Friday, February 5, 2021

வார ராசிப்பலன் - பிப்ரவரி 7 முதல் 13 வரை 2021

 

வார ராசிப்பலன் - பிப்ரவரி 7 முதல் 13 வரை 2021

தை 25 முதல் மாசி 1 வரை

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

செவ்

ராகு 

 

 

திருக்கணித கிரக நிலை

 

 

சூரிய சனி  குரு புதன் (வ) சுக்கி

 

 

கேது  சந்திர 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிரக மாற்றம்

12-02-2021 கும்பத்தில் சூரியன் இரவு 09.12 மணிக்கு

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

விருச்சிகம் 05-02-2021 பகல் 12.47 மணி முதல் 07-02-2021 மாலை 04.14 மணி வரை.

தனுசு            07-02-2021 மாலை 04.14 மணி முதல் 09-02-2021 இரவு 08.30 மணி வரை.

மகரம்          09-02-2021 இரவு 08.30 மணி முதல் 12-02-2021 அதிகாலை 02.10 மணி வரை.

கும்பம்         12-02-2021 அதிகாலை 02.10 மணி முதல் 14-02-2021 காலை 10.09 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

08.02.2021 தை 26 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

 

10.02.2021 தை 28 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதிலும் நிதானத்துடன் இருப்பது, ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். சுப காரிய முயற்சிகளில் அனுகூலப் பலனை அடைய முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். துர்கையம்மன் வழிபாடும், முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -                       10, 11, 12, 13.

சந்திராஷ்டமம் - 05-02-2021 பகல் 12.47 மணி முதல் 07-02-2021 மாலை 04.14 மணி வரை.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன், குரு சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       12, 13.

சந்திராஷ்டமம் - 07-02-2021 மாலை 04.14 மணி முதல் 09-02-2021 இரவு 08.30 மணி வரை.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், சனி, குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. செவ்வாய் 11-ல் இருப்பதால் உங்களுக்கு இருக்கும் எதிர்ப்புகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும். சிவ வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       7, 8, 9.

சந்திராஷ்டமம் - 09-02-2021 இரவு 08.30 மணி முதல் 12-02-2021 அதிகாலை 02.10 மணி வரை.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி மற்றவர்களால் ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் மிகச் சிறப்பான அமைப்பாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். முருக வழிபாடும் விநாயகர் வழிபாடும் நற்பலனை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -                       8, 9, 10, 11.

சந்திராஷ்டமம் - 12-02-2021 அதிகாலை 02.10 மணி முதல் 14-02-2021 காலை 10.09 மணி வரை.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபட்டால் முன்னேற்றங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் -                       10, 11, 12, 13.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு தான் கற்று அறிந்து இருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன், குரு சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கேது 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்றே விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பிரதோஷ நாளில் சிவ வழிபாட்டை மேற்கொண்டால் சகல நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       12, 13.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பண்பும் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       8, 9.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ராசியதிபதி செவ்வாய் 6-ல் பலமாக சஞ்சரிப்பதும் 3-ல் சூரியன் சனி சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும் சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டானாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதபலன் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       7, 10, 11.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று 2-ல் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் ஏற்படும். பொன், பொருள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       8, 9, 12, 13.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் பணவரவில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். சிவ வழிபாடும் மற்றும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -                       7,  10, 11.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சனி, குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. முடிந்தவரை குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       7, 8, 9, 12, 13.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்கள், நினைத்தது நிறைவேறும் யோகம் வருகின்ற நாட்களில் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். எடுக்கும் காரியங்களிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்றவிட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணம் நிறைவேறும். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -                       7, 8, 9, 10, 11.

 

No comments: