வார ராசிப்பலன் - ஆகஸ்ட் 15 முதல் 21 வரை 2021
ஆடி 30 முதல் ஆவணி 5 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர்
முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
ராகு |
|
குரு (வ) |
திருக்கணித கிரக நிலை |
சூரிய |
|
சனி (வ) |
புதன் செவ் |
||
|
கேது |
சந்தி |
சுக்கி |
கிரக மாற்றம்
ஆடி 31 (17-08-2021) சிம்ம
சூரியன் (அதிகாலை 01.17)
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம் 13-08-2021 இரவு
07.28 மணி முதல் 15-08-2021 இரவு 10.45 மணி வரை.
விருச்சிகம் 15-08-2021
இரவு 10.45 மணி முதல் 18-08-2021 அதிகாலை 01.35 மணி வரை.
தனுசு 18-08-2021 அதிகாலை
01.35 மணி முதல் 20-08-2021 அதிகாலை 04.20 மணி வரை.
மகரம் 20-08-2021 அதிகாலை
04.20 மணி முதல் 22-08-2021 காலை 07.57 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
20.08.2021 ஆவணி 04 ஆம்
தேதி வெள்ளிக்கிழமை திரயோதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00
மணி முதல் 09.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை
1-ஆம் பாதம்.
முன் கோபம் அதிகம்
இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல்
ராகு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற
அலைச்சல்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். 5-ல் புதன்
சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்க முடியும்.
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால்
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண
சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில்
அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு அசையும்
அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.
சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவதன்
மூலம் நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு
முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட
முடியும். வேலைபளு குறைவாகவே இருக்கும். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம்
செய்து வழிபட்டால் மங்களங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 20.
சந்திராஷ்டமம் - 15-08-2021 இரவு 10.45 மணி முதல் 18-08-2021
அதிகாலை 01.35 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றத்
தவறாத பண்பும் தன்மையான குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம
ராசியில் ராகு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும்.
பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். 4-ல் புதன், 5-ல் சுக்கிரன்
சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம்
உண்டாகும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு
ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது
நல்லது. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகள்
ஏற்படாமல் தவிர்க்கலாம். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது
உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்
பெற்று லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து
செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில்
சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்
செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முருக வழிபாடும்,
துர்கையம்மன் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17.
சந்திராஷ்டமம் - 18-08-2021 அதிகாலை 01.35 மணி முதல் 20-08-2021
அதிகாலை 04.20 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால்
நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 4-ல் சுக்கிரன், 6-ல் கேது சஞ்சரிப்பதும் வரும் 17-ஆம்
தேதி முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால்
எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்ப்புகள் விலகும் நிலை உண்டாகும். எந்தவித
பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும்.
சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள்
ஆதரவாக செயல்படுவார்கள். ஆடை அபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். பல பெரிய
மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்
கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி
அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின்
விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. கடன்களும் படிப்படியாக குறையும். தொழில்
வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். புதிய
ஒப்பந்தங்களில் கையெழுதிடுவீர்கள். சிவ வழிபாடு செய்வதும் சனிக்குரிய பரிகாரங்கள்
செய்வதும் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18, 19.
சந்திராஷ்டமம் - 20-08-2021 அதிகாலை 04.20 மணி முதல் 22-08-2021
காலை 07.57 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
கொடுத்த வாக்கை எப்பாடு
பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல்
புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பது எல்லா வகையிலும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும்.
பொருளாதார ரீதியாகவும் அனுகூலங்களை அடைவீர்கள். எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு
உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவி
ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன்
செயல்படுவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்று
இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தொழில்
வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து எதிரிகள் கூட நண்பர்களாக
செயல்படுவார்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அபிவிருத்தி
பெருகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில்
சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள்
தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிவ வழிபாடும் விநாயகர்
வழிபாடும் செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
வாழ்க்கையில் பல முறை
தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல்
கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் கேது
சஞ்சரிப்பதால் இந்த வாரத்தில் தேவையற்ற மனகுழப்பங்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள்,
குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது
நல்லது. வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால்
நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும்
எதிர்பாராமல் கிடைக்கும் உதவியால் உங்களது தேவைகள் ஓரளவு நிறைவேறும். ஆரோக்கிய
ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை
பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக
நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும்
எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது
சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார்
உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். சிவ
வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 20.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
எதிலும் சுறுசுறுப்பாக
செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட கன்னி ராசி
நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் கேது, குரு வக்ர கதியில்
சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள்
உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.
குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து
விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில்
சிறு பாதிப்புகள் தோன்றலாம். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த
வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல
வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து
நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்
பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும், இடமாற்றமும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம்
உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முருக வழிபாடு
செய்வது, சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்து மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 16, 17.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
ஆடம்பரமான வாழ்க்கை
வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே, இவ்வாரத்தில் உங்கள் ராசிக்கு
லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், புதனும், 10, 11-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் நல்ல
வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் யோகம், நினைத்ததை செயல்படுத்த கூடிய திறன் இந்த
வாரத்தில் உண்டு. பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கணவன்- மனைவி எந்த ஒரு விஷயத்திலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களின்
வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் பேசும் போது பேச்சில் சற்று கவனமாக
இருப்பது நல்லது. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அசையும்
அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய
வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு
கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணம்
கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமாக இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை
வசூலித்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின்
பாராட்டுதல்களை பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது
மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 15, 18, 19.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
உயர்ந்த நிலையை அடைய
வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி
நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், புதன் சேர்க்கைப் பெற்று 10-ல்
சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மிகவும் அனுகூலமான அமைப்பு
என்பதால் உங்கள் வாழ்வில் வளமான பலன்கள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார
ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள்
கிடைக்கும். சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.
கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்
பிரச்சினைகள் ஓரளவு குறையும். தேவைகள் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துகளை
வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கிய
பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய
முயற்சிகளில் தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கௌரவமான பதவி
உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். தினமும் விநாயகர் வழிபாடு
மற்றும் சிவ வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 20.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
தன்னுடைய கொள்கைகளை
யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி
நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும் 9-ல் புதன், 10-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து
ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட
வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை
பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும் கொடுக்கல்-
வாங்கல் விஷயத்தில் மட்டும் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு
ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பேச்சில் நிதானத்தை
கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன்
கடன்களும் சற்று குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை
அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமையுடன்
செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள்
கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் செய்தால்
நற்பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 18, 19.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
தானுண்டு தன் வேலையுண்டு என
செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும்
சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உறவினர்கள் மூலம் சில
நேரங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். புத்திர வழியில் சிறு சிறு
மனக்கவலைகள் உண்டாகலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும்.
பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத
உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள். 8-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல், வண்டி வாகனங்கள்
மூலமாக விரயங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு செலவுகளை எதிர்கொள்ள
நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. தொழில்
வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணம்
கொடுக்கல்-- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும்
கவனம் செலுத்துவது உத்தமம்-. பிரதோஷ நாளில் சிவ வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான
பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 20.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
வேகமாக பேசினாலும், திருத்தமாகவும்,
திறம்படவும் பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல்
புதன் சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் விலகி அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். சிக்கனமாக இ-ருப்பதும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும்
நல்லது. குடும்பத்தில் கணவன்-- மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை
குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை
அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய
முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். நெருங்கியவர்களே உங்களுக்கு சங்கடங்களை
உண்டாக்குவார்கள் என்பதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. தொழில்
வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் சிறு தடைக்குப் பின் கிடைக்கும். பலவித
போட்டிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளையும்
தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு
மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது, சனிக்கு எள் தீபம்
ஏற்றி வழிபடுவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18, 19.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி.
மற்றவர்களின்
குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல
வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சிறப்பான பணவரவும், சேமிப்புகள் அதிகரிக்கும்
யோகமும் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.
எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். உங்களது
முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே
ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவாக
செயல்படுவார்கள். குரு வக்ர கதியில் இருப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட
சுபகாரியங்கள் நடக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கங்களும்
நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் நிலையில் சற்றே மந்த நிலை சோர்வு
போன்றவை உண்டாகலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்-
வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது
கவனமாக செயல்பட்டால் லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும்
லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். தட்சிணாமூர்த்தி வழிபாடும் சிவ வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20.
சந்திராஷ்டமம் - 13-08-2021 இரவு 07.28 மணி முதல் 15-08-2021
இரவு 10.45 மணி வரை.
No comments:
Post a Comment