வார ராசிப்பலன் - ஏப்ரல் 26 முதல் மே
2 வரை 2020
சித்திரை 13 முதல் 19 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L,
M.A.astro. PhD in Astrology.
No:
19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
சூரிய
புதன்
|
சுக்கி
சந்தி
|
ராகு
|
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
சனி செவ் குரு
|
|
||
கேது
|
|
|
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம்
25-04-2020 அதிகாலை 01.15 மணி
முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.
மிதுனம்
27-04-2020 பகல் 11.45 மணி முதல்
29-04-2020 இரவு 07.57 மணி வரை.
கடகம்
29-04-2020 இரவு 07.57 மணி முதல்
02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.
சிம்மம்
02-05-2020 அதிகாலை 01.05 மணி
முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
26.04.2020 சித்திரை 13 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி
முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
27.04.2020 சித்திரை 14 ஆம் தேதி
திங்கட்கிழமை சதுர்த்தி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி
முதல் 06.50 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
29.04.2020 சித்திரை 16 ஆம் தேதி
புதன்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல்
06.45 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
30.04.2020 சித்திரை 17 ஆம் தேதி
வியாழக்கிழமை சப்தமி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல்
06.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
நிமிர்ந்த நடையும், கனிந்த
பார்வையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு
சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் உங்களுக்குள்ள சிக்கல்கள் விலகி வளமான பலன்களை
பெறுவீர்கள். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் அதிகரிக்கும். எடுக்கும்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலப் பலனை அடைவீர்கள். குடும்பத் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று
நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து
நடந்துக் கொண்டால் ஒற்றுமை நிலவும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மன
மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரீதியாக உள்ள தேக்கங்கள் சற்று விலகும்.
பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது
நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் ஆதாயங்களை அடைய இடையூறுகள்
இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். புதிய வாயப்பை எதிர்ப்பார்த்தவர்களுக்கு
நல்ல செய்தி கிடைக்கும். உங்களது எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில்
ரீதியாக சாதகமான பலனை அடைய முடியும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் உற்றார்
உறவினர்களின் ஆதரவால் நல்லது நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தினமும்
சூரிய நமஸ்காரம் செய்வது, முருக வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
இனிமையான சுபாவம் கொண்ட ரிஷப
ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 9--ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால்
பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் விலகி மன நிம்மதி ஏற்படும். சூரியன் 12-ல்,
ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி
குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது பேச்சில்
நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளவது
நல்லது. தேவையற்ற வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். திருமண சுபகாரிய
முயற்சிகளில் உள்ள இடையூறுகள் விலகி நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களை
அனுசரித்து செல்வது நல்லது. பொறுமையை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளை
தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் உள்ள தேக்க நிலையால் மன நிம்மதி குறைவு
இருந்தாலும் ஆறுதல் தரும் நல்ல செய்தி மற்றும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வர
வேண்டிய வாய்ப்புகள் யாவும் தாமதம் ஆகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஓரளவு
முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவால் மன
நிம்மதி ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் அனுகூலப்
பலன் கிட்டும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம்.
சிவ வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது
மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 30, 1.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்
கூடிய திறமை கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி புதன் சூரியன்
சேர்க்கை பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில்
கிடைத்து மன நிம்மதி உண்டாகும். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி-
செவ்வாய் இனைந்து அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை
எடுத்துக் கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள்
ஏற்படுவதை தவிர்க்க முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உற்றார்
உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு அனுகூலத்தை அளிக்கும். கணவன்- மனைவியிடையே
சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிள்ளைகளால் வீண்
செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு நல்ல நடக்கும்.
கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
உங்களுக்கு உடல் சோர்வு இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். உணவு
விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது-. ராகு காலங்களில் துர்கையம்மனை மனதார
நினைத்து வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 2.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றத்
தவறாத கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 10-ல் சூரியன், 11-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்து நடக்கும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும்
முயற்சியில் அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த
வாய்ப்புகள் கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும்
மேலோங்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழைய
கடன்கள் தீர்ந்து போகும். 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை
அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும் வெளி இடங்களிலும்
பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள்
ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் தேவையற்ற
செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பதும் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தாது இருப்பதும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை
இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். முருக பெருமானை வணங்கி
வழிபட்டால் குடும்பத்தில் நல்லது நடைபெறும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 30, 1.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும்
தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல்
சனி- செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க
முடியும். நல்ல இடத்து நட்பு மூலம் தக்க சமயத்தில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள்
கிடைக்கும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல் படுவார்கள். பயணங்களால்
அனுகூலப் பலன்கள் உண்டாகும். இதுவரை தடைப்பட்ட திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம்
உண்டாகி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நவீன பொருட்கள் வாங்க கூடிய
வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள்
அனைத்தும் நிறைவேறும். கடந்த கால கடன்கள் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அனுகூலங்கள் உண்டாகும். கௌரவமான நிலை உண்டாகி மன
நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்-
மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய
நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.
பூர்வீக சொத்து வழியில் நற்பலன் கிடைக்கும். சிவ வழிபாட்டையும், விநாயகர்
வழிபாட்டையும் செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகளை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 29.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால் நயமாக
பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு
அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும்
எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பண வரவுகள் நன்றாக
அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள்
பூர்த்தியாகும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு
பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு
விஷத்தில் கவனத்துடன் இருப்பது மூலம் எதையும் சமாளிக்க முடியும். தொழில் வியாபாரம்
செய்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் உதவியுடன்
தற்போது உள்ள சூழ்நிலையை எதிர் கொள்ள முடியும். குடும்ப உறுப்பினர்களால்
அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளை கூட திறமையுடன் செய்து
முடித்து மற்றவர்களின் மதிப்பையும் மரியாதையும் பெறுவார்கள். திருமண சுப
முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடந்த கால சோதனைகள் விலகி வெற்றி
பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சிவ வழிபாடு,
துர்க்கையம்மன் வழிபாடு செய்வதன் மூலம் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30, 1.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய
ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சனி,
செவ்வாய், சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் மன அமைதி குறைவு, வரவுக்கு
மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக
இருப்பது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். குடும்பத்தில் கணவன்-
மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள் சுமாராக தான்
இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில்
தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படலாம். சிலருக்கு வீடு வாகனம், போன்றவற்றால் வீண்
செலவுகள் ஏற்படக் கூடும். கொடுக்க- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது
நல்லது. தொழில் வியாபாரத்தில் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.
அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க
கூடும். உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு மேலதிகாரிகளிடம்
கருத்து வேறுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க
உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சனி பகவானுக்கு கருப்பு நிற
வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை
செய்வதும், முருக வழிபாடு மேற்கொள்வதும் மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 30, 1, 2.
சந்திராஷ்டமம் - 25-04-2020
அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
தன்னுடைய கொள்கைகளை எளிதில்
விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி
ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும்
எல்லா வகையிலும் முன்னேற்றதை உண்டாக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள்
அனைத்திலும் எதிர்பார்த்த அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட
வாயப்புகள் கிடைக்கும் யோகம் நல்ல செய்தி வரும் சூழ்நிலை ஏற்படும். குடும்ப
உறுப்பினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதையும்
எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும்
ஆதரவும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக
இருக்கும். உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சிலருக்கு சொத்து
விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் சுமூகமான முடிவுக்கு வருவதற்கான நல்ல செய்தி
கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலனை காண முடியும். உடல் ஆரோக்கியம்
ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான
பலனை அடையலாம். துர்க்கையம்மனை வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 2.
சந்திராஷ்டமம் - 27-04-2020
பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
வேகமாக பேசினாலும், திருத்தமாக
பேசக் கூடிய தனுசு ராசி நேயர்களே, ஜென்ம
ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக்
கொண்டு நிதானத்துடன் செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புதன் 5-ல்
சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசியதிபதி குரு தன ஸ்தானமான 2-ல் அதிசாரமாக
சஞ்சரிப்பதாலும் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தற்போது உள்ள
பொருளாதார ரீதியான நெருக்கடிகள் விலகி ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும்.
குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக தடைப்பட்ட
சுபகாரியங்கள் கூட கைகூட கூடிய சூழ்நிலை உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்
வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும்
ஒற்றுமைக் குறையாது. புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க
நேரிடும் என்றாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும்.
தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றங்கள் ஏற்படும்.
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உங்கள்
தேவையறிந்து உதவுவார்கள். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கி
வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 29.
சந்திராஷ்டமம் - 29-04-2020
இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
தானுண்டு தன் வேலையுண்டு என
வாழும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல
வாய்ப்புகள் உங்களை நாடி வரும். பணம் வரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் ஆடம்பர
செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சாதகமாக
இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக
மாறி செயல்படுவார்கள். சனி- செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை
குறைத்து கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப
உறுப்பினர்கள் உதவியால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள்
சற்று குறையும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரிய
முயற்சியில் இருந்த தடை விலகி நல் செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறு
சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு
சாதகமான பலன்கள் இருக்கும் என்றாலும் மேலதிகாரிகளிடம் பேசும் போது பொறுமை தேவை.
வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த
படி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவுடன்
செயல்படுவார்கள். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொண்டால் துன்பங்கள் நீங்கி
நன்மைகள் உண்டாகும்
வெற்றி தரும் நாட்கள் - 28, 28, 30, 1.
சந்திராஷ்டமம் - 02-05-2020
அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவரின் குணாதிசியங்களை
எளிதில் எடை போடும் திறன் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி
ஸ்தானமான 3-ல் மாத கோளான சூரியன் சஞ்சரிப்பதும், 4-ல் சுக்கிரன், 11-ல் கேது
சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக வலமான பலன்களை தரும் அமைப்பாகும். தொழில்
வியாபாரத்தில் சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில்
அனுகூலப் பலன் கிடைக்கும். உங்களின் புதிய திட்டங்கள் வெற்றி தரும்.
தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கூட்டாளிகளின் ஆதரவால் இருக்கும்
நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குரு,
சனி, செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும்.
நெருங்கியவர்களின் உதவியால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம்
கூடும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கல்
விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள்
இருந்தாலும் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான
பிரச்சினைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.
முருக வழிபாடு செய்வது, துர்க்கையம்மனை மனதார நினைத்து கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 30, 1, 2.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும்
செவி சாய்க்காத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு அதிசாரமாக 11-ல் சனி-
செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை
அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் திருப்திகரமாக
இருக்கும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் 2-ல்
சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் விட்டு
கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொறுமையுடன்
செயல்பட்டால் நற்பலனை அடையலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன்
செயல்படுவதால் மன நிம்மதி இருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் புதிய
முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள்
விலகும். கொடுத்த கடன்களும் தக்க நேரத்தில் திருப்பி வந்து உங்களது நெருக்கடிகளை
குறைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படும் வாய்ப்பு உண்டாகும்.
சிலருக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்துடன் இனையும் அமைப்பு
உண்டாகும். சகோதர சகோதரிகள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடு,
விநாயகர் வழிபாடு மேற்கொண்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 2.
No comments:
Post a Comment