விருச்சிக ராசி - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022
(20-11-2021 முதல் 13-04-2022)
கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகுபாலமுருகன்
ஆசிரியர் –பாலஜோதிடம் வார இதழ்
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
கடினமான வேலைகளையும், எளிதில் செய்து
முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்த
ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை
(வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) ஜென்ம ராசிக்கு 4---ல் சஞ்சாரம்
செய்ய இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.
பொருளாதார ரீதியாக சிறுது நெருக்கடி இருந்தாலும் ஒரு ராசியில் அதிக நாட்கள்
தங்கும் கிரகமான சனி தற்போது உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ஆட்சி பெற்று
சஞ்சரிப்பதால் உங்களுக்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சியில்
அனுகூலப்பலனை அடையும் வாய்ப்பு. நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடையும் நிலை
ஏற்படும். குரு பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் அமைப்பு, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் திறன்,
எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழிலை விரிவு படுத்தும் நோக்கம் நிறைவேறும்.
பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்றாலும் நேரத்திற்கு உணவு உண்ண முடியாத
அளவிற்கு உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும்
கவனம் செலுத்துவது உயரதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நல்ல
வாய்ப்புகள் கௌரவ பதவிகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும், சக ஊழியர்களை
அனுசரித்து செல்வது நல்லது. குறிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டால்
உங்களது பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு
சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், வாக்குவாதங்கள் உண்டாகும்.
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. கணவன்-
மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து
செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் உதவிகளை
பெற முடியும்.
தேகஆரோக்கியம்
உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு,
அதிக அலைச்சல் இருந்தாலும் சனி சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் திறன்பட செயல்பட
முடியும். எளிதில் உணர்ச்சி வசப்படும் நிலை, அஜீரணக் கோளாறு ஏற்படலாம் என்பதால்
உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பயணங்களில் நிதானம் தேவை.
முன்கோபத்தை குறைத்து கொண்டால் ஏற்படும் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
குடும்பம் பொருளாதாரம்
சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சற்று
பாதிப்பு, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். பணவரவுகள் சற்று சாதகமாக
இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை
அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மூலம் குடும்பத்தில்
உண்டாகக் கூடிய ஒற்றமை குறைவை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
இடையூறுகள் ஏற்படும்.
கொடுக்கல்- வாங்கல்
உங்களது பொருளாதார நிலை சிறப்பாக
இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.
அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகளிடையே சற்று
விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல், டென்ஷன், உடல் அசதி
ஏற்படும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை
ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. நீங்கள் போட்ட முதலீட்டை எடுத்து லாபம்
காண்பீர்கள். குரு 4-ல் சஞ்சரிப்பது சற்று சோதனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால்
போட்டி ஏற்பட்டாலும் அதனை சிறப்பாக கையாளும் யோகம் ஏற்படும், கூட்டாளிகளை
அனுசரித்து செல்வது நல்லது. வேலையாட்களிடம் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம்
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சற்று நிம்மதியான நிலை
உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்
போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத
இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். வேலை
நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண
வரவுகளில் தேக்க நிலை நிலவினாலும் தக்க நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள்
கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். முடிந்தவரை
பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவையும் பெயர், புகழையும்
காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமான நேரமிது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி
கிட்டும். பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு
செய்ய வேண்டி இருந்தாலும் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலை, எதிர்பார்க்கும் பதவிகளை
அடையும் யோகம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
வேலையாட்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதால் உங்களுக்கு வேலைபளு அதிகப்படியாக
இருக்கும். சிறிது லாபத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கால் நடைகளால்
வீண் செலவுகள் ஏற்படும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். பூமி, நிலம்
போன்றவற்றால் பங்காளிகளிடையே வீண் விரோதம் உண்டாகும்.
படிப்பு
மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு
குறையக்கூடிய காலமிது. ஞாபக மறதி, உடல் நலக் குறைவு போன்றவை உண்டாகும் என்றாலும்
நல்ல மதிப்பெண்களை பெறும் யோகம் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது
வேகத்தைக் குறைப்பது, கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர்களிடம் வீண் வாக்கு
வாதத்தை தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் ராசியாதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் ஒரளவுக்கு முன்னேற்றப்
பலன்களைப் பெறுவீர்கள். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி
உண்டாகும் என்றாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சர்ப கிரகங்கள்
சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு
ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும், வண்டி வாகனங்களாலும் சுப
செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் உடல் அசதி
ஏற்படும். முடிந்த வரை உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, பிறர் விஷயங்களில்
தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் வாக்கு வாதம்
செய்யாமல் பணி கவனத்துடன் இருந்தால் மட்டுமே பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய
முடியும். தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சர்ப்ப கிரகமான ராகு
நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் நெருக்கடிகள்
ஏற்பட்டாலும் சனி 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய அளவிற்கு
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அலைச்சல், டென்ஷன்கள் குறையும். உடல்
ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகி, அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன்
செயல்பட முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் ஒற்றுமையான
நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. தொழில்
வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை
அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய
உயர்வுகளில் தடைகள் ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை
உண்டாக்கும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022
வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் சுக
ஸ்தானமான 4-ல் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் சுக வாழ்விற்கு இடையூறு
ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்
கொண்டால் சேமிக்க முடியும். சனி 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல்
ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம்
செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய
முடியும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி
பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில்
மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.
அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுகள்
மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்கள்
ராசிக்கு 4-ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது
தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை
கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது,
ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு
சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில்
விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன்
மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தொழு
நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை
வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர
ஸ்தோத்திரம் கூறுவது, சர்பசாந்தி செய்வது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை - செவ்வாய், வியாழன்
கல் - பவளம், திசை - தெற்கு தெய்வம் - முருகன்
No comments:
Post a Comment