விருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L,
M.A.astro. PhD in
Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமும் தன, பஞ்சமாதிபதியுமான பொன்னவன் எனப் போற்றப்படும் குருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஒரளவுக்கு திருப்தியளிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும் என்றாலும் பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க முயற்சித்தால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்றமடைய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் ஏற்படும் பணி சுமையை குறைத்து கொள்ள முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
குரு தனது விஷேச பார்வையாக உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆம் வீடுகளை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பெரியோர்களின் ஆசி சிறப்பாக இருக்கும் நிலை, பூர்வீக சொத்து வழியில் அனுகூலங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும்.
உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக 4-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் இக்காலங்களில் மிகவும் வளமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனையும் அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகாது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனை அடைவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் முனைப்புடன் முயற்சித்தால் நல்லது நடக்கும். புத்திரர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும் என்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவுக்கு சிறப்பான லாபத்தைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் சாதகமான பலனை அடைய முடியும். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும், வாக்குறுதிகளை கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. வம்பு வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவு படுத்த அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் ஆடர்கள் கிடைக்கும். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் எந்த போட்டி பொறாமைகளையும் எதிர் கொள்ளக்கூடிய ஆற்றல் பெறுவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் என்றாலும் எதிர்பார்த்த நிலையை அடைய சற்று பொறுமை காக்க வேண்டும்.
பெண்கள்
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் உண்டாகாது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்த்தில் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப்பலனைப் அடைய முடியும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறு இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும்.
அரசியல்
மக்களின் தேவையறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதியாக செயல்படுவீர்கள். மறைமுக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்து செயல்படுவது நல்லது.
விவசாயிகள்
விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை நீங்கள் எளிதில் எடுத்து விடுவீர்கள். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். நவீன கருவிகளை வாங்குவீர்கள். பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாக கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியூர் செல்ல கூடிய யோகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது. உடன் இருப்பவர்களிடம் உங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
மாணவ- மாணவியர்
கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். முயற்சி செய்வதால் முடியாதது ஒன்றுமில்லை என்ற அளவிற்கு தேர்ச்சிகளை பெறுவீர்கள். பள்ளி கல்லூரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஊக்க மருந்தாக அமையும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021
குருபகவான் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் சனி 3-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத பணவரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் சேரும். குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். ஜென்ம ராசியில் கேது சஞ்சரிப்பதால் விட்டு கொடுத்து சென்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்பால் நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021
குருபகவான் சந்திரன் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சில இடர்பாடுகளை சந்திப்பீர்கள் என்றாலும் சனி 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களின் பலமும் வளமும் சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் பலனளிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானமாக இருப்பது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் எந்தவொரு காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள். பூர்வீக சொத்து வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021
குருபகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. கணவன்- மனைவியிடையே சற்று விட்டுக் கொடுத்து நடப்பது உத்தமம். சனி முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஓரளவுக்கு சிறப்பான பலனைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் ஏற்றமும் உண்டாகும். கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்து செயல்பட்டால் தொழிலை நன்கு அபிவிருத்தி செய்ய முடியும். முதலாளி, தொழிலாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியான நிலையினை அடைவார்கள். உடனிருப்பவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.
குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021
உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்த குருபகவான் அதிசாரமாக சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள தடைகள் விலகி அனுகூலங்கள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியான நிலையை அடைவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கப் பெற்று நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கடன்கள் குறையும். வெளியூர், செல்ல கூடிய வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021
குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஓரளவிற்கு முன்னேற்றத்தை அடைவீர்கள். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். சிலருக்கு அசையாச் சொத்துக்களாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரள நிலையில் நடைபெற்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று சிறப்பான லாபத்தைப் பெற இயலும் என்றாலும் போட்டி பொறாமைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளிடம் சற்று அனுசரித்து சென்றால் தொழில் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் கௌரவமான பதவிகளை அடைய முடியும். மாணவர்களின் கல்வித்திறன் ஓரளவுக்கு உயரும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு உயர்வுகளைப் பெறுவீர்கள்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021
குருபகவான் தனது நட்பு நட்சத்திரமான அவிட்டத்தில் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. எதிலும் பொறுமையுடன் இருப்பது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சியில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்றாலும் சனி 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்க முயற்சித்தால் நற்பலன் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் எதிலும் திறம்பட செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலில் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். நல்ல வாய்ப்புகள் வருவதால் உங்களது வாழ்க்கை தரம் உயரும். வெளியூர் செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை - செவ்வாய், வியாழன்
கல் - பவளம், திசை - தெற்கு தெய்வம் - முருகன்
No comments:
Post a Comment