Wednesday, July 15, 2020

வார ராசிப்பலன் -  ஜுலை 19 முதல் 25 வரை 2020 


வார ராசிப்பலன் -  ஜுலை 19 முதல் 25 வரை 2020 
ஆடி 4 முதல் 10 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

செவ்

சுக்கி
ராகு புதன்
சந்தி

திருக்கணித கிரக நிலை

சூரிய
சனி (வ)

குரு(வ) கேது

 

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்   
மிதுனம்         18-07-2020 காலை 09.00 மணி முதல் 20-07-2020 மாலை 03.28 மணி வரை.
கடகம்            20-07-2020 மாலை 03.28 மணி முதல் 22-07-2020 இரவு 07.15 மணி வரை.
சிம்மம்           22-07-2020 இரவு 07.15 மணி முதல் 24-07-2020 இரவு 09.35 மணி வரை.
கன்னி            24-07-2020 இரவு 09.35 மணி முதல் 26-07-2020 இரவு 11.50 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
23.07.2020 ஆடி 08 ஆம் தேதி வியாழக்கிழமை திரிதியை திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எதிலும் துணிச்சலுடன் செயல்படும் ஆற்றலை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும் என்றாலும் சூரியன் 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. இதுவரை இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும் சூழ்நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலம் கிட்டும் என்றாலும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் சிறு தாமதத்திற்குப் பின் கிடைக்கும். சிவ வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -19, 20, 25.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்-- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மேன்மை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகரை வணங்கி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     20, 21, 22.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய கடந்த கால நெருக்கடிகள் குறைவதுடன் தேவைகளும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் கணவன்-- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்-- வாங்கலில் சற்று கவனமாக செயல்பட்டால் லாபகரமான பலனை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பிறகு கிடைக்கப்பெறும் என்றாலும் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது, ஹனுமன் துதிகளை படிப்பது மிகவும் நல்லது. ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     19, 20, 23, 24.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானமாக செயல்படுவதும், குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வதும் நல்லது. எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடுவதில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கொடுக்கல்-- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். துர்கையம்மனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     20, 21, 22, 25.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, 11-ல் ராகு, புதன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது. ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     19, 20, 23, 24.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதையும் கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்--- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் எதிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் நன்மையை அளிக்கும். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     19, 20, 21, 22, 25.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, 6-ல் செவ்வாய், 9-ல் புதன் சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மகாலட்சுமி வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     20, 21, 22, 23, 24.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியாக மேன்மையும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறையும். கணவன்-- மனைவி இடையே அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள்  பாராட்டப்படும். சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். சஷ்டி நாளில் விரதமிருந்து முருக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     23, 24, 25.
சந்திராஷ்டமம் - 18-07-2020 காலை 09.00 மணி முதல் 20-07-2020 மாலை 03.28 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, பொருளாதார ரீதியாக நெருக்கடி போன்றவை ஏற்படும் என்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி சிறு சிறு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. கணவன்-- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களும், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். சிவ பெருமானை வழிபட்டால் நற்பலன்கள் கிட்டும். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     19, 25.
சந்திராஷ்டமம் - 20-07-2020 மாலை 03.28 மணி முதல் 22-07-2020 இரவு 07.15 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அசையும் அசையா பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நல்ல பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள் என்றாலும் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது அகலகால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் கிடைக்கப்பெறும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். குரு பகவானை வணங்கினால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     19, 20, 21, 22.
சந்திராஷ்டமம் - 22-07-2020 இரவு 07.15 மணி முதல் 24-07-2020 இரவு 09.35 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் மேன்மைகளை அடைவீர்கள். எதிர்பாராத திடீர் தனசேர்க்கை ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சமும், மகிழ்ச்சியும் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு 11-ல் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் கிட்டும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் உயரதிகாரிகளிடம் பேதும் போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஹனுமன் வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     20, 21, 22, 23, 24.
சந்திராஷ்டமம் - 24-07-2020 இரவு 09.35 மணி முதல் 26-07-2020 இரவு 11.50 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் ராகு, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது, பணம் சம்பந்தமான கொடுக்கல்-- வாங்கலில் சற்று நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்களால் கணவன்-- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாககூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது நல்லது. ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -     23, 24, 25.

No comments: