வார ராசிப்பலன் - ஜுலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரை 2020
ஆடி 4 முதல் 10 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் -
2255. வடபழனி,
சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
செவ்
|
|
சுக்கி
|
புதன் ராகு
|
|
திருக்கணித கிரக நிலை
|
சூரிய
|
|
சனி
(வ)
|
|
||
குரு (வ)
கேது
|
|
|
சந்தி
|
கிரக மாற்றம்
01-08-2020 மிதுன சுக்கிரன்
அதிகாலை 05.10 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி 24-07-2020 இரவு
09.35 மணி முதல் 26-07-2020 இரவு 11.50 மணி வரை.
துலாம் 26-07-2020
இரவு 11.50 மணி முதல் 29-07-2020 அதிகாலை 02.48 மணி வரை.
விருச்சிகம் 29-07-2020
அதிகாலை 02.48 மணி முதல் 31-07-2020 காலை 07.05 மணி வரை.
தனுசு 31-07-2020
காலை 07.05 மணி முதல் 02-08-2020 பகல் 12.55 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
26.07.2020 ஆடி 11 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல்
09.00 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும்,
சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம
ராசிக்கு இருப்பதாலும் 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில்
சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலனை அடைவீர்கள்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு சூரியன் 4-ல் இருப்பதால்
இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில்,
வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல்
உண்டாகும். இதுவரை இருந்த போட்டிகள் வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து லாபகரமான
பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்-- மனைவி இடையே சிறு சிறு
வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஆதரவுடன்
செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கல்
போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும்
உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். சனிப்பிரதோஷ நாளில் சிவ பெருமானை
மனதார நினைத்து வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28.
சந்திராஷ்டமம் - 29-07-2020 அதிகாலை 02.48
மணி முதல் 31-07-2020 காலை 07.05 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும்,
சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி
நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய்
சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும்.
எடுக்கும் முயற்சியில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழிலாளர்களை அனுசரித்து
செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம்
உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு இருப்பதால்
கணவன்-- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து
செல்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற
வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களைப் பெறுவதில் தாமதம்
உண்டாகும் என்றாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக
அமையும். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம்
அடைவீர்கள். துர்கையம்மனையும் தட்சிணாமூர்த்தி¬யும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.
சந்திராஷ்டமம் - 31-07-2020 காலை 07.05 மணி
முதல் 02-08-2020 பகல் 12.55 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல்
இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி
நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த
விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம்
பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக்
கொள்வது உத்தமம். குரு 7-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு
உங்களது தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன்
உண்டாகும். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும்
ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை
அடைய முடியும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய
தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார
ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி
கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர்
அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். சனிப்பிரதோஷ நாளில்
விரதமிருந்து சிவ பெருமானையும் சனி பகவானையும் மனதார நினைத்து வழிபட்டால் சிறப்பான
பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு
எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு
சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் 6-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால்
எல்லா வகையிலும் மேன்மைகளை அடைவீர்கள். இருக்கும் பிரச்சினைகள் எல்லாம்
படிப்படியாக குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உங்களது பலமும் வலிமையும் கூடும். பணம்
பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க
கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள்
யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்-- மனைவியிடையே சிறு சிறு கருத்து
வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கல்
போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும்
விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய
வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த கௌரவமான பதவி
உயர்வுகளும், இடமாற்றங்களும் தக்க சமயத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். சிவ
வழிபாடும் அம்மன் வழிபாடும் நற்பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 31, 1.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல்
அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு
5-ல் குரு, 6-ல் சனி, 11-ல் ராகு, புதன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக
மேன்மையான பலன்கள், நினைத்தது நிறைவேறும் அமைப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில்
நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி
நிலவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள்
பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள்
வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள்
தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில் எதிர்பார்க்கும்
உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று
பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும்
கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார்
உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல
லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய
ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். சிவ வழிபாடும் முருக
வழிபாடும் செய்து வந்தால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு
தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும்
முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி, தாராள தனவரவு ஏற்படும். உங்கள் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்--
மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார
மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்--
வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல்
ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது.
உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும்.
சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல
லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால்
அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.
சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். துர்கையம்மனை மனதார நினைத்து வீட்டில்
விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 29, 30.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட
துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய், 10-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் கடந்த கால சிக்கல்கள் எல்லாம் மறைந்து ஏற்றமிகுந்த பலன்களை
அடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத
திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கிய
ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை
எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை மேலோங்கி இருப்பதுடன் எதிர்பாராத
உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 3-ல்
இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவியிடையே
இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும்
நிலவும். திருமணம் சம்பந்தமான சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும்.
உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும்,
பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம்
முன்னேற்றம் அடையலாம். கொடுக்கல்-- வாங்கலில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமை
விரதமிருந்து மகாலட்சுமி தேவியை நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால்
குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 31, 1.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி
தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல்
குரு, 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்பு
உண்டு. உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தாராள
தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் யாவும்
குறையும். கணவன்-- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை
பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு
பாதிப்புகள் தோன்றினாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருந்தால்
ஆரோக்கிய நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி
கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள்
ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்
கிட்டும். கொடுக்கல்-- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில்
நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள்
யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக
எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிவ பெருமானையும் விநாயக கடவுளையும் வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் தடையின்றி
நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 29, 30.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும்
வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் செவ்வாய், 8-ல்
சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண்
மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம்.
பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால்
கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று
தள்ளி வைப்பது உத்தமம். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள்
தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. சில நேரங்களில்
நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை
ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில்
மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது
உத்தமம். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க
முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற
வேண்டியிருக்கும். முருக கடவுளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றமான நிலை உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 31, 1.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எத்தனை துன்பங்கள்
ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல்
கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்றாலும் 3-ல் செவ்வாய், 5-ல்
சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை
அடைவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக
அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில்
சில தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப் பலன் கிட்டும். கணவன்-- மனைவியிடையே
சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள்
சேரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படாமல்
தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக
செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்--
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை
அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று
எதிர்பார்த்த லாபத்தை தரும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் நன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான
தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல்
புதன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், நவீனகரமான
பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்
தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்-- மனைவி இருவரும் விட்டு கொடுத்து
செல்வது நல்லது. தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன்
உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை
தடையின்றி செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக
செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக
எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமான நிலை உருவாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்
பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால்
அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும்
வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த
வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த
இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். துர்கையம்மனை வழிபடுவது
மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.
சந்திராஷ்டமம் - 24-07-2020 இரவு 09.35 மணி
முதல் 26-07-2020 இரவு 11.50 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி.
பொறுமையும்
தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே, உங்களுக்கு
ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் ராகு, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும்
நிதானத்துடன் செயல்படுவது, கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில்
சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது,
தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எவ்வளவு
நெருக்கடிகள் இருந்தாலும் தக்க சமயத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று
உங்கள் பிரச்சினைகள் யாவும் குறையும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து
விடுவீர்கள். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற
சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பணம்
கொடுக்கல்-- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம்
செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும்
தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள
முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். முருக வழிபாடு செய்வது
உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 31, 1.
சந்திராஷ்டமம் - 26-07-2020 இரவு 11.50 மணி
முதல் 29-07-2020 அதிகாலை 02.48 மணி வரை.
No comments:
Post a Comment