மீன ராசி - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022
(20-11-2021 முதல் 13-04-2022)
கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகுபாலமுருகன்
ஆசிரியர் –பாலஜோதிடம் வார இதழ்
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
அதிக தன்னம்பிக்கையும்,
சமயத்திற்கேற்றாற்போல் வளைந்து கொடுத்து வாழும் தன்மையும் கொண்ட மீன ராசி
நேயர்களே! உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் ராசியாதிபதி குரு பகவான்
திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல்
13-04-2022 வரை) சஞ்சாரம் செய்ய இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என கூற
முடியாது, பொருளாதார ரீதியாக சிறிது ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் என்றாலும் ஒரு
ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு லாப
ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு
முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பண வரவுகள்
சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். கணவன்-
மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி
கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும் என்றாலும்
எதையும் சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும்.
ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு
தனது சிறப்பு பார்வையாக 4, 6, 8-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில்
சுபச்செலவுகள் ஏற்படும், அசையும் அசையா சொத்து வழியில் சாதகமான பலன்கள் கிட்டும்.
வீடு வாகனங்களை பழுது பார்க்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு இருந்த
வம்பு வழக்குகள் விலகி நிம்மதியாக நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக
இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
தொழில் வியாபாரத்தில் சிறிது
நெருக்கடிகள் இருந்தாலும் லாபகரமான பலனை அடைய முடியும். உங்களுக்கு இருந்த போட்டி, பொறாமைகளும், மறைமுக
எதிர்ப்புகளும் மறையும். தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறி
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும்
வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும்
அதற்கான ஆதாயம் கிடைக்கும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்
கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுக்கும் பணிகளை சிறப்பாக
செய்து முடிக்கும் திறன் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களை
குறைத்துக் கொள்ள முடியும்.
தேகஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
என்றாலும் வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது.
குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால்
அனைவரின் ஆரோக்கியத்திலும் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாள்
பிரச்சனைகளுக்காக மருத்துவ சிகிச்கை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மன அமைதி ஏற்படும்.
குடும்பம் பொருளாதாரம்
குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால்
அவர்கள் மூலம் உள்ள கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி அனுகூலங்களை அடைய
முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது
நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது சிறப்பு.
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில்
சற்று சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில தடைகள்
ஏற்பட்டாலும் தாமதங்களுக்கு பிறகு வசூலித்து விட முடியும். வம்பு வழக்குகளில்
தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக்
குறைப்பதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும் என்றாலும் லாபகரமான பலனை அடைய முடியும்.
எதிர்பார்க்கும் வாய்ப்புகளை அடைவதில் சிறிது இடையூறுகள் உண்டானாலும் அடைய வேண்டிய
இலக்கை அடைந்து விடுவீர்கள். ஏற்படும் போட்டி பொறாமைகளை சிறப்பாக கையாண்டு வெற்றி
பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும்
தேவையற்ற அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராமல் உண்டாகக் கூடிய
இடமாற்றங்களால் அடிக்கடி பயணங்கள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில்
நிதானத்தைக் கடைபிடிப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு
அதிகமாக இருக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால்
அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும்
எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும்
காரியங்களில் கூட குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை
அனுசரித்து நடந்து கொண்டால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு
எதிர்பார்த்துக் காத்திருந்த கௌரவமான
பதவிகள் உங்களுக்கு கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக செய்யும் செலவுகள் வரவுக்கு
மீறியதாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி சமுதாயத்தில்
கௌரவமான நிலையை அடைவீர்கள். தலைவர்கள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மன
நிம்மதி ஏற்படும்.
விவசாயிகளுக்கு
விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால்
லாபமும் சிறப்பாக அமையும். போதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை
காரணமாக வீண் செலவுகள் ஏற்படும். புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் சுப
செலவுகள் ஏற்படும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை
பலப்படும்.
படிப்பு
மாணவர்கள் கல்வியில் மிகுந்த அக்கறை
எடுக்க வேண்டியிருக்கும். நன்கு படித்தாலும் தேர்வின் போது ஞாபக மறதி ஏற்படும்.
எது எப்படி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின்
ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். நீங்கள் எதிர்பார்க்கும் உயர் படிப்புக்கான
வாய்ப்புகளை அடைய முடியும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான
செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் ஏற்ற
இறக்கமான பலன்களை பெற முடியும். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி
சஞ்சரிப்பதால் எதையும் திறமையுடன் கையாண்டு அனுகூலப்பலனை பெறுவீர்கள். கணவன்-
மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி
கிட்டும். பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும் என்பதால் வீண் செலவுகளைக்
குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது
நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று தேக்க நிலை இருந்தாலும் அடைய
வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் தொழிலை
விரிவு படுத்த முடியும். வெளியூர்
பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத்
திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம்
கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு எப்பொழுதும் போல சிறப்பாக இருக்கும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சர்ப்ப கிரகமான ராகு
நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு,
11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பரச்
செலவுகளைக் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு
பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு
வாதங்கள் இருந்தாலும் அவர்களால் அனுகூலங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின்
தொடர்புகள் நம்பிக்கையளிப்பதாக அமையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த
லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களின்
உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத
இடமாற்றங்கள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் சக
நண்பர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய
வாய்ப்புகள் தேடி வரும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022
வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் ஜென்ம
ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்களை பெற
முடியும். எது எப்படி இருந்தாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி
சஞ்சரிப்பதால் பல்வேறு முன்னேற்றங்களை அடைய வாய்ப்பு உண்டு. எந்தவொரு
காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்-
மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச்
செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும்.
தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பயணங்களைத்
தவிர்ப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட
முடியும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். போட்டி பொறாமைகளை ஒட ஒட
விரட்டியடித்து எதிலும் ஜொலிப்பீர்கள். புதிய கிளைகளை நிறுவக்கூடிய அளவிற்கு
அபிவிருத்திகள் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள்
கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று
எதிர்பார்த்த வருமானத்தை பெறுவார்கள்.
பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு
ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில்
விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, கொண்டை கடலை மாலை
அணிவித்து, முல்லை மற்றும் மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி
வழிபடுவது, இல்லத்தில் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் குரு எந்திரம் வைத்து
வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள்,
நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள்
நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 கிழமை - வியாழன், ஞாயிறு திசை - வடகிழக்கு
கல் - புஷ்ப ராகம் நிறம் - மஞ்சள், சிவப்பு தெய்வம் - தட்சிணாமூர்த்தி
No comments:
Post a Comment