Tuesday, March 31, 2020

Today rasi palan - 01.04.2020


Today rasi palan - 01.04.2020
இன்றைய ராசிப்பலன் -  01.04.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
01.04.2020 பங்குனி 19, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.40 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 07.29 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய

சுக்கி
ராகு சந்தி
புதன்
திருக்கணித கிரக நிலை
01.04.2020

சனி செவ் குரு

கேது 

 


இன்றைய ராசிப்பலன் -  01.04.2020
மேஷம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.
ரிஷபம்
இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
துலாம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். வேலை விஷயமாக செல்லும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரியங்கள் சிறு தடைக்குப் பின் கைகூடும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

Monday, March 30, 2020

2020 ஏப்ரல் மாத ராசிப்பலன்


2020 ஏப்ரல் மாத ராசிப்பலன்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சூரிய

சுக்கி
ராகு
புதன்
திருக்கணித கிரக நிலை


சனி செவ் குரு

கேது 

 

கிரக   மாற்றம்
07-04-2020 மீனத்தில் புதன் பகல் 02.23 மணிக்கு
13-04-2020 மேஷத்தில் சூரியன் இரவு 08.23 மணிக்கு
25-04-2020 மேஷத்தில் புதன் அதிகாலை 02.25 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த ஒற்றுமை குறைவுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடையலாம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பரிகாரம் லக்ஷ்மி வழிபாடு செய்வதாலும், பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாட்டை மேற்கொள்வதாலும் சகல நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 10-04-2020 மாலை 04.26 மணி முதல் 12-04-2020 இரவு 07.12 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் இம்மாதம் குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை தரும் அமைப்பாகும். மாத முற்பாதியில் சூரியன் 11-ல் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் சாதகப்பலன் கிட்டும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் பாதிப்புகள் குறையும்.
சந்திராஷ்டமம் - 12-04-2020 இரவு 07.12 மணி முதல் 15-04-2020 அதிகாலை 01.57 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் இம்மாதத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். இம்மாதத்தில் குரு, சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதில் தடை தாமதங்கள் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
பரிகாரம் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் குருவின் அருள் பார்வை கிட்டும்.
சந்திராஷ்டமம் - 15-04-2020 அதிகாலை 01.57 மணி முதல் 17-04-2020 பகல் 12.17 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். இம்மாதத்தில் சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதும், சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு வளமான பலன்களை தரும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். கூட்டாளிகளால் அனுகூலமானப் பலன்கள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும்.
சந்திராஷ்டமம் - 17-04-2020 பகல் 12.17 மணி முதல் 20-04-2020 அதிகாலை 00.37 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறைந்து எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள்.
பரிகாரம் தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் காரிய சித்தி உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 20-04-2020 அதிகாலை 00.37 மணி முதல் 22-04-2020 பகல் 01.18 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும் சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் கடந்த கால சிக்கல்கள் எல்லாம் மறைந்து வளமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம் சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்களை அடைய முடியும்.
சந்திராஷ்டமம் - 22-04-2020 பகல் 01.18 மணி முதல் 25-04-2020 பின்இரவு 01.15 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஓரளவு சாதகமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். வீடு, வண்டி, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். இம்மாதத்தில் 4-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல் உண்டாகும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். நல்ல வரன்கள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
பரிகாரம் முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 25-04-2020 அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய காலமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களால் ஒருசில அனுகூலப் பலனை அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 31-03-2020 காலை 06.05 மணி முதல் 02-04-2020 பகல் 01.33 மணி வரை மற்றும் 27-04-2020 பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு இம்மாதம் அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் ஒரளவுக்கு குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 2-ல், சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையாக இருப்பதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன் பிரச்சினைகளும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும், வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம் துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.
சந்திராஷ்டமம் - 02-04-2020 பகல் 01.33 மணி முதல் 04-04-2020 மாலை 05.08 மணி வரை மற்றும் 29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒருவரையொருவர் அனுசரித்து சென்றால் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. பணம் சம்பந்தாமான கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும்.
பரிகாரம் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.
சந்திராஷ்டமம் - 04-04-2020 மாலை 05.08 மணி முதல் 06-04-2020 மாலை 05.32 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு மந்த நிலை விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். குரு, செவ்வாய், சனி 12-ல் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன்களையும் தடையின்றி பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள்.
பரிகாரம் செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - 06-04-2020 மாலை 05.32 மணி முதல் 08-04-2020 மாலை 04.33 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு அதிசாரமாக லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தாராள தனவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும், அசையா சொத்துக்களால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம் சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் - 08-04-2020 மாலை 04.33 மணி முதல் 10-04-2020 மாலை 04.26 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்
09.04.2020 பங்குனி 27 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

17.04.2020 சித்திரை 04 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

26.04.2020 சித்திரை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

27.04.2020 சித்திரை 14 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

29.04.2020 சித்திரை 16 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

30.04.2020 சித்திரை 17 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை