Thursday, November 5, 2020

மகரம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021

மகரம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 12-க்கு அதிபதியான ஆண்டு கோளான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீண் விரயங்கள் குறைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் உங்களுக்கு ஜென்மச்சனி நடப்பது சற்று நெருக்கடிகளையும், ஆரோக்கிய குறைபாடுகளையும் ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதியை ஏற்படுத்த மாட்டார். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது மூலம் ஏற்படும் சிறுசிறு உடம்பு பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆம் வீடுகளை பார்ப்பதால் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, பிள்ளைகளால் சாதகமான பலன்கள், பூர்வீக சொத்து மூலம் அனுகூலம் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதாலும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதாலும் எந்த பிரச்சினைகளையும் எதிர் கொள்ளும் வலிமை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும் என்றாலும் எதிலும் முன்னேச்சரிக்கையுடன் செயல்பட்டால் சிக்கலை சமாளிக்க முடியும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம்.

உங்கள் ராசிக்கு கேது பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எந்த செயலிலும் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையும் வாய்ப்பு கிடைக்கும். வீண் செலவுகளை குறைத்து கொண்டால் கடனில்லாத கன்னிய வாழ்க்கை அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று பொருட் தேக்கங்கள் ஏற்படும் என்றாலும் உங்களின் தனி திறனால் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைவீர்கள். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். வேலைபளு அதிகப்படியாக இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும்.

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக தன  ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். தாராள தன வரவால் கடன் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மனைவி பிள்ளைகளின் உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும். பணி சுமை காரணமாக உடல் சோர்வு, அதிக அலைச்சல் உண்டாகும். தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடந்த கால கருத்து வேறுபாடுகள் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புத்திரர்களால் சுப செலவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடிகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு சற்று முன்னேற்றமான பலனை அடைவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். வம்பு வழக்குகளில் கவனத்துடன் இருந்தால் பிரச்சினைகளை சாமாளிக்க முடியும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியங்களிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவர செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு அனுகூலங்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதை தவிர்க்க முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும்.

பெண்கள் 

உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி வரும். எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். புத்திர வழியில் நல்லது நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும்.

அரசியல்

பொதுப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்து சற்று குறைவாக இருக்கும். கூலி ஆட்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் கவனமாக ஈடுபடுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விடாமல் பாதுகாத்து கொண்டால் ஏப்ரலுக்கு பிறகு முன்னேற்றமான பலனை அடைய முடியும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகளில் நெருக்கடி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபகமறதி, மந்த நிலை உண்டாகும். கவனக் குறைவால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற முடியாது. தேவையற்ற நண்பர்களின் சகவாசமும் பொழுது போக்குகளும் உங்களின் வாழ்க்கை நிலையை மாற்றி அமைக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

 

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021

குருபவான் சூரியன் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற வாக்குவாதங்கள், மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்து விடுவது உத்தமம். உங்கள் ராசிக்கு கேது 11-ல் இருப்பதால் எதிர்பாராத வகையில் பண வரவுகள் கிடைக்கப் பெற்று உங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகப் பலனை சிறு தடைக்குப் பின் அடைவீர்கள். உடல் நிலை சிறப்பாக அமைய உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும், அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேற முடியும்.

குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021

குருபகவான் சந்திரன் நட்சத்திரமான திருவோணத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பொருளாதார தட்டுப்பாட்டால் வீண் சஞ்சலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் ராகு 5-ல் இருப்பதால் புத்திர வழியில் வீண் செலவுகளும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறையப் போட்டிகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள். உங்கள் ராசிக்கு 11-ல் கேது சஞ்சரிப்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலப் பலனை அடைவீர்கள். உங்களின் திறமைகளுக்கேற்ற உயர்வுகள் தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க நேரிடுவதால் வேலைப்பளு அதிகரிக்கும். கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021

குருபகவான் தனது நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சேர்க்கைப் பெற்று  சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற எதிர்நீச்சல் போட வேண்டும். சர்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஒரளவுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சற்று அனுகூலங்கள் ஏற்படும், பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அனுகூலங்களை பெற முடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021

ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் அதிசாரமாக குரு சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் குறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஏற்படும் எந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021

குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். சனி பகவானும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான நிலை உண்டாகும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை பெற முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் லாபம் தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021

குருபகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதாரநிலை சுமாராக இருந்தாலும் சர்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள்.

 

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது, நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை, கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8                      நிறம் - நீலம், பச்சை            கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்            திசை - மேற்கு                          தெய்வம் - விநாயகர்

No comments: