வார ராசிப்பலன்
நவம்பர் 29 முதல் டிசம்பர்
5 வரை 2020
கார்த்திகை 14 முதல் 20 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் -
2255. வடபழனி,
சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
04.12.2020 கார்த்திகை 19
ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை
07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும்,
சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், 12-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகி
மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு
விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது, தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார்
உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க
முடியும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சுக்கிரன் 7-ல் இருப்பதால்
நெருங்கியவர்களின் உதவியால் உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள்
குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்-
மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தல் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும்.
கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும்
வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பெரிய முதலீடு கொண்டு
செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை
தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து
தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி நாளில்
விரதமிருந்து விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும்,
சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி
நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் லாப ஸ்தானத்தில்
செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த
பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண
வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண
சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும்.
உற்றார் உறவினர்களையும் உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-
மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து
கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல்
ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய
முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக
இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின்
பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும்
கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அம்மன்
வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 1, 4, 5.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல்
இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால்
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். செவ்வாய் 10-ல்
இருப்பதால் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுகள்
சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொள்வது நல்லது. தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும்
தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான
பலனை அடையலாம். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும்.
கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய
வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும்
கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். முடிந்த வரை தேவையற்ற
பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால்
எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - - 2, 3.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு
எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில்
அனுகூலங்கள் கிடைக்கும். ராகு 11-ல் இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் உங்களுக்குள்ள கடன்கள் எல்லாம்
குறையும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை போன்றவை ஏற்படும். திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். அசையும் அசையா
சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் வருகை
மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்-
வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்த வரை பெரிய தொகைகளை
கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய
வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால்
அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும்
உயர்வுகளும் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிவ
வழிபாடும் சனி வழிபாடும் செய்தால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - - 29, 30, 1, 4, 5.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல்
அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, நீங்கள் எதிலும்
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாகும். உங்கள் ராசியதிபதி சூரியன் 4-ல்
சஞ்சரிப்பதும், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்களுக்கு தேவையற்ற அலைச்சலை தரும்
அமைப்பாகும். சனி உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குறிப்பாக வாகனங்களில் செல்கின்ற போது நிதானம்
தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு
சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்
என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. அசையும் அசையா
சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும்
செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம்
ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க
வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில்
வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். சிவ வழிபாடும்
முருக வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - - 29, 30, 1, 2, 3.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு
தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், கேது, 5-ல் குரு சஞ்சரிப்பது எடுக்கும்
முயற்சியில் அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி,
தாராள தனவரவு ஏற்படும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது
மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை
வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக
செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள்
தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில்
வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து
கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். ராகு காலங்களில்
துர்கையம்மன் வழிபாடு செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - - 2, 3, 4, 5.
சந்திராஷ்டமம் - 26-11-2020 இரவு 09.20 மணி முதல் 29-11-2020
காலை 10.02 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட
துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில்
பொறுமையுடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது,
நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு செவ்வாய் 6-ல்
இருப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு ஏற்றங்களை
அடைவீர்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களை
அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம்
தேவை. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால்
கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை
ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது
நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள்
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை
தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை
தள்ளி வைப்பது உத்தமம். சிவ வழிபாடும், துர்கையம்மன் வழிபாடும் செய்வது மிகவும்
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - - 4, 5.
சந்திராஷ்டமம் - 29-11-2020 காலை 10.02 மணி
முதல் 01-12-2020 இரவு 09.37 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி
தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம
ராசியில் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு
எதிலும் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது
நல்லது. சனி 3-ல் இருப்பதால் உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு
சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் யாவும்
நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. கணவன்- மனைவி
அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது
நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்-
வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில்
வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும்
அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை
நழுவிப் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும்.
எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள்
உண்டாகும். மகாலட்சுமி வழிபாடும், சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடும்
செய்தால் சங்கடங்கள் குறைந்து நற்பலன்கள் கிட்டும்.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 1.
சந்திராஷ்டமம் - 01-12-2020 இரவு 09.37 மணி முதல் 04-12-2020
காலை 07.20 மணி வரை.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும்
வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதும் 6-ல்
ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு வளமான பலன்களை தரும் அமைப்பாகும்.
கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எந்தவித
பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு
கிடைக்கும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக
இருக்கும். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். அசையும் அசையா
சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது
நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை
தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள்
கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை
அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். பெரிய தொகைகளை
ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த
வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். முருக வழிபாடு செய்வது சனிக்கு
எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - - 29, 30, 1, 2, 3.
சந்திராஷ்டமம் - 04-12-2020 காலை 07.20 மணி
முதல் 06-12-2020 பகல் 02.45 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எத்தனை துன்பங்கள்
ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல்
கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் சுக்கிரன், 11-ல்
சூரியன், கேது சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நிம்மதி
ஏற்படும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக
குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை தவிர்க்க
முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்
உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள்
விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய
வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன்
செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும்.
பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி
கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது
நல்லது. துர்கை வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - - 2, 3, 4, 5.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான
தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் ராகு,
12-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது ஆரோக்கியத்தில் அக்கறை
எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும்
அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண்
விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தேவையற்ற பயணங்களை
குறைப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை
பெற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகும்.
சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கினால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - - 4, 5.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும்
தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, ஜென்ம
ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் அனைத்திலும்
ஏற்றமிகுந்த பலன்களை அடையும் வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அடிக்கடி பயணங்கள்
மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான
நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும்
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி
வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கைகள் அமையும். அசையும்
அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன்
உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய
தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் ஆதரவாக
இருப்பார்கள். முருக வழிபாடும் மகாலட்சுமி வழிபாடும் மேற்கொண்டால் குடும்பத்தில்
சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - - 29, 30, 1.
No comments:
Post a Comment