வார ராசிப்பலன் - செப்டம்பர் 06 முதல் செப்டம்பர் 12 வரை 2020
ஆவணி 21 முதல் 27 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் -
2255. வடபழனி,
சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
செவ் சந்தி |
|
ராகு |
|
திருக்கணித கிரக நிலை |
சுக்கி |
|
சனி(வ) |
சூரிய
|
||
குரு(வ)
கேது |
|
|
புதன் |
கிரக மாற்றம்
10-09-2020 செவ்வாய் வக்ர
ஆரம்பம் அதிகாலை 03.50
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம் 06-09-2020
அதிகாலை 02.20 மணி முதல் 08-09-2020 மாலை 03.10 மணி வரை.
ரிஷபம் 08-09-2020
மாலை 03.10 மணி முதல் 11-09-2020 அதிகாலை 02.38 மணி வரை.
மிதுனம் 11-09-2020
அதிகாலை 02.38 மணி முதல் 13-09-2020 காலை 10.35 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
06.09.2020 ஆவணி 21 ஆம்
தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி அசுவனி நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30
மணி முதல் 06.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும்
பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது
அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல்
சுக்கிரன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தாராள தனவரவு
ஏற்படும். உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சியில்
அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சிறப்பான பண வரவால் கடன்கள் குறையும். திருமண
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். செவ்வாய் ஜென்ம
ராசியில் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை
செலுத்துவது மிகவும் நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள்
நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக
செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம்
செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை
தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற வேலை வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்--
வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். சிவ வழிபாடும்
முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 11, 12.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும்
தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல்
சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க
இடையூறுகள், எடுக்கும் காரியங்களில் தடைகள் ஏற்படும். உடல் நிலையில் அடிக்கடி
பாதிப்புகள் ஏற்படலாம். கணவன்-- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால்
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம்
ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். பணவரவு தேவைகேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை
குறைப்பது நல்லது. இவ்வாரத்தில் புதன் 5-ல் இருப்பதால் எதிர்பாராத பொருளாதார
உதவிகள் கிடைத்து அதன்மூலம் உங்களுக்குள்ள நெருக்கடிகள் ஓரளவு குறையும். பணம்
கொடுக்கல்-- வாங்கலில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த
நிலை இருந்தாலும் லாபம் குறையாது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் புதிய
வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின்
ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை
பயன்படுத்திக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை
குறைத்துக் கொள்ள முடியும். துர்கையம்மன் வழிபாடு மேன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம்
1,2,3-ஆம் பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல
ஈடுபாடும் கலை, இசைத்துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி
நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதும் உங்கள் ராசிக்கு 3-ல்
சூரியன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் பல்வேறு வகையில் ஏற்றத்தை தரும்
அமைப்பாகும். சகல விதத்திலும் சுபிட்சமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை
வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள்
சேரும். கணவன்- மனைவி இடையே அனுசரித்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திரர்கள் வழியில் சுப
செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும்
சமாளித்து விடுவீர்கள். குரு 7-ல் சஞ்சரிப்பதால் திருமணம் போன்ற சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண சம்பந்தமான
கொடுக்கல்-- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல்
இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து
ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதுடன் வேலைப்பளு சற்றுக்
கூடுதலாக இருக்கும். சனிக்கிழமை விரதமிருந்து சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி
வழிபட்டால் சங்கடங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 11, 12.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
தன்னை நம்பியவர்களுக்கு
நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி
நேயர்களே, உங்கள் ராசியில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும்
எதிர்கொண்டு வளமான பலன்களை அடைவீர்கள் என்றாலும் சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால்
பேச்சில் பொறுமையுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.
குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்-- மனைவியிடையே வீண்
வாக்குவாதங்கள் ஏற்பட்டு மன அமைதி குறையலாம். விட்டு கொடுத்து செல்வது உத்தமம்.
உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம்
செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில்
சிறு தாமதத்திற்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான
நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டாகும்.
வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்--
வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். சிவ வழிபாடும்
சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 9, 10.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ
பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும்
விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 5-ல் குரு, 6-ல் சனி
சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முழுமையாக விலககூடிய யோகம் உண்டு.
தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும்
முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும்
நிறைந்திருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது
நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக
செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம்
கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை
உயர்வடையும். கடன்கள் படிப்படியாக குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது.
உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்-- வாங்கலில்
சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள்
உண்டாகும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும்.
விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10, 11, 12.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
எவ்வளவு தான் கற்றறிந்து
இருந்தாலும் எந்தவித அகம் பாவமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு
கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு,
பணவரவில் இடையூறுகள் இருக்கும் என்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது,
முடிந்தவரை வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. உற்றார் உறவினர்களையும்
குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்து நடப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை
தவிர்க்கலாம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன்
சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள
முடியும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கடன்கள் குறையும்.
