ஆடி 23 முதல் 29 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் -
2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
ராகு |
|
குரு (வ) |
திருக்கணித கிரக நிலை |
சூரிய புதன் சந்தி |
|
சனி (வ) |
சுக்கி செவ் |
||
|
கேது |
|
|
கிரக மாற்றம்
ஆடி 23 (09-08-2021) சிம்ம
புதன் (அதிகாலை 1.33)
ஆடி 26 (11-08-2021) கன்னி
சுக்கிரன் (பகல் 11.32)
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம் 07-08-2021
அதிகாலை 01.55 மணி முதல் 09-08-2021 காலை 09.50 மணி வரை.
சிம்மம் 09-08-2021
காலை 09.50 மணி முதல் 11-08-2021 மாலை 03.23 மணி வரை.
கன்னி 11-08-2021
பகல் 03.23 மணி முதல் 13-08-2021 இரவு 07.28 மணி வரை.
துலாம் 13-08-2021
இரவு 07.28 மணி முதல் 15-08-2021 இரவு 10.45 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
13.08.2021 ஆடி 28 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல்
10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி
அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, நீங்கள் எதிலும்
கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 4-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். கணவன்-
மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்ககூடும்
என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
உடனிருப்பவர்களையும், உற்றார், உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம்.
ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக
இருக்கும் என்றாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். குரு வக்ர கதியில்
இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள்
அதிகரிக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம்
அனுகூலங்கள் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று
எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல்
தம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மன் வழிபாடு செய்தால்
மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12,
13, 14.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில்
தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல்
சூரியன், 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் எல்லா
வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள்,
பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்ப தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். நவீனகரமான பொருட்
சேர்க்கையும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம்
அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழில்
வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள்.
கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும்
உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். முருக வழிபாடு மற்றும் துர்கை
வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றலும்
சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 6-ல் கேது
சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கடந்த
காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல்
ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு
சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை
கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம்
கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடனை பெறுவதில் சிறுசிறு இடையூறுகளை
சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும்
அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்
செலுத்துவது உத்தமம். சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபாடு செய்வது
மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10,
11.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர
ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக சிந்தித்துச்
செயல்பட்டால் தான் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பண வரவானது சிறப்பாக
இருப்பதுடன் ராகு 11-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள்
நெருக்கடிகள் குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா
சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க
குடும்பத்தினரையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பேச்சில்
நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள்
ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக
இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால்
எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம்
கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள
முடியும். சிவ வழிபாடும் சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடும் செய்தால் நற்பலன்களை
அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 11,
12, 13.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே
அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு
ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக
இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி
இருந்தாலும் எதிலும் அகல கால் வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது
நல்லது. புதன் ஜென்ம ராசியிலும், சனி 6-லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின்
உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். செய்யும் தொழில்,
வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய
தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை
அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். தேவையற்ற பயணங்களை
தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக
இருக்கும். உடனிருப்பவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம்
அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ
செலவுகளை தவிர்க்கலாம். சிவ வழிபாடும் சஷ்டி நாளில் முருக வழிபாடும் செய்வது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 14.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும்
முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 3-ல் கேது, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு அனுகூலமான பலன்களை
பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும்.
உங்களது செயல்களால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது பல
நடக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால்
தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-
மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கள் வழியில் மகிழ்ச்சி
தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம்
உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். வீடு, வாகனங்கள் வாங்கும்
வாய்ப்பு அமையும். கடன்களும் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய
வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின்
ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத்
தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த
இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல்
சரளமாக நடைபெறும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 11,
12, 13.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான
பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் 11-ல்
செவ்வாய் புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய
வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல்
வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். பணம் பல
வழிகளில் தேடி வரும். ஆடம்பர தேவைகள் கூட பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான
சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும்.
கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு
கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புத்திர
வழியில் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும்
வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும்.
கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். அரசு வழியில் அனுகூலமான
பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்
அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான
வாய்ப்புகள் அமையும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு மேற்கொண்டால்
மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10,
14.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில்
ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே,
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் புதனுடன் பலமாக சஞ்சரிப்பதும் சுக்கிரன் 10, 11-ல்
சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி
சிறப்பான பலன்கள் ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிக
சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். ஆடை
ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். ஆடம்பர
செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்
ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம்
அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. திருமண
வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலை இருந்தாலும் கொடுத்த கடனை பெறுவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பல
பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள்
உண்டாகும். பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த
கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயக பெருமானை
வழிபட்டால் எண்ணிய காரியம் தடையின்றி நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11,
12, 13.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்கும் மரியாதை
கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு
ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 6-ல் ராகு, 9-ல்
புதன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும்
பலம் உண்டாகும். சூரியன் 8-ல் இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள்
சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால்
கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை
அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும்.
வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை
பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய
உயர்வுகள் தாமதமாக கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது
நல்லது. விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12,
13, 14.
சந்திராஷ்டமம் - 07-08-2021
அதிகாலை 01.55 மணி முதல் 09-08-2021 காலை 09.50 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எதையும் எளிதில்
கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை
பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தினரையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. குரு வக்ர
கதியில் இருப்பதால் பணவரவில் தடைகள் இருக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது,
தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணத்தை
சற்று தள்ளி வைப்பது உத்தமம். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.
சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.
பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய
தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு
அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிவ வழிபாடு முருக வழிபாடு
செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 14.
சந்திராஷ்டமம் - 09-08-2021 காலை 09.50 மணி முதல் 11-08-2021 மாலை 03.23 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும், சாந்தமும்,
அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும்
ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் புதன்
சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள்
பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும்.
உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும்
உயர்வுகள் சிறு தடைக்குப் பின் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு
போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை
தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று
சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு
மனஸ்தாபங்கள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக
செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்
ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சனி பகவான் வழிபாடும், சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10.
சந்திராஷ்டமம் - 11-08-2021 பகல் 03.23 மணி முதல் 13-08-2021 இரவு 07.28 மணி
வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி.
தயாள குணமும், பொறுமையும்
தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக
லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும்
நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார
நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும்
நிறைந்திருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி
தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். குரு
வக்ர கதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மன அமைதியை அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள்
படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம்
காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு
செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி
வழிபாடும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10,
11, 12.
சந்திராஷ்டமம் -
13-08-2021 இரவு 07.28 மணி முதல் 15-08-2021 இரவு 10.45 மணி வரை.
No comments:
Post a Comment