அதிகாலை 03.49 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு பகவான் 2-ல் இருப்பதால் பணபுழக்கம் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும். மாணவர்கள் உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக செயல்படுவது உத்தமம். ஆருத்ரா தரிசனத்தன்று சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 7, 8.
சந்திராஷ்டமம் -   09-01-2020 அதிகாலை 03.49 மணி முதல் 11-01-2020 காலை 07.52 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது உத்தமம். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 9, 10.
சந்திராஷ்டமம் -   11-01-2020 காலை 07.52 மணி முதல் 13-01-2020 காலை 09.55 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டானாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், குரு, சனி 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஒரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சிவ வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  9, 10, 11.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களை பிறருக்கு தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு, சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய உன்னதமான வாரமாக இவ்வாரம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலனை அடைய முடியும். தாராள தனவரவுகள் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் தேவையற்றப் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வணங்கி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 11.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, சூரியன் புதன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுடைய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். 4-ல் ராகு, 10-ல் சனி, குரு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதில் சிறு தடை தாமதத்திற்கு பின் அ-னுகூலப் பலன் கிட்டும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8.

No comments: