Today rasi palan – 13.09.2020
இன்றைய ராசிப்பலன் - 13.09.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
13-09-2020, ஆவணி 28, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.17
வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன்
- 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00,
எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,
|
செவ்(வ) |
|
சந்தி ராகு |
|
திருக்கணித கிரக நிலை
13.09.2020 |
சுக்கி |
|
சனி(வ) |
சூரிய |
||
குரு(வ) கேது |
|
|
புதன் |
இன்றைய ராசிப்பலன்
- 13.09.2020
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும்.
பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக
இருக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன்
மூலம் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு
மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம்
உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவிற்கு மீறிய செலவுகள் இருக்கும். நண்பர்களுடன்
வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அலைச்சலுக்குப் பின் அனுகூலப்
பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில்
உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால்
மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
சுப செலவுகள் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால்
வீண் பிரச்சினைகள் வரக்கூடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில்
கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி
இன்று இல்லத்தில் மனம் மகிழும் நிகழச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால்
பெருமை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில்
ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில்
நல்ல லாபம் உண்டாகும்.
துலாம்
இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம்
உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு உண்டாகும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல
மாற்றங்கள் ஏற்படும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்
உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.
தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 10.36 மணி வரை சந்திராஷ்டமம்
இருப்பதால் மதியத்திற்கு பிறகு ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன்
செய்வது உத்தமம்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு காலை 10.36 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால்
மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான
புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை
தவிர்க்கவும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சுபசெலவுகள் செய்ய நேரிடும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த
இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின்
சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்த்தில்
இருந்த பிரச்சினைகள் குற¬யும். புதிய வண்டி வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்று ஆடம்பர செலவுகளால் பணப்பிரச்சினை உண்டாகலாம். பொருளாதார நெருக்கடியால்
கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம்
காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.
No comments:
Post a Comment