Sunday, January 2, 2022

புத்தாண்டு பலன் - 2022 - கடகம்

 

புத்தாண்டு பலன் - 2022 - கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே, விடா முயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றிகளை குவிக்க கூடிய திறமைசாலிகளான உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வரும் 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேற்றங்களை அடைய முடியும். முதல் மூன்று மாதங்கள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறிது நெருக்கடி, தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலனை அடைய இடையூறு ஏற்படும். வேலைபளு காரணமாக உடல் அசதி உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் வரும் 13-04-2022 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். பொருளாதார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி தாராள தன வரவு ஏற்படும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் விலகி சுபிட்சம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று  குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி, மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம்  அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். 

சர்ப கிரகங்களான ராகு உங்கள் ராசிக்கு ஆண்டு தொடக்கத்தில் 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு ஏன்றாலும் வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசிக்கு 10-ல், கேது 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் சில நேரங்களில் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம் என்றாலும் குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வலமான பலனை அடைவீர்கள்.

ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று கவனத்துடன் செயல்படுவது மூலம் நற்பலனை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அஷ்டம ஸ்தானமான 8-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் இக்காலத்தில் உங்கள் அரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஏதாவது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் செலவுகள் ஏற்படாது. மனைவிக்கு சிறிது பாதிப்பு ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு நிம்மதி உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருந்தால் வீண் மனக்குழப்பங்களை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

இந்த ஆண்டு எல்லா வகையிலும் ஓரளவுக்கு ஏற்றத்தைத் தருவதாக அமையும். தொடக்கத்தில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் ஏப்ரல் மாதம் முதல் உங்கள் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் சிறு தடைகளுக்கு பின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம்  நற்பலன்களைப் பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த ஆதாயங்களைப் பெறுவீர்கள். முடிந்த வரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் ஏப்ரல் முதல் வலமான பலன்களை பெறுவீர்கள். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி ஏப்ரலுக்கு பிறகு நல்ல முன்னேற்றங்களை பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் நற்பலனைப் பெற முடியும். கூட்டாளிகளாலும், தொழிலாளர்களாலும் சிறுசிறு வீண் பிரச்சினைகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் சில சமயங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சாதிக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு

உடன் பழகுபவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது உத்தமம். ஏப்ரல் மாதம் முதல் பெயர், புகழ் உயர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். கட்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். அதிகப்படியாக உழைக்க வேண்டிய நிலைகள் ஏற்பட்டாலும் பட்ட பாட்டிற்கான முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்க கூடிய யோகம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தடைகளுக்குப்பின் கிடைக்கும். பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சற்று சிறப்பாக அமையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நன்றாக இருக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணவரவில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

படிப்பு

கல்வியில் சற்று மந்தநிலை நிலவினாலும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுக்க முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகளையும், பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 11-ல் ராகு மாத முற்பாதியில் 6-ல் சூரியன், மாத பிற்பாதியில் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 05-01-2022 இரவு 07.53 மணி முதல் 08-01-2022 அதிகாலை 00.15 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளை அடைவீர்கள். சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. நவீன பொருட்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 02-02-2022 காலை 06.45 மணி முதல் 04-02-2022 காலை 10.02 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை உண்டாகும். உயரதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபமும் எதிர்பார்த்த வாய்ப்புகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 01-03-2022 மாலை 04.31 மணி முதல் 03-03-2022 இரவு 08.03 மணி வரை மற்றும் 28-03-2022 இரவு 11.54 மணி முதல் 31-03-2022 அதிகாலை 04.32 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். வரும் 14-ஆம் தேதி முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சகல விதத்திலும் அனுகூலங்கள் நடக்கும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகமான பலன் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 25-04-2022 அதிகாலை 05.30 மணி முதல் 27-04-2022 பகல் 11.00 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன், 10, 11-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செய்ய முடியும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி லாபம் பெருகும். அரசாங்க வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 22-05-2022 பகல் 11.12 மணி முதல் 24-05-2022 மாலை 04.26 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். வீண் செலவுகள் குறையும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 18-06-2022 மாலை 06.42 மணி முதல் 20-06-2022 இரவு 10.35 மணி வரை.

ஜுலை.

ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சூரியன் 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். சிவனை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 16-07-2022 அதிகாலை 04.15 மணி முதல் 18-07-2022 காலை 06.34 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், 9-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு அனுகூலமான பலன்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். பிரதோஷகால விரதம் மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 12-08-2022 பகல் 02.50 மணி முதல் 14-08-2022 மாலை 04.15 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் நல்ல வாய்ப்பை பெற முடியும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 09-09-2022 அதிகாலை 00.40 மணி முதல் 11-09-2022 அதிகாலை 02.22 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வளமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 06-10-2022 காலை 08.27 மணி முதல் 08-10-2022 பகல் 11.23 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பண வரவுகளில் இடையூறுகள் ஏற்பட்டாலும் சுக்கிரன், புதன் இம்மாதத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது கஷ்டங்கள் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். ளுத்தியோகத்தில் வேளைபளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 02-11-2022 பகல் 02.15 மணி முதல் 04-11-2022 மாலை 06.20 மணி வரை மற்றும் 29-11-2022 இரவு 07.50 மணி முதல் 01-12-2022 இரவு 11.47 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் நற்பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் அடையும் வாய்ப்பு உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 27-12-2022 அதிகாலை 03.30 மணி முதல் 29-12-2022 அதிகாலை 05.55 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9             நிறம் - வெள்ளை, சிவப்பு            கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து                   திசை - வடகிழக்கு            தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: