Friday, June 26, 2020

வார ராசிப்பலன்- ஜுன் 28 முதல் ஜுலை 4 வரை 2020


வார ராசிப்பலன்- ஜுன் 28 முதல் ஜுலை 4 வரை 2020 
ஆனி 14 முதல் 20 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



செவ்

சுக்கி
சூரிய ராகு புதன் (வ)

திருக்கணித கிரக நிலை


குரு(வ) சனி (வ)

கேது

 
சந்தி


கிரக மாற்றம் 
30-06-2020 தனுசில் குரு அதிகாலை 05.22 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி
27-06-2020 மாலை 03.50 மணி முதல் 29-06-2020 மாலை 06.25 மணி வரை.
துலாம்
29-06-2020 மாலை 06.25 மணி முதல் 01-07-2020 இரவு 08.55 மணி வரை.
விருச்சிகம்
01-07-2020 இரவு 08.55 மணி முதல் 03-07-2020 பின்இரவு 12.10 மணி வரை.
தனுசு
03-07-2020 பின்இரவு 12.10 மணி முதல் 06-07-2020 அதிகாலை 05.00 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
02.07.2020 ஆனி 18 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சூழ்நிலைகேற்றவாறு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் அனுகூலமான பலனை அடைய முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விநாயகப் பெருமானுக்கு அருகம் புல் மாலை சாற்றி வழிபடுவது விநாயகர் துதிகளை படிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -      28, 29, 30, 1.
சந்திராஷ்டமம் - 01-07-2020 இரவு 08.55 மணி முதல் 03-07-2020 பின்இரவு 12.10 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் அன்றாட பணிகளை சிறப்புடன் செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கல் சற்று சுமாராக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். பிரதோஷ நாளில் விரதமிருந்து சிவ பெருமானை மனதார நினைத்து இல்லத்தில் விளக்கேற்றி சிவ ஸ்தோத்திரங்களை படித்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -      30, 1, 2, 3.
சந்திராஷ்டமம் - 03-07-2020 பின்இரவு 12.10 மணி முதல் 06-07-2020 அதிகாலை 05.00 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடியான காலமாகும். போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 12-ல் இருப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். மகாலட்சுமி தேவிக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள் -      2, 3, 4.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சூரியன், ராகு 12-ல் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் 6-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -      28, 29, 4.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், புதன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை மனதார நினைத்து வழிபடுவதாலும், குரு கவசம் படிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -      30, 1.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார ரீதியாகவும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். இவ்வாரத்தில் பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடனில்லாத வாழ்க்கை அமையும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் முடிந்த வரை கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். தொழிலாளர்களை அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் சிக்கல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். முருக பெருமானை மனதார நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சுப செய்திகள் வந்து சேரும்.
வெற்றி தரும் நாட்கள் -      28, 29, 2, 3.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய், 9-ல் புதன் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி மேன்மையான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். நெருங்கியவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். சிறப்பான பணவரவால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும்.  புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். சனிபகவானை மனதார நினைத்து வழிபடுவதாலும், சனிக்கவசங்கள் படிப்பதாலும் மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -      30, 1, 4.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உங்கள் ராசிக்கு சூரியன், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் அடைய முடியும். செவ்வாய் வெள்ளி போன்ற நாட்களில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்வதாலும் தேவி துதிபாடல்கள் படிப்பதாலும் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -      28, 29, 2, 3.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி போகலாம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சிவ பெருமானையும் முருக கடவுளையும் மனதார நினைத்து வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -      28, 29, 30, 1, 4.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்தாலும் 3-ல் செவ்வாய், 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம், சிறப்பான தன வரவு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் ஓரளவு அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். அதிக முதலீடு போட்டு செய்யும் செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மனதார நினைத்து வழிபட்டால் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -      30, 1, 2, 3.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு செவ்வாய் 2-ல் சஞ்சரித்தாலும் 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சூரியன், ராகு 5-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பொன் பொருள் சேரும். சிலரின் வண்டி, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். சனி பகவான் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -      2, 3, 4.
சந்திராஷ்டமம் - 27-06-2020 மாலை 03.50 மணி முதல் 29-06-2020 மாலை 06.25 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. 4-ல் புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து சாதகமான பலன்களை அடைவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பிரதோஷ நாளில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -      28, 4.
சந்திராஷ்டமம் - 29-06-2020 மாலை 06.25 மணி முதல் 01-07-2020 இரவு 08.55 மணி வரை.



No comments: