Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022 விருச்சிகம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மன நிலை அறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலனை அடைவீர்கள். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உங்களது நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் யோகம் உள்ளது. உங்களுக்கு இருந்த கடந்த கால தேக்கங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் யோகம், புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம், இருக்கும் வீட்டை புதுப்பிக்க முடியும்.

தொழில் ரீதியாக படிப்படியான வளர்ச்சி, தொழிலை விரிவு படுத்தும் யோகம் ஏற்படும். உங்களது தனி திறமையால் பல்வேறு வெற்றிகளை அடையும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படுவதுடன் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு இவ்வண்டு ஆண்டு கோளான குரு பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் சில நேரங்களில் தேவைற்ற சுனக்கங்கள் ஏற்படும். தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.

சர்ப்ப கிரகமான கேது ஜென்ம ராசியில், ராகு 7-ல் சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒன்றும் இல்லாத விஷத்திற்கு கூட வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

இவ்வாண்டில் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு வரும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு நல்ல அமைப்பு என் கூற முடியாது. குரு 3-ல் சஞ்சரிக்கும் போது தனது 5-ஆம் பார்வையாக 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமணம் சார்ந்த மங்கள நிகழ்வுகள் குடும்பத்தில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுமாராக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அதிக அலைச்சலால் உடல் அசதி, இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் கடந்த கால வீண் செலவுகள் குறையும். நீங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்கும் யோகம் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப சூழ்நிலை ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். சுப காரியங்கள் நடைபெற சிறுசிறு இடையூறுகள் ஏற்படும்.

கொடுக்கல் வாங்கல்

பொருளாதாரம் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கடந்த கால வம்பு வழக்குகள் முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தக்க நேரத்தில் வந்து மகிழ்ச்சி ஏற்படும். நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கு பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலை பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அலைச்சல் அதிகப்படியாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர் புகழை காப்பாற்றி கொள்ள முடியும். கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடன் பழகுபவர்களிடமும் நிதானமாக செயல்படுவது சிறப்பு.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் நன்றாக இருந்து பட்ட பாட்டிற்கான பலனைப் பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலையை அடைய முடியும். பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைக்கவும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் ஓரளவுக்கு தடையின்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சக நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் நல்ல விளம்பரம் கிட்டும். படபிடிப்புகளுக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புக்கள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றி மறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய பெறுவதில் தடைகள் ஏற்படும். பண வரவுகள் சுமராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சற்று விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

படிப்பு

கல்வியில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல நிலையை அடைய முடியும். நல்ல மதிப்பெண்களை பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முருகரை வழிபாடு செய்வது உத்தமம்.

வைகாசி

உங்கள் ராசிக்கு சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் சூரியன், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்தவரை உடனிருப்பவர்களையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் எதையும் எளிதில் வென்று விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் மருத்துவ செலவுகளுக்குப் பின் உடனே சரியாகி விடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சிவனை வழிபடுவது உத்தமம்.

ஆனி

உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், உடல் அசதி போன்றவை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். விநாயகரையும், சிவனையும் வழிபாடு செய்வது உத்தமம்.

ஆடி

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன், 4-ஆம் தேதி முதல் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது  நல்லது. விஷ்ணுவை வழிபடவும்.       

ஆவணி

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 10, 11-ல் செவ்வாய், புதன் இம்மாதத்தில் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

புரட்டாசி

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.   

ஐப்பசி    

ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால நெருக்கடிகள் குறையும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சிவ வழிபாடு தொடர்ந்து செய்வது நல்லது.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட்டால் வளமான பலன்களை பெறலாம். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவனையும் முருகரையும் வழிபடுவது உத்தமம். 

மார்கழி

ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சனி 3-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்துவிட முடியும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். முருகரையும் அம்மனையும் வழிபாடு செய்வது உத்தமம்.   

தை

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.  உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

மாசி

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, மாத முற்பாதியில் 2-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது உத்தமம்.   

பங்குனி

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கம். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவால் சொந்த பூமி, மனை யாவும் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகும். துர்கை அ¬ம்மனை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9          நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,      கிழமை - செவ்வாய், வியாழன்

கல் - பவளம்,         திசை - தெற்கு        தெய்வம் - முருகன்

No comments: