Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022 தனுசு

 பிலவ வருட பலன்கள் 2021-2022

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ராசியாதிபதி குரு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க உள்ளார். ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெற உள்ளது. உங்களது ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் எதிலும் முன்கோபத்தை குறைத்து கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது மூலம் வலமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும்.

இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 6-ல் சர்ப கிரகமாக ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரு சில அனுகூலங்கள் ஏற்பட்டு குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும்.

     செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சில நேரங்களில் கிடைக்காது. எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செயல்படுவது மூலம் பெரிய பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து ஏற்றங்களை அடைய முடியும். வெளியூர் பயணங்களால் அனுகூல பலன்கள் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த கால சிக்கல்கள் குறைந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கான பலன் கிடைக்க ஒரு சில இடையூறுகள் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள், கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும். பணியில் கவனமுடன் செயல்படுவது பிறர் விஷயங்களில் தலையிடாது இருப்பது நல்லது.

இவ்வாண்டில் ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும் யோகம், பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, உங்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல காரியங்கள் கைகூடும் யோகம் ஏற்படும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனக் குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறு பிரச்சினைகளுக்கு முக்கியத்தும் கொடுத்தால் பெரிய பாதிப்புகளில் இருந்து எளிதில் சமாளித்து உடல் நலத்துடன் வாழ முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுப காரியங்கள் கைகூடும்.

கொடுக்கல் வாங்கல்

பண வரவுகளில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கடந்த கால வம்பு வழக்குகளில் ஒரு சில நல்ல முடிவுகள் இவ்வாண்டு கிடைக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் சுமாராக தான் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. கூட்டாளிகள் உதவியால் ஒரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் முழுமையாக திருப்தி இருக்காது. உடன் பழகுடவர்களுடன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலனின்றி போகும். நீர் வரத்து குறைவதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வீண் பிரச்சினைகளில் சிக்கி பத்திரிக்கை செய்தி மூலம் மன அமைதி குறையும். உங்கள் தனி திறமையால் பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். இசை, நடனத் துறைகளில் உள்ளவர்களுக்கும் மேன்மையான பலன்கள் ஏற்படும்.

பெண்களுக்கு

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மற்றவர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது.

படிப்பு

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் பேசும் போது சற்று பொறுமையுடன் பேசுவது நல்லது.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலமான பலனை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற சற்று சிரமபட வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியையும் அஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.  

வைகாசி

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணம், பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

ஆனி

உங்கள் ராசியதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். சூரியன் 7-ல், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிவபெருமானையும் அஷ்டலட்சுமியையும் வழிபடவும்.     

ஆடி

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒருசில பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். சிவனை வழிபடுவது உத்தமம்.

ஆவணி

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9, 10-ல் புதன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது வளமான பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் இருந்த பகை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.   

புரட்டாசி

உங்கள் ராசியதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்கள் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைய முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.  

ஐப்பசி    

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இருக்கும். சிறப்பான பணவரவால் பல்வேறு பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பலருக்கு நன்மைகள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களின் பாராட்டுதல்கள் மன மகிழ்ச்சியினை உண்டாக்குவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் ஒற்றமை பலப்படும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் சஞ்சரித்தாலும் 6-ல் ராகு, 18-ஆம் தேதி வரை 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிருந்த பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. 

மார்கழி

ஜென்ம ராசியில் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சுக்கிரன், புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கடன் சுமைகள் சற்றே குறைவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.  

தை

ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். சூரியன் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையிருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.    

மாசி

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை நல்லபடி பெருக்க உதவும். சிலருக்கு வெளியூர்களுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். தினமும் விநாயகரை வழிபடவும்.          

பங்குனி

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அதிகபடியான அலைச்சல்கள் இருக்கும். ராகு 6-ல் இருப்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் வீண் பிரச்சினைகள் ஏற்படகூடும் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிவனையும், முருகரையும்  வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9            நிறம் - மஞ்சள், பச்சை    கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்     திசை - வடகிழக்கு           தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: