பிலவ வருட பலன்கள் 2021-2022
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள்,
திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும்
கொண்ட மகர ராசி நேயர்களே!
உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த
பிலவ வருடத்தில் உஙகள் ராசியாதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில்
ஜென்மச்சனி நடைபெறுகிறது. உங்கள் ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில்
அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
தேவையற்ற மருத்துவ செலவுகளை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக
மருத்துவ காப்பீடு எடுத்து வைத்து கொள்வது நல்லது. அதிக அலைச்சல் காரணமான உடல் அசதி
எதிலும் சோம்பேரித்தனம் ஏற்படும். முடிந்த வரை உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது
மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும்
தனகாரகன் என வர்ணிக்கப்படும் குரு உங்கள் ராசிக்கு 2-லும், கேது 11-லும் அனுகூலமாக
சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் திருப்திகரமாக இருக்கும். உங்களுக்குள்ள நெருக்கடிகள்
எல்லம் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும்
என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடும். பூர்வீக சொத்து வழியில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பங்காளிகளை
பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் படிப்படியான
முன்னேற்றங்களை அடைய முடியும். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது
நல்லது. சில நேரங்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கையும்,
போட்ட முதலீட்டையும் எடுத்து லாபம் காண முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களிலும்
கொடுக்கல்- வாங்கலிலும் சற்று கவனத்துடன் இருந்தால் தேவையற்ற இழப்புகளையும் கடன்களையும்
தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி
உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும் யோகம் உண்டு. வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும்.
சக ஊழியர்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. முடிந்த வரை மற்றவர் விஷயத்தில்
தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
இவ்வாண்டில் குரு 2-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்றாலும் ஆவணி
29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு ஜென்ம
ராசியில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் தேவையற்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்பதால்
எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எதிலும்
திறன்பட செயல்பட்டு உங்கள் பணிகளை தக்க நேரத்தில் முடித்து விடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களால்
மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும்.
தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள்.
பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் வாய்ப்பு இருக்கிறது
என்றாலும் அதன் மூலம் கடன்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும்.
கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம்
காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு
சாதகமாக இருக்கும்.
தொழில் வியாபாரிகளுக்கு
செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின்
ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நல்ல செய்தி
கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் இருக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு
செயல்படுவது நல்லது. நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த
பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை
தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் என்றாலும்
வேலைபளு அதிகப்படியாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு
குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்
என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள்.
மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை
மேற்கொள்வீர்கள்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல்
லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது.
அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
பூமி மனை சேரும்.
கலைஞர்கள்
தேவையற்ற எதிர்ப்புகள் மறைவதால் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று
மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணத்தொகைகள்
கைக்கு கிடைக்கப் பெற்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அதிக அலைச்சலால் உடல்
அசதி நேரத்திற்கு உணவு உன்ன இடையூறு ஏற்படும். முடிந்த வரை வேலைபளுவை குறைத்து கொள்வது
நல்லது.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில்
திறம்பட செயல் பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில்
சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான
நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும்.
படிப்பு
கல்வியில் சிறு சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த
நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது
நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.
மாதப்பலன்
சித்திரை
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு
ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்
தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில்
அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக
நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள்.
பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா
சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி
தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
சிவனையும், துர்கை அம்மனையும் வழிபடவும்.
வைகாசி
உங்களுக்கு ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் 2-ல் குரு, மாத முற்பாதியில்
5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மைகளும் கூட்டாளிகளால்
லாபங்களும் உண்டாகும். புதிய நவீன கருவிகளை வாங்கிப் சேர்ப்பீர்கள். வெளியூர் மூலம்
அனுகூலங்கள் ஏற்படும். பணம் தாராளமாக வருவதால் கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த
கடன்களும் தடையின்றிக் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கணவன்-
மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள்
அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு
உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
ஆனி
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எல்லா வகையிலும்
லாபங்கள் அடைவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். பங்காளிகள்
ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில்
ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள்
தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள்.
உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.
முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
ஆடி
ஜென்ம ராசியில் சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முடிந்தவரை நெருங்கியவர்களிடம்
விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில்
நிம்மதிக் குறைவுகள் தோன்றும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.
பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும்.
குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின்
தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடும். கூட்டாளிகளை அனுசரித்து
நடந்து கொள்வது மூலம் அபிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால்
மட்டுமே உயர்வடைய முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
ஆவணி
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால்
எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும்
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது.
கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்
உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண
சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி
பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள்
பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
முருகரையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.
புரட்டாசி
உங்கள் ராசிக்கு 9, 10-ல் புதன், 10,11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால்
எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். பண வரவில் இருந்த
தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து
நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு
வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக
அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு
தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் மேன்மை அடையும். தட்சிணாமூர்த்தியையும்
ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
ஐப்பசி
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். அறிவாற்றலால்
எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே
இருந்து கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
மறைமுக எதிர்ப்புகள் மறையும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வெளியூர்களுக்கு
பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்பத் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள்
ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். பல பெரிய
மனிதர்களின் தொடர்பு கிட்டும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
கார்த்திகை
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், கேது சஞ்சரிப்பதும்
ஜென்ம ராசிக்கு 2-ல் வரும் 4-ஆம் தேதி முதல் குரு சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான
அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.
குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல்- வாங்கல்
லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு
பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வம்பு வழக்குகளில் சாதகப்பலன் கிடைக்கும்.
தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து
சேரும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். ஆஞ்சநேயரையும் அஷ்டலட்சுமியையும்
வழிபடுவது நல்லது.
மார்கழி
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள்
சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள்
குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிறப்பான பணவரவால் பொருளாதாரம்
உயர்வடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெற்று லாபம்
பெருகும். விரோதிகளும் நண்பர்களாகச் செயல்படுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்
தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள்
நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்களையும்
மேற்கொள்வீர்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
தை
ஜென்ம ராசியில் புதன், 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் வளமான பலன்களை
அடையும் யோகம் உண்டு. பண வரவில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை
உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.
சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன்
மூலம் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை
ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதல் உண்டாகாது. முன்கோபத்தை குறைப்பது, ஆரோக்கியத்தில்
அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும்
முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான
நிலை இருக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.
மாசி
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் நற்பலன்கள் கிடைக்கும்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குடும்ப ஸ்தானமான 2-ல் சூரியன் இருப்பது சாதகமற்ற
அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள்
உண்டாகும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது, நெருங்கியவர்கள் அனைவரையும் அனுசரித்துச்
செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகஸ்தர்கள்
உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின்
கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல்
ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற
பயணங்களை தவிர்ப்பது நல்லது. அஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.
பங்குனி
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், 11-ல் கேது சஞ்சரிப்பதால்
எடுக்-கும் முயற்சியில் அனுகூலங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றும் யோகம் உண்டாகும். தேவைகள்
பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த
பாதிப்புகள் படிப்படியாக குறையும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். உற்றார்
உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். பல பெரிய
மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். புத்திர வழியில்
மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை
மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். துர்கை அம்மனை வழிபடவும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8 நிறம்
- நீலம், பச்சை கிழமை - சனி, புதன்
No comments:
Post a Comment