வார ராசிப்பலன் - செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020
புரட்டாசி 4 முதல் 10 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் -
2255. வடபழனி,
சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
செவ்(வ) |
|
ராகு |
|
திருக்கணித கிரக நிலை 20.09.2020 |
சுக்கி |
|
சனி(வ) |
|
||
குரு
கேது |
|
சந்தி |
சூரிய புதன் |
கிரக மாற்றம்
22-09-2020 துலா புதன் மாலை
04.52
23-09-2020 ரிஷப ராகு காலை
08.22
23-09-2020 விருச்சிக கேது
காலை 08.22
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம் 19-09-2020
பகல் 02.40 மணி முதல் 21-09-2020 பகல் 03.15 மணி வரை.
விருச்சிகம் 21-09-2020 பகல் 03.15 மணி முதல் 23-09-2020
மாலை 06.25 மணி வரை.
தனுசு 23-09-2020 மாலை
06.25 மணி முதல் 26-09-2020 அதிகாலை 00.40 மணி வரை.
மகரம் 26-09-2020
அதிகாலை 00.40 மணி முதல் 28-09-2020 காலை 09.40 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
20.09.2020 புரட்டாசி 04
ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை
06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும்
பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது
அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல்
சுக்கிரன், 6-ல் சூரியன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு
ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள்
உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-
மனைவி இருவரும் அனுசரித்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். உற்றார்
உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அசையும் அசையா
சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த
பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய
வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். தொழில் விருத்திக்காக
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன்
செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான
நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். விநாயகர்
வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பது நற்பலனை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 26.
சந்திராஷ்டமம் - 21-09-2020 பகல் 03.15 மணி
முதல் 23-09-2020 மாலை 06.25 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கி
கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 5-ல் புதன், 9-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து
உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள்
ஏற்படும் என்பதால் முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல்
ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை
தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள்
உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவிற்கு சாதகமாக இருக்கும் என்றாலும் குரு 8-ல்
சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது
உத்தமம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற
முடியும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி
கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள்
நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். செவ்வாய் 12-ல்
சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். துர்கையம்மனுக்கு குங்கும
அபிஷேகம் செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.
சந்திராஷ்டமம் - - 23-09-2020 மாலை 06.25
மணி முதல் 26-09-2020 அதிகாலை 00.40 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல
ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 7-ல் குரு, 11-ல் செவ்வாய்
சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை, தொழில் ரீதியாக வளமான பலன்கள் ஏற்படும்
வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களது செயல்கள் அனைத்திலும் பரிபூரண வெற்றி
கிடைக்கும். சொந்த வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப்
பெற முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள்
விரிவடையும். பண வரவுகள் எதிர்பார்த்த
அளவுக்கு சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். பொன், பொருள் சேரும்.
திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை
ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள்
ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை
அனுசரித்து செல்வதன் மூலம் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களை
குறைப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள்
உண்டாகும். சிவ வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 24, 25.
சந்திராஷ்டமம் - 26-09-2020 அதிகாலை 00.40 மணி முதல் 28-09-2020
காலை 09.40 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
கோபமாகவும் வேகமாகவும்
பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும்
ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல்
சூரியன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நினைத்தது
நடக்கும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம்
தெரியாமல் விலகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டி,
பொறாமைகள் குறைந்து வளமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும்
கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு
சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும்
சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து
செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால்
மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அசையும் அசையா சொத்துக்களால்
சிறு சிறு அலைச்சல்களை சந்தித்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். விநாயகரையும்
ஆஞ்சநேயரையும் வழிபட்டால் சகல நன்மைகளை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
எந்தவொரு விஷயத்திலும்
சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை
எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே,
உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 6-ல் சனி சஞ்சரிப்பதாலும்
சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடையும் வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள்
மிக சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால்
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஆதரவாகச்
செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால்
அனுகூலம் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால்
லாபம் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன்
கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக
செயல்பட முடியும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும்
நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி
பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும்
செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 26.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
அனைவரிடத்திலும் அன்பும்
பண்பும், மரியாதை கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி
நேயர்களே, உங்கள் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல்
செய்வதென்றாலும் உணர்ச்சிவசப் படாமல்
நிதானமாக செயல்படுவது நல்லது. முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து
செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் குரு இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக
செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது
நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். 8-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வு போன்றவை ஏற்படும்
என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவது நல்லது.
அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில்
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது
நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் தட்டி கொடுத்து வேலை வாங்குவது
உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு
சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
துர்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை
செய்து வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 22, 23.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
தம்முடைய எந்த
பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும்
துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
உடனிருப்பவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். ராசியதிபதி சுக்கிரன் 10-ல்
இருப்பதால் ஒருசில உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல்
நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால்
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவி பேச்சில்
நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது
உத்தமம். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.
தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும்
லாபங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதப்படும். புதிய வேலை
தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். சனி பகவானுக்கு கருப்பு
வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24, 25.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எவ்வளவு தான்
கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு
கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதாலும்
2-ல் குரு, 11-ல் சூரியன் இருப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடையும்
வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவால் பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும்.
கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டு கொடுத்து
நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு
நல்ல வரன்கள் தேடி வரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எடுக்கும் முயற்சிகளில்
வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக
இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும்.
சிலருக்கு வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில்
மட்டும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்
என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்
உயர்வுகள் தடையின்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப்
பெற முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அடைவீர்கள்.
பயணங்களால் அனுகூலம் கிட்டும். விநாயகர் வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும்
செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 26.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பயந்த சுபாவம் கொண்டவராக
இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல்
உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன்,
புதன் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம்
இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள்
கை கூடும். சனி 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, கணவன்-
மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக
செயல்படுவார்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும்
பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் இருந்தாலும்
எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு
பின் கிடைத்தாலும் லாபங்கள் தடைப்படாது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக
செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும்
உடனே சரியாகிவிடும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச்
செயல்படுவது நல்லது. ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் வாழ்வில்
மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24, 25.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும்,
நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், புதன்
சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் எதிலும் சற்று
பொறுமையுடன் செயல்பட்டால் வளமான பலன்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில்
எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால்
உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண்
கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற
இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள்
உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து
கொண்டால் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று
பாடுபட வேண்டியிருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் குறையும்.
தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தினமும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால்
எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23, 26.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவர்களுக்கு உதவி
செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும்
கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு
சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும்.
உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான
நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும்
குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. சூரியன் 8-ல் இருப்பதால் உடல் நிலையில் கவனம்
செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை
அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான
முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக
அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும்
வாய்ப்பு ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை
ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி
பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கடன்கள் சற்றே
குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.
மகாலட்சுமியை வழிபாடு செய்வது, அஷ்ட லட்சுமி ஸ்லோகம் சொல்வதால் சகல
சௌபாக்கியங்களும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23,
24, 25.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி.
தன்னை நம்பியவர்களுக்கு
நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லா
வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவில் இருந்த இடையூறுகள் நீங்கி பொருளாதார
நிலை மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உடல்
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட
முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சின்ன சின்ன
வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும்
சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார்
உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற
பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற
உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவாக
செயல்பாடுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். சஷ்டியன்று விரதமிருந்து முருக
கடவுளை வழிபட்டு வந்தால் இல்லம் தேடி சுப செய்திகள் வரும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25,
26.
சந்திராஷ்டமம் - 19-09-2020 பகல் 02.40 மணி முதல் 21-09-2020 பகல் 03.15 மணி
வரை.
No comments:
Post a Comment