Saturday, July 31, 2021

Today rasi palan - 01.08.2021

 

Today rasi palan - 01.08.2021

இன்றைய ராசிப்பலன் -  01.08.2021

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-08-2021, ஆடி 16, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி காலை 07.57 வரை பின்பு தேய்பிறை நவமி. பரணி நட்சத்திரம் இரவு 07.36 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 07.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 

சந்தி

 

  ராகு

 

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

01.08.2021

சூரிய புதன்

சனி (வ)

சுக்கி செவ்

 

கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  01.08.2021

மேஷம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். தேவைகள்  பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி தரும்.

சிம்மம்

இன்று நீங்கள் சற்று பலவீனமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு நிம்மதியின்மையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சிறு தடங்கலுக்கு பின்  கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். சுப செலவுகள் உண்டாகும்.

மீனம்

இன்று உடல் நிலையில் சற்று மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

Live chat July 31 | 371 th live | Q&A | Astrology | Dr.Murugubalamurugan...

Vaara Rasi Palan (01-08-2021 to 07-08-2021) | Weekly Astrosign Predictio...

வார ராசிப்பலன் - ஆகஸ்ட் 1 முதல் 7 வரை 2021

 

வார ராசிப்பலன் - ஆகஸ்ட் 1 முதல் 7 வரை 2021

ஆடி 16 முதல் 22 வரை

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

சந்தி

 

  ராகு

 

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

01.08.2021

சூரிய புதன்

சனி (வ)

சுக்கி செவ்

 

கேது

 

 

           

 

கிரக மாற்றம் இல்லை

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மேஷம்         30-07-2021 பகல் 02.02 மணி முதல் 02-08-2021 அதிகாலை 02.22 மணி வரை.

ரிஷபம்        02-08-2021 அதிகாலை 02.22 மணி முதல் 04-08-2021 பகல் 03.07 மணி வரை.

மிதுனம்      04-08-2021 பகல் 03.07 மணி முதல் 07-08-2021 அதிகாலை 01.55 மணி வரை.

கடகம்          07-08-2021 அதிகாலை 01.55 மணி முதல் 09-08-2021 காலை 09.50 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

04.08.2021 ஆடி 19 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசி திதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.  தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்-- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சூரியன் 4-ல் இருப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்-- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். துர்கையம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           1, 4, 5, 6.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் இருந்த தடைகள் விலகி வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கடந்த கால பொருளாதார தேக்கங்கள் விலகி தாராள தனவரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்--- மனைவி இடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். விநாயகர் வழிபாடு மற்றும் ஆடி கிருத்திகை நாளில் விரதமிருந்து முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           2, 3, 4, 7.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 2-ல், செவ்வாய் 3-ல், கேது 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி நிலவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால்  தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். கடன்களும் சற்று குறையும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சிவ வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           1, 4, 5, 6.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய், 7-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்--- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்-- வாங்கலில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். ஆடி கிருத்திகை நாளில் முருக வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           1, 2, 3, 4, 7.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் கேது, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும். எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பிரதோஷ நாளில் சிவ வழிபாட்டையும், ஆடி கிருத்திகையில் முருக வழிபாட்டையும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -           2, 3, 4, 5, 6.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள் வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முருக வழிபாடும் மகாலட்சுமி வழிபாடும் செய்தால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் -           4, 5, 6, 7.

சந்திராஷ்டமம் - 30-07-2021 பகல் 02.02 மணி முதல் 02-08-2021 அதிகாலை 02.22 மணி வரை.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவுகள், தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். சிறப்பான பணவரவால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். கணவன்-- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி சங்கு மலர்களால் அர்ச்சனை செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           1, 7.

சந்திராஷ்டமம் - 02-08-2021 அதிகாலை 02.22 மணி முதல் 04-08-2021 பகல் 03.07 மணி வரை.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 9-ல் புதன், 10-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் மறைமுக எதிர்ப்புகள், பிரச்சினைகள் எல்லாம் விலகி எல்லா வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களது பலமும் வலிமையும் கூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தக்க சமயத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். துர்கையம்மன் வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           1, 2, 3.

சந்திராஷ்டமம் -             04-08-2021 பகல் 03.07 மணி முதல் 07-08-2021 அதிகாலை 01.55 மணி வரை.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சனி 2---ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -           2, 3, 4, 5, 6.

சந்திராஷ்டமம் -             07-08-2021 அதிகாலை 01.55 மணி முதல் 09-08-2021 காலை 09.50 மணி வரை.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். சூரியன் 7-ல் செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன்-- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக செயல்பட்டால் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்து வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -           4, 5, 6, 7.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்கள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்குப் பின் கிடைக்கப் பெறும். கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. முருக வழிபாட்டையும் துர்கையம்மன் வழிபாட்டையும் செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           1, 7.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்-- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தேவையற்ற அலைச்சல், வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப் பலன்கள் ஏற்படும். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் விலகி சாதகமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           2, 3, 4.