துலா ராசி - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022
(20-11-2021 முதல் 13-04-2022)
கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகுபாலமுருகன்
ஆசிரியர் –பாலஜோதிடம் வார இதழ்
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நீதி நேர்மையை நிலைநாட்ட
வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் துலா ராசியில் பிறந்த நேயர்களே! இது
நாள் வரை 4-ல் சஞ்சரித்த குரு திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை
(வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம்
வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பொருளாதரா
நிலை சிறப்பாக இருக்கும். தற்போது உள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து
முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வந்து
குடும்பத்தில் சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். புத்திர பாக்கியம்
வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். சொந்த பூமி, வண்டி,
வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான
பலன்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை விலகி லாபகரமான பலன்
ஏற்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும் 9, 11-ஆம்
வீடுகளுக்கும் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படும் வாய்ப்பு, வெளியூர்
தொடர்புகளால் அனுகூலம், எதிர்பாராத பொருளாதார மேன்மைகள் ஏற்படும்.
ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும்
கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு
அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதாலும் உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு
சஞ்சரிப்பதாலும் உங்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, பேச்சில்
நிதானத்துடன் இருந்து உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-
மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால்
விட்டு கொடுத்து செல்வது நல்லது.
செய்யும் தொழில் வியாபாரத்தில் இருந்த
மந்த நிலை விலகி முன்னேற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின்
ஆதரவு சற்று சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால்
லாபகரமான பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும்,
எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும்.
தேகஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக
இருக்கும் என்றாலும் வேலைபளு, தேவையற்ற அலைச்சல் இருக்கும். தேவையற்ற பயணங்களை
தவிர்ப்பது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த
மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். பெரியவர்களும் மகிழ்ச்சிகரமாக
இருப்பார்கள் மனதில் நிம்மதி உண்டாகும்.
குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும்
சுபிட்சமும் சிறப்பாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது
நல்லது. பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தடைப்பட்ட
திருமண சுப காரியங்கள் தடபுடலாக நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய
நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவு உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில்
உங்களுக்கு அனுகூலப்பலன்கள் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
உங்களுக்கு இருந்த நெருக்கடிகள்
குறைந்து பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில்
நடைபெறும். கொடுத்த கடன்களும் எந்த பிரச்சினைகளும் இன்றி வசூலாவதால் பணம் புரளும்.
பெரிய மனிதர்களின் நட்பும், வெளிவட்டாரத் தொடர்புகளும் அனுகூலப் பலன்களை
உண்டாக்கும். சேமிப்புகள் பெருகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளை கலந்து அலோசித்து செயல்படுவது நல்லது.
வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமராக இருக்கும் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
உத்தியோகத்தில் வரவேண்டிய ஊதிய உயர்வுகளும் பதவி உயர்வுகளும் தடையின்றி வந்து
சேரும். வேலைபளு இருந்தாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். உடன்
பணிபுரிபவர்களிடம் பேச்சில் கவனமாக இருந்தால் கடினமான வேலையை கூட சிறப்பாக செய்து
முடிக்க முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைப்பதால் குடும்பத்தோடு சேர
முடியும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்
என்றாலும் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன்
இருப்பது நல்லது. திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். சிலருக்கு அழகான
புத்திரபாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். நினைத்த
காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால்
கடன்கள் குறையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு
சமுதாயத்தில் உங்களின் பெயர் புகழ்
உயரும். மக்களுக்குச் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை
எடுப்பீர்கள். மக்களின் ஆதரவால் எல்லா வகையிலும் உயர்வுகளும் மேன்மைகளும்
உண்டாகும். பேச்சில் நிதானத்துடன் இருப்பதும் உடன் இருப்பவர்களிடம் சற்று கவனமாக
செயல்படுவதும் நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலை
உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளால்
வீண் செலவுகள், நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத காரணத்தால் தேவையற்ற அலைச்சல்
உண்டாகும்.
படிப்பு
கல்வியில் திறம்படச் செயல்பட்டு நல்ல
மதிப்பெண்களைப் பெற முடியும். நல்ல நட்புகளால் பலவகையில் அனுகூலங்களைப்
பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூரில்
மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில்
ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்வதால் மேன்மையான பலன்களை பெறுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பொருளாதார மேன்மையும் உண்டாகும். உங்கள்
திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும். மண வயதை
அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும்.
உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்து
கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் எண்ணம்
நிறைவேறும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த இடங்களுக்கு
இடமாற்றங்கள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு காரணமாக
உடல் அசதி ஏற்படும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குருபகவான் சர்ப்ப கிரகமான ராகு
நட்சத்திரத்தில் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக
இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கேது 2-ல், சனி 4-ல் சஞ்சரிப்பதால்
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள்
ஏற்படும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது.
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான
லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கக் கூடிய வலிமையும் வல்லமையும்
உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மேலதிகாரிகளிடம் பேசும் போது சற்று
பொறுமையுடன் பேசுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த
கடன்களும் வீடு தேடி வரும். எடுக்கும் பணிகளை திறம்படக் செயல்பட கூடிய ஆற்றல்
உண்டாகும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022
வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் 5-ஆம்
வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள்
அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.
புதிய வீடு, மனை, வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். சனி 4-ல், ராகு 8-ல்
இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயங்களிலும் கவனமுடன் இருப்பது நல்லது.
கேது 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். உற்றார்
உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனைத்து வகையிலும் அனுகூலங்களை பெற
முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை அடைந்து விட முடியும்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் வரவேண்டிய பணத்தொகைகள் தடையின்றிக்
கிடைக்கும். தேவையற்ற அலைச்சலால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிக்கும். இருப்பதை
அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு
சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து
சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும்,
வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த
உதவிகளை செய்வது நல்லது.
சர்பகிரகங்களான கேது 2-ல், ராகு 8-ல்
சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில்
விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன்
மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு
அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்
கூறுவது உத்தமம்.
No comments:
Post a Comment