சிம்ம ராசி - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022
(20-11-2021 முதல் 13-04-2022)
கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகுபாலமுருகன்
ஆசிரியர் –பாலஜோதிடம் வார இதழ்
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இராஜ தந்திரமும் சிறந்த வாக்குவன்மையும்
கொண்ட சிம்ம ராசி நேயர்களே! சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு
நட்பு கிரகமான குரு திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை
(வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான
7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். அதுமட்டுமின்றி ஒரு ராசியில்
அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு ருண ரோக
ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பாகும். உங்களது உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும்
ஆற்றல் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் குறைவதுடன் குடும்பத்
தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும்.
உங்கள்
ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு ஜென்ம ராசி, 3, 11-ஆம் வீடுகளை பார்வை செய்வதால்
இருக்கும் இடத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும் யோகம், எடுக்கும் முயற்சிகளில்
வெற்றி பெறும் வாய்ப்பு, உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம், கணவன்- மனைவி இடையே
ஒற்றுமை சிறப்பாக இருக்கும் அமைப்பு, உங்களது நீண்ட கனவுகள் நிறைவேறி மன மகிழ்ச்சி
அடையும் யோகம், சகல விதத்திலும் லாபகரமான பலனை அடையும் வாய்ப்பு உண்டாகும்.
குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும்.
புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி,
பொறாமைகள் குறைந்து லாபங்கள் பெருகும். தொழிலை அபிவித்தி செய்யும் யோகம் ஏற்படும்.
உங்களது கடந்த கால உழைப்பிற்கான பலனை தற்போது முழுமையாக அடைவீர்கள். எதிர்பார்த்த
லாபம் அடைந்து அதன் மூலம் நீங்கள் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு
உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு
எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் யாவும் தடையின்றிக் கிட்டும்.
அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். ஜென்ம ராசிக்கு 4-ல் கேது, 10-ல் ராகு
சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டாலும் எந்த விதத்திலும் பாதிப்புகள்
உண்டாகாது.
தேகஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பு
ஏற்படுவதுடன் உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள்
விலகுவதுடன் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் விலகி மன நிம்மதி ஏற்படும்.
குடும்பத்தில் இருந்து வந்த வீண் மருத்துவ செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகளும்
ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
குடும்பம் பொருளாதாரம்
கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகி
பலமும் வலிமையும் கூடும். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றிக் கைகூடும். திருமண
வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும்
அழகான புத்திர பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு, மனை வாங்கும் யோகமும்
பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த
பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
குரு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள்
மிகச் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை
உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கே
சாதகமாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் எந்தவொரு
காரியத்திலும் சிறப்பான லாபம் கிடைக்கும். சேமிப்பு பெருகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் இருந்த
போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து, புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும்
தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அபிவிருத்தியை பெருக்க உதவுவார்கள். அரசு
வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றிக் கிடைக்கும். வெவ்வேறு
இடங்களில் கிளைகளை நிறுவும் நோக்கங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் கௌரவமான நிலைகளும் பெயர், புகழ்
உயரக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை தடையின்றிப்
பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின்
விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் தகுதிக்கேற்ற
வேலைவாய்ப்பு எதிர்பார்த்த இடத்தில் கிட்டும். வேலைப்பளு குறையும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பும்
உற்சாகமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலர் அழகான புத்திர
பாக்கியத்தையும் பெறுவர். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை போன்றவற்றை
வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களால் சாதகமான பலன்களை அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு
மாண்புமிகு பதவிகள் தேடிவரக் கூடிய
காலமாக இருக்கும். வருவாய் அதிகரிப்பதால் கட்சிப் பணிகளுக்காகவும் நிறைய செலவு
செய்வீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் மக்களின்
ஆதரவும் சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பும்
மரியாதையும் உயரும்.
விவசாயிகளுக்கு
விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால்
லாபமும் சிறப்பாக அமையும். பொருளாதார மிகுதியால் பூமி, மனை, வாங்குவது, புதிய நவீன
கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப் பலன் உண்டாகும். பங்காளிகளுக்கு இடையே
இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை பலப்படும். கடன்கள் குறையும்.
படிப்பு
கல்வியில் பல சாதனைகளைச் செய்து பள்ளி,
கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் ஆதரவுகள் தேடி வரும். பல பெரிய
மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். நல்ல நட்புகளால் கடந்த கால பிரச்சினைகளில்
இருந்து விடுபடுவீர்கள். கல்விக்காக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில்
நற்பலன்கள் கிடைக்கும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் 7-ல்
சஞ்சாரம் செய்வதும், சனி உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்வதும் மிகவும்
அற்புதமான அமைப்பு என்பதால் பல வகையில் மேன்மைகளை அடைவீர்கள். நினைத்த காரியங்கள்
யாவும் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி
நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக
இருக்கும் என்பதால் புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் நோக்கங்கள்
நிறைவேறும். புத்திர வழியில் மனநிறைவு தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில்
வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு
தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். கொடுத்த
வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சமுதாயத்தில் பல நற்காரியங்களுக்காக செலவு
செய்ய கூடிய வாய்ப்பு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும்
மேற்கொள்வீர்கள்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 7-ல்
சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள்
தடையின்றி கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். சனி 6-ல் சஞ்சரிப்பதால்
உடல் ஆரேக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில்
நல்லதொரு ஏற்றங்கள் ஏற்படும். தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற உங்கள்
எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால்
எளிதில் லாபங்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான
நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள்
கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கேது 4-ல்
இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022
வரை
குரு பகவான் தனது நட்சத்திரமான
பூரட்டாதியில் உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில்
மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல
வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் சேருவதுடன்
சேமிக்கவும் முடியும். கடனில்லாத கண்ணியமான வாழ்க்கை அமையும். புத்திர வழியில்
பூரிப்பும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். சனி 6-ல்
சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டுத்
தொடர்புகள் மூலம் லாபம் கிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின்
ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். உங்களுக்கு இருந்த
வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். கேது 4-ல் சஞ்சரிப்பதால் உடல்
நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தெய்வ
தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு
சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை
வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு
அர்ச்சனை செய்வது, தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கேதுவுக்கு
பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை
செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சர்பசாந்தி செய்வது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் - வெள்ளை, சிவப்பு கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் -
மாணிக்கம் திசை - கிழக்கு தெய்வம் - சிவன்
No comments:
Post a Comment