Thursday, November 5, 2020

மீனம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021

 

மீனம்  - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய உங்கள் ராசியாதிபதி குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். 11-ல் சஞ்சரிக்கும் குரு- சனி சேர்க்கை பெற்று சஞ்சரிக்க இருப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் சர்ப்ப கிரகமான ராகு சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நனவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன்கள் விலகி சேமிக்க முடியும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். சிலருக்கு சிறப்பான குழந்தைப் பாக்கியம் கிட்டும். வீடு, மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடைய முடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறைந்து பணியில் நிம்மதியுடன் பணி புரிய முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று உங்கள் திறமைகள் வெளிப்படும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயர்வடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கேது 9-ல் சஞ்சரிப்பதால் ஆன்மீக ஈடுபாடு மற்றும் ஸ்தல தரிசனம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. எது எப்படி இருந்தாலும் 11-ல் சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் லாபகரமான பலனை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

உங்களின் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மன நிம்மதியை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்க முயற்சித்தால் நற்பலன் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி மற்றும் காண்டிராக்ட் துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல லாபமும் பெரிய மனிதர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதிக்க முடியும். வழக்குகள் பைசலாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த மந்த நிலை விலகி நல்ல மேன்மை உண்டாகும். நல்ல லாபத்தை அடைந்து கடன்களை பைசல் செய்ய முடியும். தொழிலை விரிவுபடுத்த அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி வரும்.

உத்தியோகம்

தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு சம்பள பாக்கிகள் யாவும் உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்க சமயத்தில் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புக்கள் மேலும் உங்களின் உயர்வுகளுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். உங்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புபாக செயல்படுவீர்கள். கணவர் வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீன பொருட் சேர்க்கைகள் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றங்கள் கிடைக்கும்.

அரசியல்

உங்களின் பெயர் புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவ பதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்கள் மீது உள்ள அவபெயர் விலகி மன நிம்மதி ஏற்படும்.

விவசாயிகள்

நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். பங்காளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வம்பு, வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.

கலைஞர்கள்

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளி உலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெற முடியும். ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணபாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் மேன்மையான நிலைகள் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள். கல்வி மட்டுமின்றி விளையாட்டுப் போட்டி, கவிதை, கட்டுரை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

 

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021

உங்கள் ராசியாதிபதி குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் கடந்த கால பாதிப்புகள் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற உங்களது எண்ணங்கள் நிறைவேறும். வெளியூர் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும்.

குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021

குருபகவான் திருவோண நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு 11-ல் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும் 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றி கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவேர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021

குருபகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதும், ராகு 3-ல், சனி 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வகையில் நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறைவதால் வரவேண்டிய வாய்ப்புகளும் லாபங்களும் தடையின்றி வந்து சேரும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமானப் பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள்.

குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021

குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் இருந்தாலும் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் உங்களது வேலைபளுவை குறைத்து கொள்ள முடியும். கேது 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021

குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021

உங்கள் ராசியதிபதி குருபகவான் தனது நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதும், 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி உங்களுக்கு உதவி செய்வார்கள்.

 

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ராசியாதிபதி என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

உங்கள் ராசிக்கு 9-ல் கேது சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   கிழமை - வியாழன், ஞாயிறு             திசை - வடகிழக்கு

கல் - புஷ்ப ராகம்    நிறம் - மஞ்சள், சிவப்பு                           தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

No comments: