Thursday, May 21, 2020

வார ராசிப்பலன் -- மே 24 முதல் 30 வரை 2020


வார ராசிப்பலன் -- மே 24 முதல் 30 வரை 2020 
வைகாசி 11 முதல் 17 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



சூரிய புதன் சந்தி
சுக்கி (வ)
ராகு
செவ்
திருக்கணித கிரக நிலை


குரு (வ) சனி (வ)

கேது

 

கிரக மாற்றம் 
24--05-2020 மிதுனத்தில் புதன் இரவு 11.54 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம்
22-05-2020 காலை 07.35 மணி முதல் 24-05-2020 மாலை 05.34 மணி வரை.
மிதுனம்
24-05-2020 மாலை 05.34 மணி முதல் 27-05-2020 அதிகாலை 01.25 மணி வரை.
கடகம்
27-05-2020 அதிகாலை 01.25 மணி முதல் 29-05-2020 காலை 06.59 மணி வரை.
சிம்மம்
29-05-2020 காலை 06.59 மணி முதல் 31-05-2020 காலை 10.20 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
24.05.2020 வைகாசி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியை திதி மிருகசிரீஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

27.05.2020 வைகாசி 14 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும், 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் சகலவிதத்திலும் மேன்மையை தரும் அமைப்பாகும். உங்களது செயல்களுக்கு பரிபுரண அனுகூலங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிபடியாக குறையும். எதையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். 2-ல் சூரியன் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன்கள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தை அடையலாம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகளும் உங்களை தேடி வரும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். சிவ வழிபாடு செய்வது, சிவ ஸ்தோத்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  25, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
இனிமையாக பேசும் சுபாவம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -- 24, 27, 28.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் கூட மறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். 8-ல் சஞ்சரிக்ககூடிய குரு சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கடந்த கால இடையூறுகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் உடனிருப்பவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 25, 26, 29, 30.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது நற்பலனை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -- 24, 27, 28.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், 11-ல் ராகு, புதன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார பிரச்சினைகள் விலகும். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிட்டும். விநாயக பெருமானை வணங்குவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -- 24, 25, 26, 29, 30.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன், 10-ல் புதன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 25, 26, 27, 28.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
உயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் குரு, சனி, 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், வரவுக்கு மீறிய செலவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்-- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகளால் தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்பட்டு லாபம் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஓரளவுக்கு ஏற்றமானப் பலன்களை பெற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் நற்பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -- 27, 28, 29, 30.
சந்திராஷ்டமம் -   22-05-2020 காலை 07.35 மணி முதல் 24-05-2020 மாலை 05.34 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவுடன் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 4-ல் செவ்வாய் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளும் செய்ய நேரிடும் என்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பணப்பிரச்சினைகளை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் உண்டானாலும் அதற்கேற்ப அனுகூல பலன்களும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். முருக வழிபாடு நன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் -- 29, 30.
சந்திராஷ்டமம் -   24-05-2020 மாலை 05.34 மணி முதல் 27-05-2020 அதிகாலை 01.25 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் குறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 2-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன்கள் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற பெரிதும் உதவும். வெளித் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -- 24, 25, 26.
சந்திராஷ்டமம் -   27-05-2020 அதிகாலை 01.25 மணி முதல் 29-05-2020 காலை 06.59 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் பேச்சில் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர் வரும் சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சனிபகவானை மனதார நினைத்து வழிபடுவது, சனி கவசங்கள் படிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 25, 26, 27, 28.
சந்திராஷ்டமம் -   29-05-2020 காலை 06.59 மணி முதல் 31-05-2020 காலை 10.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை பெறுவீர்கள். போட்டிகள் பல இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தக்க நேரத்தில் கிடைக்கப் பெற்று லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலப் பலனை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சுமாராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ப அனுகூலப்பலன்கள் கிட்டும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 27, 28, 29, 30.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக இருந்த தடைகள் விலகி ஏற்றங்களை பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்களும் படிப்படியாக குறையும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் உற்றார் உறவினர்களின் உதவிகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -- 24, 29, 30.



No comments: