வார ராசிப்பலன் - ஜுலை 12 முதல் 18 வரை 2020
ஆனி 28 முதல் ஆடி 3 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் -
2255. வடபழனி,
சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
செவ் சந்தி
|
|
சுக்கி
|
சூரிய ராகு புதன் (வ)
|
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
சனி (வ)
|
|
||
குரு(வ)
கேது
|
|
|
|
கிரக மாற்றம்
13--07-2020 புதன் (வ) நிவர்த்தி பகல் 01.57
16-07-2020 கடகத்தில் சூரியன் பகல் 10.47
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம் 10-07-2020
இரவு 10.55 மணி முதல் 13-07-2020 பகல் 11.15 மணி வரை.
மேஷம் 13-07-2020 பகல்
11.15 மணி முதல் 15-07-2020 இரவு 11.18 மணி வரை.
ரிஷபம் 15-07-2020
இரவு 11.18 மணி முதல் 18-07-2020 காலை 09.00 மணி வரை.
மிதுனம் 18-07-2020
காலை 09.00 மணி முதல் 20-07-2020 மாலை 03.28 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
12.07.2020 ஆனி 28 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 10.30 மணி முதல்
11.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னுடைய வாக்கு வன்மையை
பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுடைய
முயற்சிகளுக்கு அனுகூலப்பலன் கிடைக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய
வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில்
வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதர,
சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில்
மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள்
நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம்
உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த
கடன்களும் வசூலாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம்
சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி
தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள்
கிடைக்கும். முருக கடவுளையும், மகா லட்சுமி தேவியையும் மனதார வணங்கி வழிபட்டால்
குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -13, 14, 15, 18.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில்
தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில்
சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் வரும் 16-ஆம் தேதி சூரியன் 3-ல்
சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் கடந்த கால சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக
குறைந்து முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.
மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில்
தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும்.
கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் மன
மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது
சிறப்பு. பெண்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் குறையும்.
கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல்
இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும்.
கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன்
மூலம் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக
செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ பெருமானை
மனதார நினைத்து வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 16, 17.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
சற்று குழப்பவாதியாக இருந்தாலும்
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன
ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 1, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளித்து
ஏற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள்
ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் ஓரளவு
சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். செவ்வாய் 10-ல் இருப்பதால்
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக்
கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிறு சிறு அலைச்சல்
டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. பணம் கொடுக்கல்--
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில்
இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக்
கடைபிடிப்பது உத்தமம். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின்
விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். துர்கையம்மனை நினைத்து இல்லத்தில் நெய்
தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15, 18.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
எளிதில் உணர்ச்சி
வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல்
கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் செவ்வாய், 11-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை
சாதகமாக இருக்கும். பண வரவுகள் தேவை ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள்
நிறைவேறும். உங்கள் ராசிக்கு குரு 6-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்
கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன்
உண்டாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை பெற
முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்--
மனைவிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம்
சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள்
உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளும்
தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்
இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெற முடியும். தட்சிணாமூர்த்தி படத்திற்கு
முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால்
நற்பலன்கள் கிட்டும்.
வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16, 17.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச் சொற்களுக்கு
செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் புதன், ராகு சஞ்சரிப்பதும்
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் சாதகமான அமைப்பாகும். பொருளாதார ரீதியாக
மேன்மையான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். கடன்கள் யாவும்
படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள்
உங்களை தேடி வரும். சிறப்பான லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மன
நிம்மதி ஏற்படும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின்
ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும்
நிலவும். கணவன்-- மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை
இருக்கும். திருமண சுபகாரியங்களில் இருந்த
தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி
அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு
கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பல புதிய பொறுப்புகள் வந்து சேரும். தேவையற்ற
பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு
செய்து நல்ல லாபம் காண்பீர்கள். விநாயகர் வழிபாடும், முருக வழிபாடும் செய்வது மிகவும்
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18.
சந்திராஷ்டமம் - 10-07-2020 இரவு 10.55 மணி
முதல் 13-07-2020 பகல் 11.15 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக
இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே,
உங்கள் ராசியதிபதி புதன் 10-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதும்
அனுகூலமான அமைப்பாகும். மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய
மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எல்லா வகையிலும் வளர்ச்சியை அடைவீர்கள்.
தாராள தனவரவுகளால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நல்ல
அனுகூலமான பலன்களை அடைய முடியும். கணவன்-- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது
நல்லது. தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு
ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்--
வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள்
தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும்
நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை
குறைத்துக் கொள்ளலாம். விநாயகர் வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -12, 18.
சந்திராஷ்டமம் - 13-07-2020 பகல் 11.15 மணி முதல் 15-07-2020
இரவு 11.18 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
தராசு சிறியதாக இருந்தாலும்
எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு
பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல்
செவ்வாய் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை தரும் அமைப்பாகும்.
எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலை அடைவீர்கள். பண
வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு 3-ல்
இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவியிடையே
இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமணம்
போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உடல்
ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்--
வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா
சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று
மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளி
மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில்
கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். சிவ வழிபாடு
செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.
சந்திராஷ்டமம் - 15-07-2020 இரவு 11.18 மணி முதல் 18-07-2020
காலை 09.00 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
என்னதான் தோல்வியை சந்தித்தாலும்
தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது
அற்புதமான அமைப்பாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். 8-ல் சஞ்சரிக்கும் சூரியன்
16-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் இதுவரை உங்களுக்கு இருந்த வீண்
பிரச்சினைகள் குறைந்து சாதகமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் தாராளமாக
இருப்பதால் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு
பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுப காரியங்களுக்கான
முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில்
சுபிட்சமான நிலையிருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான
வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்-- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை
கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்
பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி
லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில்
சற்று தாமதநிலை உண்டானாலும் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். சிவ
வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16, 17.
சந்திராஷ்டமம் - 18-07-2020 காலை 09.00 மணி முதல் 20-07-2020
மாலை 03.28 மணி வரை.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
எப்பொழுதும் நல்ல
சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும்
ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால்
நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தொழில் ரீதியாக வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும்
சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில்
கணவன்-- மனைவியிடையே ஒற்றுமைக் குறையும். முடிந்த வரை வீண் பேச்சுகளை
தவிர்ப்பதும், மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் உத்தமம்.
சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால்
சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். வரவுக்கு
மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும்.
உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை
தவிர்க்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம். சனிப்ரீதியாக
விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற
பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும்
அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் சுக்கிரன்,
6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள்
பலமும் வளமும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும்
உடனே சரியாகி விடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் ஒற்றுமை
அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள்
தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 12-ல்
இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து
முன்னேற்றம் அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். சிறு சிறு
அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதி இருக்காது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத பலனே
கிடைக்கும். கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளை கொடுக்காமல்
இருப்பதும், பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதும் நல்லது. குருப்ரீதியாக
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 18.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களை தயவு
தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை
போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல்
புதன், 11-ல் கேது, குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றமிகுந்த பலன்களை
அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். புதிய
வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலை மேன்மையடையும். உடல் ஆரோக்கியத்திலும்,
உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது சிறப்பு. உற்றார் உறவினர்களை
அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்-- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள்
தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பணவரவுகள்
சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள்
குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப் பலன் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம்
மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். கிருத்திகை நாளில் விரதமிருந்து
முருக பெருமானை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி.
சமயத்திற்கேற்றார் போல
மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட
சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம
ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறு,
தேவையற்ற அலைச்சல், வீண் செலவுகள், குடும்பத்தில் நிம்மமதி குறைவு ஏற்படும்.
தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு,
உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண
வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது.
புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலை இருக்கும்.
எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள்
உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும்.
கொடுக்கல்-- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் கடுமையான நெருக்கடி
ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து
செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும்
மனதிற்கு நிம்மதியை தரும். பிரதோஷ நாளில் சிவ பெருமானையும், கிருத்திகை நாளில்
முருக பெருமானையும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 16, 17.
No comments:
Post a Comment