எடுக்கும் காரியங்களில் சிறிய தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார
ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை
பயன்படுத்தி கொண்டால் எதிர்பார்க்கும் லாபங்களை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில்
சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது
இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது
நல்லது. முருக வழிபாடு செய்வது, கிருத்திகை சஷ்டி விரதங்கள் கடைப்பிடிப்பது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12.
சந்திராஷ்டமம் - 06-09-2020 அதிகாலை 02.20
மணி முதல் 08-09-2020 மாலை 03.10 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
எந்தவொரு விஷயத்திலும்
சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை
எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள்
நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். மங்களகரமான
சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள்
பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய
தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி
வரும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள்
பாராட்டப்படும். செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது
நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவதால்
அபிவிருத்தியைப் பெருக்க முடியும். சனிப்ரீதியாக விநாயகர் வழிபாடும் ஆஞ்சநேயர்
வழிபாடும் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7.
சந்திராஷ்டமம் - 08-09-2020 மாலை 03.10 மணி முதல் 11-09-2020
அதிகாலை 02.38 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
பேச்சில் கடுமை இருந்தாலும்
அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல்
கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன்,
10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை
அடைவீர்கள். தொழில், வியாபார ரீதியாக மேன்மை, புதிய வாய்ப்புகளை அடையும் யோகம்
உண்டாகும். இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி
முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான
உறவு உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில்
வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த
உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று
சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட
முடியும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய
முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள்
அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணமும்
நிறைவேறும். கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அம்மன் வழிபாடும்
விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 9, 10.
சந்திராஷ்டமம் - 11-09-2020 அதிகாலை 02.38 மணி முதல் 13-09-2020
காலை 10.35 மணி வரை.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
மற்றவர்களுக்கு உதவி
செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட
தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால்
நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கும். பணம்
சம்பந்தமான கொடுக்கல்-- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை
அடைய முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு
எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள்
திருப்திகரமாக இருக்கும் என்றாலும் குரு ஜென்ம ராசியில் இருப்பதால் எதிலும்
சிக்கனமாக செயல்பட்டால் வளமான பலன்களை பெற முடியும். அசையும் அசையா சொத்துக்கள்
வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கணவன்-- மனைவி இடையே
கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது
நல்லது. சுபகாரிய முயற்சிகனை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான
நிலை இருந்தாலும் அன்றாட பணிகளை செய்ய முடியும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக
செயல்படுவார்கள். கிருத்திகை நாளில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால்
நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10, 11, 12.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும்,
நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன், 12-ல் குரு
சஞ்சரிப்பதால் வீண் செலவுகள், தேவையற்ற மனகுழப்பங்கள் ஏற்படும் என்பதால் நீங்கள்
எதிலும் பொறுமையுடனும், கவனத்துடனும் செயல்படுவது நல்லது. அதிக முதலீடு கொண்ட
செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகச் சிறப்பு. ஜென்ம ராசியில் சனி
சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். குடும்பத்தில்
உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அனுசரித்து
செல்வது உத்தமம். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம்
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை
நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து
செல்வதும் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவதும் நல்லது. உத்தியோகத்தில்
வேலைபளு கூடினாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். சனி பகவானை
வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த
பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக
விளங்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, கேது
சஞ்சரிப்பதால் தற்போது உள்ள சின்ன சின்ன பிரச்சினைகள் கூட குறைந்து சகல விதத்திலும்
முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும்
சமாளித்து வெற்றிகளை பெறுவீர்கள். கணவன்-- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்கள், உடன் பிறந்தவர்களால்
அனுகூலப் பலன் கிட்டும். சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து
செல்வது நல்லது. தாராள தனவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உடல்
ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை
ஏற்படுத்தும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில்
இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி
எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன்
அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி, மனை வாங்கும்
எண்ணங்களும் நிறைவேறும். ராகு காலத்தில் துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால்
குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
பயந்த சுபாவம் கொண்டவராக
இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல்
உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல்
சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு மேன்மைகள் உண்டாகும். எடுக்கும்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள்
ஏற்படுவதை தவிர்க்க முடியும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய
சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். கணவன்-- மனைவி வீண்
வாக்குவாதங்களை தவிர்ப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும்
நற்பலனைத் தரும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது.
பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று
விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க
முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
வேலைபளு குறையும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் மேன்மைகள்
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10.
1 comment:
I came to this blog and it helped me to add few new points to my knowledge. Actually, I am trying to learn new thing wherever I find. Impressive written blog and valuable information shared here.
transits
Post a Comment