Saturday, August 28, 2021

Today rasi palan - 29.08.2021

 Today rasi palan - 29.08.2021

இன்றைய ராசிப்பலன் -  29.08.2021

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-08-2021, ஆவணி 13, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 11.25 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கிருத்தகை விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 

சந்தி

 

ராகு

 

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

29.08.2021

 

 

சனி (வ)

சூரிய செவ்

 

கேது

 

புதன் சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் -  29.08.2021

மேஷம்

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை சற்று குறையும்.

கடகம்

இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 10.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுப முயற்சிகளையும், பயணங்களையும் மாலை நேரத்தில் மேற்கொள்வது நல்லது.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 10.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரியோர்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் பெருகும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சினை சற்று குறையும்.

கும்பம்

இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.

மீனம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

No comments: