Thursday, September 24, 2020

வார ராசிப்பலன் -செப்டம்பர் 27 முதல் 3 வரை 2020

வார ராசிப்பலன் -செப்டம்பர் 27 முதல் 3 வரை 2020 

புரட்டாசி 11 முதல் 17வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

செவ்(வ)

ராகு

 

 

திருக்கணித கிரக நிலை

27.09.2020

சுக்கி

 சனி(வ)

சந்தி

 

குரு 

 

    கேது 

புதன்

சூரிய

 

 

 

 

 

 

 

 

கிரக மாற்றம்

28-09-2020 சிம்ம சுக்கிரன் அதிகாலை 01.02

29-09-2020 சனி வக்ர முடிவு பகல் 10.39

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மகரம்          26-09-2020 அதிகாலை 00.40 மணி முதல் 28-09-2020 காலை 09.40 மணி வரை.

கும்பம்         28-09-2020 காலை 09.40 மணி முதல் 30-09-2020 இரவு 08.35 மணி வரை.

மீனம்            30-09-2020 இரவு 08.35 மணி முதல் 03-10-2020 காலை 08.50 மணி வரை.

மேஷம்         03-10-2020 காலை 08.50 மணி முதல் 05-10-2020 இரவு 09.40 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.09.2020 புரட்டாசி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

 

28.09.2020 புரட்டாசி 12 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் புதன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்-மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முருக வழிபாட்டையும் துர்கை வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்வில் மேன்மைகளை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 8-ல் குரு, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள், மற்றும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை, வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்-வாங்கலில் முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது, எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           29, 30, 1, 2.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் கேது, 7-ல் குரு சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்-வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் -           1, 2, 3.

சந்திராஷ்டமம் - 26-09-2020 அதிகாலை 00.40 மணி முதல் 28-09-2020 காலை 09.40 மணி வரை.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தமாதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளி மாநிலங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நவகிரகங்களில் குருவிற்கும் சனிக்கும் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           27, 3.

சந்திராஷ்டமம் - 28-09-2020 காலை 09.40 மணி முதல் 30-09-2020 இரவு 08.35 மணி வரை.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சனி சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு இருந்த தடங்கல்கள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பதும், ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் சிறப்பு. கணவன்-மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். மகாலட்சுமி வழிபாடு மங்களத்தை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -           27, 28, 29, 30.

சந்திராஷ்டமம் -30-09-2020 இரவு 08.35 மணி முதல் 03-10-2020 காலை 08.50 மணி வரை.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 2-ல் சஞ்சரிப்பதும் 3-ல் கேது சஞ்சரிப்பதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றங்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் செல்லும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். பிரதோஷ நாளில் சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -           28, 29, 30, 1, 2.

சந்திராஷ்டமம் - 03-10-2020 காலை 08.50 மணி முதல் 05-10-2020 இரவு 09.40 மணி வரை.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். முடிந்த வரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். கணவன்-மனைவி விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை போன்ற சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் அடை முடியும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது, சனிக்கவசங்கள் படிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           1, 2, 3.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு வளமான பலன்களை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். ஏகாதசி நாளில் விரதமிருந்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் -           27, 3.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி நிம்மதி ஏற்படக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவில் இருந்த இடையூறுகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமான பலனை அடையலாம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த படி நல்ல வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           28, 29, 30.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். செவ்வாய் 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கினால் கஷ்டங்கள் விலகி நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           27, 28, 1, 2.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், கடந்த கால சோதனைகள் விலகும் நிலை இவ்வாரத்தில் உள்ளது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட நட்பு பாராட்டுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்-மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷம் மற்றும் பௌர்ணமி விரதங்கள் கடைப்பிடிப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           29, 30, 3.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் சாதகமான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். எதிர்பாராத திடீர் தன வரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 7-ல் சூரியன் இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -           27, 28, 1, 2.


No comments: