Sunday, August 22, 2021

Today rasi palan - 23.08.2021

 

Today rasi palan - 23.08.2021

இன்றைய ராசிப்பலன் -  23.08.2021

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

23-08-2021, ஆவணி 07, திங்கட்கிழமை, பிரதமை திதி மாலை 04.31 வரை பின்பு தேய்பிறை துதியை. சதயம் நட்சத்திரம் இரவு 07.26 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் இரவு 07.26 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 

 

 

ராகு

 

குரு (வ)

 சந்தி

திருக்கணித கிரக நிலை

23.08.2021

 

 

சனி (வ)

சூரிய புதன் செவ்

 

கேது

 

சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் -  23.08.2021

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

கடகம்

இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். வரவை காட்டிலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் யோசித்து முடிவெடுப்பது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். செலவுகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும்.

மகரம்

இன்று நீங்கள் எதிலும் நிதானமின்றி செயல்படுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம்.

கும்பம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பொது காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.

No comments: